வலதுபுற மேல்படுக்கையில் படுத்திருக்கிறேன். பக்கவாட்டின் கீழ்ப்படுக்கையில் ஒரு வயதானப் பாட்டி படுத்திருக்கிறாள். வழக்கம்போல தன் தடதட இசையை ஒலிக்கவிட்டு இருளைக் கிழித்துச் செல்கிறது ரயில். உறக்கம் கருணைக் காட்டாததால் படுக்கையில் புரண்டிருந்தேன். அனைவரும் உறக்கத்தின் புதைக்குழிக்குள் விழுந்துவிட்டதால் வெகுநேரமாக பேச்சுச் சத்தம் இல்லாமல் இருந்த அவ்விடத்தில் இப்பொழுது ஒரு குரல் கேட்டது. அது அந்தப் பாட்டியினியுடையது.
உறக்கத்தில் உளறிக் கொண்டிருக்கிறாள்.
இல்லை...
"உரையாடிக் கொண்டிருக்கிறாள்"
கண்களைத் திறக்காமல் கையை நீட்டி பேசுகிறாள். வார்த்தைகள் ஒன்றும் தெளிவாக இல்லை. ஆனால் அந்த ஆக்ரோஷம் மட்டும் இருளில் தெரியும் மெழுகுவர்த்தியின் ஒற்றை ஒளிக்கீற்றின் தெளிவோடிருந்தது.
யாருடன் கடைசியாகப் பேசினாளோ; எப்போதோ தன் இஷ்டத்தைச் சொல்ல நினைத்து அதற்கான சந்தர்ப்பம் அமையாததால் நின்றுவிட்டதோ; இவளின் பேச்சை உதாசீனப்படுத்திருப்பார்களோ; யாருக்கோ சரியான பதிலடிக் கொடுக்க வேண்டும் என்று நெடுங்காலமாக மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறாளோ.?
இப்பொழுது உறக்கத்தில் இவள் உரையாடியிருக்கும் அந்த நபரும் இந்நேரம் தன் உறக்கத்தில் இவளோடு உளறிக் கொண்டிருப்பாரா இல்லை கூதக் காற்றின் சுகத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாரா.? இவளே கிழவியாக இருக்கிறாள், இவள் உரையாடியிருக்கும் அந்த நபர் முதலில் உயிருடன் இருப்பாரா.?
விட்டு விட்டு வரும் தூரலைப் போல மனதைத் தொட்டுத் தொட்டு சிந்தனைகள் நனைத்தன. உறக்கம் வராததால் சிந்தனைகள் ஆக்ரமித்தனவா.? சிந்தனைகள் இருந்ததால்தான் உறக்கம் விழிக் கூடவில்லையா.!
மழையைப் பிரசவிக்கக் காத்திருக்கும் கனமான காற்று வேகமாக அடித்தது. குளிர்வது போல் இருந்தது. இடதுகையைத் தலைக்குக் கொடுத்து, கால்களைக் குறுக்கி அதன் இடையில் வலதுகையை இறுக்கியழுத்தித் திரும்பிப் படுத்தேன். பாட்டியின் முகம் தெரிந்தது.
உரையாடல் முடிந்து விட்டது போலிருக்கிறது. அவள் உறங்கிவிட்டாள்.
மழை வெளுத்து வாங்குகிறது.
மனதில் தேங்கியிருந்த சிந்தனைகள் மழைத்துளிகளின் சீண்டுதல்களால் சிதறிச் சிதறித் தேங்க முற்பட்டன.
ஆனால் அதற்குள் நான் உறங்கிவிட்டேன்.
கார்த்திக் பிரகாசம்...
உறக்கத்தில் உளறிக் கொண்டிருக்கிறாள்.
இல்லை...
"உரையாடிக் கொண்டிருக்கிறாள்"
கண்களைத் திறக்காமல் கையை நீட்டி பேசுகிறாள். வார்த்தைகள் ஒன்றும் தெளிவாக இல்லை. ஆனால் அந்த ஆக்ரோஷம் மட்டும் இருளில் தெரியும் மெழுகுவர்த்தியின் ஒற்றை ஒளிக்கீற்றின் தெளிவோடிருந்தது.
யாருடன் கடைசியாகப் பேசினாளோ; எப்போதோ தன் இஷ்டத்தைச் சொல்ல நினைத்து அதற்கான சந்தர்ப்பம் அமையாததால் நின்றுவிட்டதோ; இவளின் பேச்சை உதாசீனப்படுத்திருப்பார்களோ; யாருக்கோ சரியான பதிலடிக் கொடுக்க வேண்டும் என்று நெடுங்காலமாக மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறாளோ.?
இப்பொழுது உறக்கத்தில் இவள் உரையாடியிருக்கும் அந்த நபரும் இந்நேரம் தன் உறக்கத்தில் இவளோடு உளறிக் கொண்டிருப்பாரா இல்லை கூதக் காற்றின் சுகத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாரா.? இவளே கிழவியாக இருக்கிறாள், இவள் உரையாடியிருக்கும் அந்த நபர் முதலில் உயிருடன் இருப்பாரா.?
விட்டு விட்டு வரும் தூரலைப் போல மனதைத் தொட்டுத் தொட்டு சிந்தனைகள் நனைத்தன. உறக்கம் வராததால் சிந்தனைகள் ஆக்ரமித்தனவா.? சிந்தனைகள் இருந்ததால்தான் உறக்கம் விழிக் கூடவில்லையா.!
மழையைப் பிரசவிக்கக் காத்திருக்கும் கனமான காற்று வேகமாக அடித்தது. குளிர்வது போல் இருந்தது. இடதுகையைத் தலைக்குக் கொடுத்து, கால்களைக் குறுக்கி அதன் இடையில் வலதுகையை இறுக்கியழுத்தித் திரும்பிப் படுத்தேன். பாட்டியின் முகம் தெரிந்தது.
உரையாடல் முடிந்து விட்டது போலிருக்கிறது. அவள் உறங்கிவிட்டாள்.
மழை வெளுத்து வாங்குகிறது.
மனதில் தேங்கியிருந்த சிந்தனைகள் மழைத்துளிகளின் சீண்டுதல்களால் சிதறிச் சிதறித் தேங்க முற்பட்டன.
ஆனால் அதற்குள் நான் உறங்கிவிட்டேன்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment