Skip to main content

கனவாகவே இருந்திருந்தால்

"காலைலேயே உங்கிட்ட சொன்னேன். ரொம்ப லேட் பண்ணாம சாயந்தரம் சுருக்க கெளம்பிடு. எட்டு மணிக்கு மேல ஆச்சுன்னா டாக்டர் கிளீனிக்'ல இருந்து போய்டுவாங்கனு. பாரு இப்பவே மணி ஏழரை ஆயிடுச்சு. திருச்சில என்ன கொஞ்சநஞ்ச கூட்டமா இருக்கு. மொத்த ஜனமும் ரோட்டுல தான் இருக்கும் போல. எப்போ போனாலும் அவ்வளவு டிராபிக். இதுல எங்க எட்டு மணிக்குள்ள போறது" சூடான எண்ணெய்யில் கொட்டிய கடுகைப் போல மித்ரன் பொரிந்துத் தள்ளினான்.

"சரி..! சரி..! சும்மா கத்தாதீங்க.. உங்க பையன் கைய கால வச்சிக்கிட்டு சும்மா இருந்தாதானே. எந்நேரமும் வயித்துல எட்டி எட்டி உதைச்சிகிட்டே இருந்தா.. நான் என்னதான் பண்றதாம்மா.?" என்று அவனின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினாள் ராகவி.

அவள் கைபட்டதும், முதல் வெண்பனியில் குளித்த துளசியைப் போல அவனின் உடல் குளிர்ந்தது. கன்னங்கள் சிவந்தது. கோபமெல்லாம் கும்பகோணம் தாண்டி எங்கோ போனது.

"அதெப்படி கண்ணு, நான் எவளோ கோவத்துல இருந்தாலும் ஒரே சீண்டல்ல மொத்தத்தையும் கம்மங்கூழ் மாதிரி கரைச்சிப்புட்ற" மித்ரன் குழைந்தான்.

"அவள் பதிலேதும் சொல்லாமல் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்"

"மூச்சு விடுவதைக் கூட மறந்து மூர்ச்சையானான்" அவன்.

"நான்கு கண்களும் இமைப்பதை மறந்தன".

அவள் உதடுகளைக் குவித்து நெருங்கி வந்தாள். அவன் மயக்கத்தில் கண்களை மெள்ள மூடினான். இல்லை அதுவே மூடிக் கொண்டது. அவளின் மூச்சு அவனின் கன்னத்தில் பட்டு அவளுக்கே சுவாசிப்பதற்காய் திரும்பி வந்தது. இடைவெளி குறைந்து குறைந்து இறுதியில் இல்லாமல் போனது. அவன் காதினருகில் நெருங்கி, "இப்போ நேரம் ஆகலையா..! சீக்கிரம் வண்டிய எடுங்க.!" என்றாள்.

திடுக்கிட்டு கண்களை திறந்தான். அவனுடைய குவிந்த உதடுகள் ஏமார்ந்தன.

"ஏய்..! வாலு" என்று அவளை செல்லமாய் அடிக்க எழுந்தான். அவள் புறா போல தத்தி தத்தி ஓடினாள்.

ஹே ஹே...! ஓடாத..! வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு ஏன் இப்படி ஓடற..! அவள் நின்றாள்.

வண்டில ஏறு..! கிளினிக் போலாம்.

மித்ரன் சொன்னது போல ரோட்டில் இன்று அந்த அளவுக்குக் கூட்டமில்லை. சொல்லப் போனால் வெறிச்சோடிக் கிடந்தது. வெறிச்சோடியிருந்ததைப் பார்த்து அவனின் காதுகளில் நக்கலாக கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள்.எங்கிருந்தோ வந்த போக்குவரத்துக் காவலர் திடீரென்று சாலையில் தோன்றி வண்டியை நிறுத்தினார்.மித்ரனிடம் அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருந்ததனால் தைரியமாக வண்டியை ஓரம்கட்ட முயன்றான். அவன் தப்பிக்க முயல்கிறான் என தவறாக நினைத்தக் காவலர் பாய்ந்து பிடித்து வண்டியை இழுத்தார். பதற்றத்தில் மித்ரன் நிலை தடுமாறினான். வண்டி கட்டுப்பாட்டை இழந்தது. அவன் இடப் பக்கமாக விழ, ராகவி முன்புறமாக வயிறு தரையில் மோத விழுந்தாள்.

கைகளில் சிராய்ப்புடன் மித்ரன் சுதாரித்து எழுவதற்குள், இரத்த வெள்ளத்தில் ராகவி மயங்கிக் கிடந்தாள். சேலையும் சாலையும் ரத்தத்தில் நனைந்து நிறம் மாறியிருந்தது. காவலரையும் ராகவியையும் பொதுமக்கள் சூழ்ந்தனர். அனைவரையும் விலக்கிவிட்டு அவளை மடியில் ஏந்தினான் மித்ரன். உதடுகள் குவிந்த நிலையில் சலனமே இல்லாமல் கிடந்தது முகம். வீறிட்டுக் கதறி அழுதான் மித்ரன்.

ராகவி அவன் மார்பின் மீது கைகளைப் போட்டாள். இயல்பை மீறித் துடித்த இதயத் துடிப்பில் திடுக்கென்று விழித்தான் மித்ரன். முகம் முழுவதும் வியர்வைக் கோலமிட்டிருந்தது. சலனமே இல்லாமல் குவிந்த உதடுகளுடன் குழந்தைப் போல உறங்கிக் கொண்டிருந்தாள் ராகவி. லேசாய் மேடிட்டிருந்த அவளது வயிற்றைத் தடவி, தலையைக் கோதி நெற்றியில் நிம்மதியுடன் முத்தமிட்டான்.

எல்லாம் கனவு...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...