நீ
கடந்து போகச் சொன்ன
பாதையில் செல்கிறேன்
சொன்னபடியே
உன்னை நினைவூட்டும்படியாக
ஒன்றுமில்லை
நானும் கூட மறக்கவே
முயல்கிறேன்
ஆனால் பார்
பிடித்த சட்டையில் நேற்று
தேநீர் கொட்டிவிட்டது
கறையில் திட்டு திட்டாய்
உன் பிரிவின் சாயம்
கடைசி வார்த்தை எழுதிடாமல்
மசி தீர்ந்திட்ட பேனா
விரலிடுக்கில் நின் விரல்
விட்டுச் சென்ற பிசுபிசுப்பு ஈரத்தோடு
சாய்ந்தாடுகிறது
உன் பெயர் கொண்ட நட்புகள்
பாவம்
அவர்களறியாமல்
உன்னைச் சுமந்து வருகிறார்கள்
என்னிடம்
கழுவிடும் போது பாத்திரம் கீறிக்
கசிகிறது இளஞ்சிவப்பில்
ஒரு சிறு துளி
நம்மிருவருக்கும் ஒரே வகை
இரத்தம்
உன்னை நினைவூட்டும் என்பதால்
பாடல்கள் கேட்பதில்லை இப்போதெல்லாம்
இருப்பினும்
தென்றலையும் மழையையும்
என்ன செய்வதென்று தெரியவில்லை
நாம் எடுத்த நிழற்படங்களை
அழித்துவிட்டேன்
தன் வண்ணத்தை ஒட்டிவிட்டுப் பறக்கும்
வண்ணத்துப்பூச்சியைத்
தடுக்க முடியவில்லை
பஞ்சாரத்திற்குள்ளேயே இருந்தாலும்
பாம்பின் கண்களைக் கொண்டு
நீளும் இரவில்
நிம்மதியாய் உறங்கிடுமா
கோழிக் குஞ்சு
சிதறிப் போன மனம்
சிறுசிறு இழப்புக்கெல்லாம்
உந்தன் இழப்பையே
பிரதிபலிக்கிறது
பூதாகரமாக
உறக்கத்தை உனக்கும்
கனவுகளை நமக்கும்
பலி கொடுத்துவிட்டு
நீ சொன்ன பாதையில்
மெள்ள நடக்கிறேன்
உன்னை நினைவூட்டும்படியாக
ஒன்றுமில்லை
உருக்குலைந்து போன
என்னைத் தவிர
ராகவி...
பாதையில் செல்கிறேன்
சொன்னபடியே
உன்னை நினைவூட்டும்படியாக
ஒன்றுமில்லை
நானும் கூட மறக்கவே
முயல்கிறேன்
ஆனால் பார்
பிடித்த சட்டையில் நேற்று
தேநீர் கொட்டிவிட்டது
கறையில் திட்டு திட்டாய்
உன் பிரிவின் சாயம்
கடைசி வார்த்தை எழுதிடாமல்
மசி தீர்ந்திட்ட பேனா
விரலிடுக்கில் நின் விரல்
விட்டுச் சென்ற பிசுபிசுப்பு ஈரத்தோடு
சாய்ந்தாடுகிறது
உன் பெயர் கொண்ட நட்புகள்
பாவம்
அவர்களறியாமல்
உன்னைச் சுமந்து வருகிறார்கள்
என்னிடம்
கழுவிடும் போது பாத்திரம் கீறிக்
கசிகிறது இளஞ்சிவப்பில்
ஒரு சிறு துளி
நம்மிருவருக்கும் ஒரே வகை
இரத்தம்
உன்னை நினைவூட்டும் என்பதால்
பாடல்கள் கேட்பதில்லை இப்போதெல்லாம்
இருப்பினும்
தென்றலையும் மழையையும்
என்ன செய்வதென்று தெரியவில்லை
நாம் எடுத்த நிழற்படங்களை
அழித்துவிட்டேன்
தன் வண்ணத்தை ஒட்டிவிட்டுப் பறக்கும்
வண்ணத்துப்பூச்சியைத்
தடுக்க முடியவில்லை
பஞ்சாரத்திற்குள்ளேயே இருந்தாலும்
பாம்பின் கண்களைக் கொண்டு
நீளும் இரவில்
நிம்மதியாய் உறங்கிடுமா
கோழிக் குஞ்சு
சிதறிப் போன மனம்
சிறுசிறு இழப்புக்கெல்லாம்
உந்தன் இழப்பையே
பிரதிபலிக்கிறது
பூதாகரமாக
உறக்கத்தை உனக்கும்
கனவுகளை நமக்கும்
பலி கொடுத்துவிட்டு
நீ சொன்ன பாதையில்
மெள்ள நடக்கிறேன்
உன்னை நினைவூட்டும்படியாக
ஒன்றுமில்லை
உருக்குலைந்து போன
என்னைத் தவிர
ராகவி...
Comments
Post a Comment