Skip to main content

Posts

Showing posts from March, 2016
விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் புரிந்தும் புரியாத சாலைகளில் தொலைத்து விட்டுப் போன தன் அம்மாவை உடைந்த ஒற்றைக் காலில் தேடிக் கொண்டிருந்தது அந்த நாய்க்குட்டி...!!! கார்த்திக் பிரகாசம்...
"முயற்சி" நம் கையில் "முடிவு" ஆண்டவன் கையில்...!!! கார்த்திக் பிரகாசம்...
இவ்வுலகில் காரணமில்லாத கவலையென்று எதுவுமில்லை பயனில்லாத படைப்பென்று ஒன்றுமில்லை...!!! மனதைத் தோண்டினால் காரணம் தெரியும் மனதை விட்டு தேடினால் பயன் புரியும்...!!! கார்த்திக் பிரகாசம்...

பகத்சிங்...

தன் வாழ்ந்த கால் நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில், இந்திய சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர வேறெந்த சிறு எண்ணத்தையும் கொண்டிருக்காத தன்னலமற்ற தியாகி.. வீரத்தையும் தியாகத்தையும் எப்பொழுதுமே விரல் நுனியில் வைத்திருந்த மாபெரும் போராளி...23வது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காகத் தூக்கு மேடையில் புன்னகையுடன் தன் இன்னுயிரை ஈன்ற வீரன்... என்.சொக்கன் அவர்கள், பகத் சிங்கின் பிறப்பு முதல் இறுதி வரை, அவருடைய ஆயுதப் போரட்டத்தின் மீதான நம்பிக்கை, அதற்காக அவர் மேற்கொண்ட கிளர்ச்சிகள் என அவரைப் பற்றிய ஒவ்வொரு வரியையும் உணர்ச்சிப் பொங்க எழுதி இருக்கிறார்.. அந்த உணர்ச்சிகரமான வரிகள், புத்தகம் படிப்பவர்களை ஒரே வாசிப்பில் படித்து முடிக்கத் தூண்டுகின்றன.. அந்தப் போராளியை பற்றியும், அவருடைய துணிச்சலான போராட்டங்களையும், வீரம் தூண்டும் எழுத்துக்களைப் பற்றியும் படிக்கும் போது மெய்ச் சிலிர்க்கின்றன.. மேலும் அவர்க்குண்டான மரியாதையை நாம் போதிய அளவில் செய்யவில்லையோ என்ற அச்சத்தையும், கேள்வியையும் மனதில் ஏற்படுத்துகின்றன... மொத்தத்தில் ஒரு மகத்தான போராளியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தறிந்து கொண்ட மகிழ்ச்ச...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் பலத்த போட்டி மனப்பான்மையுடன் தெருவோரத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தினர்... விடுமுறை என்றாலே அந்த தெருவின் ஓரத்தில் சிறுவர்கள் அனைவரும் கூடி விடுவர்.. அவர்கள் பெரும்பாலும் விளையாட தேர்ந்தெடுப்பது என்னவோ கிரிக்கெட்டைத் தான்.. 35 டிக்ரியோ அல்லது 45 டிக்ரியோ வெயிலின் தாக்கத்தைப் பார்த்து அவர்கள் கலங்கியதே இல்லை. "வெயில் பாட்டுக்கு அடிக்கட்டும் நாம பாட்டுக்கு விளையாடுவோம்" என்றளவில் மட்டும் தான் அவர்கள் வெயிலுக்குக் காட்டும் பயமும் மரியாதையும்... இதுப் போன்ற விடுமுறை நாட்களில் மணி அவர்களை ஒருபோதும் கவனிக்க தவறியதில்லை.. அவர்களில் யாரும் ஏழாம் வகுப்பு தாண்டியிருக்க வாய்ப்பில்லை.. ஆனால் விளையாட்டில் முழுமையான ஈடுபாடு இருப்பது நன்றாகத் தெரியும். அவர்களில் அனைவருமே பேட்ஸ்மேன்.. அனைவருமே பௌலர். சர்வதேச போட்டியின் விதிமுறைகளைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை.. ஒவ்வொரு முறை விளையாடும் போது சூழ்நிலைகளைப் பொருத்து அவர்களின் விதிமுறைகள் மாறிக் கொண்டே இருக்கும்.. சுற்றுவட்டாரத்தில் கார் இருந்தால்,...

