Skip to main content
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் பலத்த போட்டி மனப்பான்மையுடன் தெருவோரத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தினர்...

விடுமுறை என்றாலே அந்த தெருவின் ஓரத்தில் சிறுவர்கள் அனைவரும் கூடி விடுவர்.. அவர்கள் பெரும்பாலும் விளையாட தேர்ந்தெடுப்பது என்னவோ கிரிக்கெட்டைத் தான்.. 35 டிக்ரியோ அல்லது 45 டிக்ரியோ வெயிலின் தாக்கத்தைப் பார்த்து அவர்கள் கலங்கியதே இல்லை. "வெயில் பாட்டுக்கு அடிக்கட்டும் நாம பாட்டுக்கு விளையாடுவோம்" என்றளவில் மட்டும் தான் அவர்கள் வெயிலுக்குக் காட்டும் பயமும் மரியாதையும்...

இதுப் போன்ற விடுமுறை நாட்களில் மணி அவர்களை ஒருபோதும் கவனிக்க தவறியதில்லை..

அவர்களில் யாரும் ஏழாம் வகுப்பு தாண்டியிருக்க வாய்ப்பில்லை.. ஆனால் விளையாட்டில் முழுமையான ஈடுபாடு இருப்பது நன்றாகத் தெரியும். அவர்களில் அனைவருமே பேட்ஸ்மேன்.. அனைவருமே பௌலர். சர்வதேச போட்டியின் விதிமுறைகளைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை.. ஒவ்வொரு முறை விளையாடும் போது சூழ்நிலைகளைப் பொருத்து அவர்களின் விதிமுறைகள் மாறிக் கொண்டே இருக்கும்..

சுற்றுவட்டாரத்தில் கார் இருந்தால், காரில் பட்டால் அவுட். தொடர்ந்து மூன்று முறை பேட்ஸ்மேன் பந்தை அடிக்காவிட்டால் அவுட். ஒன் பிட்ச் கேட்ச் அவுட். பேட்ஸ்மேன் டீம் ஆள் தான் கீப்பராக நிற்க வேண்டும். காமன் மேன்க்கு ஓவர் கிடையாது. காமன் மேன் இடது கையில் தான் பேட் பிடிக்க வேண்டும். வாகனம் எதாவது வந்தால் பிரேக்..." என அவர்களுக்கென்று விதிமுறைகள். பந்து தொலைந்துவிட்டால் மட்டும் அன்றைய போட்டி அதோடு கைவிடப்படும்.

தெருவில் நடந்துச் செல்பவர்களும், மொட்டை மாடியில் துணி உலர வைக்க வருபவர்களும், காய்கறி வாங்க தெருவிற்கு வருபவர்களும் தான் அவர்களின் பார்வையாளர்கள்..

பலநேரங்களில் அவர்களை பார்க்கும் போது, சூரியன் மேலே இருந்து அவர்களின் எனெர்ஜியை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் கொண்டிருப்பது போல மணிக்குத் தோன்றும்.. ஆனால் அவர்களோ வியர்வையை துடைத்தெறிந்துவிட்டு அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள்..

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...