Skip to main content

மற்றுமொரு முறை

அவள் பிறந்து 
முப்பது வருடங்களாகிவிட்டன
இன்றைய திகதிக்கு

இறந்தபின் வரும் 
மூன்றாவது பிறந்த நாள் 

வாழ்த்து மடலாகத் தொடங்கி  
நினைவஞ்சலியாக 
மாறி அழுகிறது
அவளுக்கான
பிறந்தநாள் கவிதை 

வாடிய பின்னும் மலரும் 
பிரியமானவளின் பிறந்தநாள்
மலர்க் கொத்துக்குள் மறைத்து வைத்து
அவளின் மரணச் செய்தியை
கரங்களில் திணிக்கிறது
மற்றுமொரு முறை

கார்த்திக் பிரகாசம்...

Comments