முரண்...

இந்தச் சமூகம் நாம் "சிறுவன்" என்று நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் "பெரியவனாக்கி"ப் பொறுப்புகளைச் சுமத்தும்... "பெரியவன்" என்று எண்ணத் தொடங்கும் வேளையில் "சிறுவனாக்கி"ச் சிறுமைப்படுத்தும்... கார்த்திக் பிரகாசம்...
உன் முதல்வரி என் முகவரியையே புரட்டிப் போட்டுவிட்டது...!!! கார்த்திக் பிரகாசம்...
அப்பாவுக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை அம்மாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை அந்தப் பிஞ்சுக்கு அப்பாவைக் கண்டால் பயம் அம்மாவைப் பார்த்தாள் பாவம் பயத்தில் தூங்குவதாய் நடித்து பாவம் உண்ணாமலேயே உறங்கிப் போனது அந்தக் குழந்தை...!!! கார்த்திக் பிரகாசம்...
அப்பா திட்டினால் அம்மா ஆறுதல்...!!! அம்மா திட்டினால் அம்மாவே தான் ஆறுதல்...!!! கார்த்திக் பிரகாசம்...

#அம்மா...!!!

விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து கிளம்பும் போது., நிறம் தான் இல்லையே துடைத்தெறிந்து விடலாம் "தெரியவாப் போகிறது" என்று நினைத்திருப்பாள் போலிருக்கிறது..!!! ஆனால் கன்னங்களில் கனமாய் பதிந்திருந்த கண்ணீரின் தடயங்கள் காட்டி கொடுத்துவிட்டன அவள் அழுதிருக்கிறாள் என்று...!!! கார்த்திக் பிரகாசம்...
உலகம் மறந்த உறக்கத்தின் முடிவில் ஓர் உண்மை ஒளிர்ந்தது...!!! மரணமும் சுகமே...!!! கார்த்திக் பிரகாசம்...

என் பார்வையில்...!!!

"என் பார்வையில்" வலைத்தளம் பத்தாயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது... இதைச் சாத்தியப்படுத்தி, சந்தோசப்படுத்திய முகமறிந்த நண்பர்களுக்கும், முகமறியா அன்பர்களுக்கும் நன்றி... எதுவும் எழுதத் தெரியாமல் ஆனால் எதாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் முத்தாய்ப்பாய் "என் பார்வையில்" பிறந்தது.. பத்தாயிரம் பார்வைகளைக் கடந்துவிட்டது.. ஆனால் நான் இன்னும் எழுதக் கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன்.. நீங்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை... உங்களுடைய விமர்சனங்கள் தான் இந்த வலைத் தோட்டத்தை வேலியாகக் காத்து நிற்கிறது. உங்களுடைய வாழ்த்துக்கள் தான் இந்தத் தோட்டத்தில் தினந்தோறும் பூக்கள் பூத்துக் குலுங்க உற்சாகம் செய்து கொண்டிருக்கிறது.. உங்களுடைய விமர்சனங்களையும், வாழ்த்துக்களையும் தொடர்ந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்... கார்த்திக் பிரகாசம்...
சாதியும் இலவசமும் இன்றைய பொழுது வாழ வைப்பது போன்ற மாய தோரணையில் நம் நாளைய நாளை சாகடித்துக் கொண்டிருக்கின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...
காகிதத்தில் உன் பெயரை திக்காமல் உச்சரிக்கும் பேனாக்களையும் பேணிக் காக்கிறேன்...!!! கார்த்திக் பிரகாசம்...
பிரியா உறுதியாகச் சொல்லிவிட்டாள். லட்சக் கணக்கில் வரதட்சணை தந்தால் தான் நடக்கும் என்றால் எனக்கு திருமணமே வேண்டாமென்று...!! அவள் அதைச் சொன்னதில் இருந்தே கேசவனுக்கும், சாந்திக்கும் தூக்கமே இல்லாமல் போய்விட்டது.. கண்ணை மூடினால் பிரியாவின் திருமணத்தைப் பற்றிய நினைப்பு தான் இருவருக்கும்...! ஒரேயொரு மகளைப் பெற்று, அவளை ஆசை ஆசையாக வளர்த்து, அவளின் திருமணத்திற்காக லட்சக் கணக்கில் சொத்துகளையும் சேர்த்து வைத்திருந்தார் கேசவன்.. ஒரே மகள் என்பதால் பிரியாவை பாசமாக பார்த்துக் கொண்டார்கள். அவளின் விருப்பத்திற்கேற்பவே வளர்த்தனர். பிரியா சுயமாக முடிவு எடுக்கம்படியே வளர்ந்தாள். ஆனால் திருமண பேச்சை எடுக்கும் போது, இப்படி ஒரு முடிவை முடிவாய்ச் சொல்லுவாள் என்று அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.. அதுவும் பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை, இருக்கும் போது இவள் ஏன் இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறாள் என்று அவர்களுக்கு புரியவில்லை. அன்றும் தரகர் வந்திருந்தார்.. இரண்டு மூன்று வரன்களையும் காண்பித்தார்.. "..எல்லாமே பெரிய இடம்.. வரதட்சணை மட்டும் பார்த்து செய்தாள் போதும்... உங்க பொண்ண கண்ணுக்கு...
மாசற்ற தங்கமும் காசற்ற பந்தமும் வெகுநாள் நீடிப்பதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

சாதி என்னும் வியாதி...

சாதியை மறுத்து ஆசைப்பட்டவனைக் கரம் பிடித்ததற்காக, நடு ரோட்டில், ஜன நடமாட்டம் நிறைந்த பகுதியில், அதுவும் பட்டப் பகலில் ஒரு கும்பல் கொலை செய்ய துணிந்து, இருவரையும் சரமாரியாக வெட்டித் தள்ளியுள்ளது. அதில் அந்த இளைஞன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டான்.. அந்தப் பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.. சந்தோசமாக வாழ, கரம் பிடித்து இணைந்தவர்களின் கனவுகளை நடு ரோட்டில் கொன்று, தன் கோரப் பசிக்கு இரையாக்கிக் கொண்டுள்ளது சாதி... காதலிப்பதும், காதலித்தவனையே திருமணம் செய்து கொள்வதும் அவ்வளவுப் பெரிய குற்றமா...? பெற்ற பிள்ளைகளை விட, அவர்களின் விருப்பத்தை விட சாதி தான் முக்கியமா...? சாதியினால் வருவது மட்டும் தான் கௌரவமா...? வேறொரு சாதியில் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு பரிசு, நடுரோட்டில் அவர்களை கொலை செய்வதா...? பிள்ளைகளின் உயிரை விட சாதி உணர்வு பெரிதா...? கொலை செய்வதே இழிவான, மனிதத் தன்மையற்ற செயல். ஆனால் அந்தக் கொலைக்குப் பெயர் "கௌரவக் கொலை" . சாதியைக் கொண்டு அவர்கள் ஆயிரம் விஷயங்களை சாதித்திருக்குலாம். ஆனால் இழந்த அந்த இளைஞனின் உயிரை மீண்டும் பெ...
பள்ளிக் கூட மரப் பெஞ்சில் மடத் தனமாய் கிறுக்கி வைத்த அவளது பெயர் இன்னும் அழியாமல் அவனது நெஞ்சில்...!!! கார்த்திக் பிரகாசம்...

சோளிங்கர்...

சோளிங்கர் நரசிம்மர் கோவிலைப் பற்றி நண்பர்கள் யார் மூலமாகவோ கேள்விப்பட்டது. கேள்விப்பட்ட நாள் முதலே அங்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் மனதுக்குள் உயிர்ப்புடனே இருந்தது. நான்கு மாதங்களுக்குப் பின், நேற்று தான் செல்லும் வாய்ப்பு வாய்த்தது. நண்பர்கள் சிலரும் உடன்பட திட்டமும் பயணமும் இனிதே நிறைவேறியது. அரக்கோணத்தில் இருந்து 30 கி.மீ. அரசுப் பேருந்தில் 10 ரூபாய். தனியார் பேருந்தில் 13 ரூபாய். நாங்கள் சென்ற சமயம் ஒரேயொரு தனியார் பேருந்து மட்டும் தான் நின்றுக் கொண்டிருந்தது. அடுத்த பேருந்து சோளிங்கருக்கு எப்பொழுது என்று நடத்துனரிடம் கேட்டவுடன் அவர், "அடுத்து பேருந்து இது தான்.. கிளம்ப இன்னும் அரைமணி நேரம் ஆகும்" என்று கூறினார்.. என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மொத்தம் எத்தனை... எட்டா..?" என்று கேட்டுவிட்டு டிக்கெட்டைக் கிழித்துக் கையில் கொடுத்துவிட்டார்... வேறு வழியில்லாமல் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.. வெயில் தன் வேலையை செம்மையாக செய்து கொண்டிருந்தது. ஏறி உட்கார்ந்த பத்தாவது நிமிடத்தில் அரசுப் பேருந்து ஒன்று கிளம்பியது.. "அடப்பாவி .." என...
பழைய அலுவலகத்தில் பணிபுரிந்த மிக நெருங்கிய நண்பன் ஒருவன் மணிக்கு போன் செய்திருந்தான். அவனிடம் பேசி வெகு நாட்கள் ஆயிருந்ததால் மிகுந்த உற்சாகத்துடன் போனை எடுத்தான் மணி... பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின், அந்த நண்பன் "தி.நகர் பேருந்து நிலையம் வரை இப்பொழுது போக முடியுமா" என்று கேட்டான். மணி தி.நகரில் தான் வசிக்கிறான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். மணியும் ஏன்..? எதற்கு.? என்று கேட்காமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். சாப்பிட்டு போகட்டுமா என்று கேட்டான். அவனும்  பொறுமையாகப் போங்கள் .. என் நண்பன் ஒருவன் வருவான்.. அவன் ஒரு புத்தகம் தருவான்.. அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து பின்பு வாங்கிக் கொள்கிறேன் என்றான்..  அவன் எப்பொழுதுமே மணியை "கள்" போட்டுத் தான் பேசுவான்... சரியென்று.. போனைத் துண்டித்துவிட்டு, சாப்பிட்டு எழுந்தான் மணி.. தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான். நடப்பது போல் ஓடினான் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.. தி.நகர் பேருந்து நிலையத்தை அடையும் போது, அதிர்ச்சி கலந்த ஆனந்த ஆச்சரியம்... மணியின் நண்பனே அந்த இடத்தில் நி...
தெரியாமல் கேட்டு விட்டேன் அந்த பாட்டை...!!! இப்பொழுது தெரிந்தே மனசு பாடாய் படுகிறது... கார்த்திக் பிரகாசம்...
டீக்கடையில் இரண்டு டீ சொல்லிவிட்டு வெளியில் வந்து நின்றான் மணி...மணியுடன் அவனுடைய நண்பன் ரகுவும் இருந்தான்.. வீட்டில் இருந்து கிளம்பும் போது போன் பேச ஆரம்பித்தவன், பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை வரும் "47" "பெசன்ட் நகர்" பேருந்து மூன்று போய்விட்டது இன்னும் பேசிக் கொண்டிருந்தான்... அலுவலகத்தில், கூட பணிபுரியும் பெண் என்று, அவன் பேசுவதில் இருந்து ஊகித்து அறிந்தான் மணி.. மணிக்கு, அவர்கள் ஏதோ ஒரு விஷயத்திற்காகப் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பது போலத் தோன்றியது... ஆனால் கண்டுக் கொள்ளாதது போல், டீக்குடித்து விட்டு அருகில் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான்... நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகு"சரி விடு.. நானே விட்டுத் தரேன்.. ஏன்னா விட்டுக் கொடுக்குறவங்க கெட்டுப் போக மாட்டாங்க..." ரகு போனில் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்... அவள் அடுத்து என்ன சொன்னாள் என்று தெரியவில்லை ரகு சிரிப்பதை நிறுத்திவிட்டு அமைதியானான்... அவள் அப்படி என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருந்தாலும், அவனாகச் சொல்வதற்காகக் காத்து கொண்டிருந்தான் மணி... ஆனால், ...

நீயும் நானும்...!!!

கடலைத் தாண்டி காணாமல் போவோம்... விண்ணை வீழ்த்தி வேறொரு உலகில் விழுவோம்... இறைவனடி சேர்ந்த இறந்தகாலம் நம் புகழ் பாடட்டும்... நிகழ்காலம் முயன்று எதிர்காலம் வெல்வோம் ... கார்த்திக் பிரகாசம்...
கழுத்தில் மஞ்சள் தடங்களைப் பதித்திருந்த தாலி...! நெற்றியில் குவிந்திருந்த குங்குமம்...! கால் விரல்களின் இடுக்குகளில் நெளிந்து கொண்டிருந்த மெட்டி...! தொப்பை என கிண்டல் செய்த இடத்தில், கருவொன்று கர்வமாய்...!!! அவள் கர்ப்பமாய்...!!! அவள் அழவில்லை ஆனால் கண்களில் கண்ணீர்... அவன் சிரிக்கவில்லை ஆனால் உதடுகளில் புன்னகை... எத்தனை நாள் ஆகிவிட்டது இவளை சந்தித்து... குழந்தைப் போல் இருந்தவள் இன்னும் சில மாதங்களில் குழந்தைப் பெற போகிறாள்... ஆச்சரியத்தில் இருந்து மீளாமல் இருந்தான் மணி..  இவ்வளவு அவசர அவசரமாக ஓடி, யாரை சந்திக்கப் போகிறது..? எதைச் சாதிக்கப் போகிறது..? என்று காலத்தின் மீது கோபமும் கொண்டான்... வெகு நாட்களுக்குப் பின் விழுந்த முதல் மழைத் துளி, மடிந்து கிடக்கும் மண்ணின் மணத்தை முழுவதுமாகத் தூண்டுவதைப் போல, நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவளை சந்தித்த வேளையில், மணியின் மனதில் கேட்பாரற்று பூட்டிக் கிடந்த நினைவு புதையல்கள் மீண்டுமொரு முறை கிளர்ந்து எழுந்தன... பள்ளி, கல்லூரி, வேலை என்று தன் பழங்கால நினைவுகளில் எங்கு கால் வைத்தாலும் அவளின் கால் தடமும் கூடவே வரும்... அதை பல சமயங்களில் அவ...
நிறைந்து நிரப்பி இறைந்து காரி உமிழ்ந்து குப்பை சேர்க்க வந்து நானும் ஒரு குப்பையானேன்.... இப்படிக்கு குப்பைத் தொட்டி... கார்த்திக் பிரகாசம்...
பூப்பெய்திய தருணத்தில்  பெண்மையின் புரிதல் பெரிதாக இல்லை... காதல் கொண்ட காலத்தில் காமத்தின் தேடுதல் தெளிவாக வில்லை... விளைவு குழந்தைப் பருவம் முடியும்  முன்னே கையில் இரண்டு  குழந்தைகள்..                                                                                           கார்த்திக் பிரகாசம்...