Skip to main content
டீக்கடையில் இரண்டு டீ சொல்லிவிட்டு வெளியில் வந்து நின்றான் மணி...மணியுடன் அவனுடைய நண்பன் ரகுவும் இருந்தான்.. வீட்டில் இருந்து கிளம்பும் போது போன் பேச ஆரம்பித்தவன், பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை வரும் "47" "பெசன்ட் நகர்" பேருந்து மூன்று போய்விட்டது இன்னும் பேசிக் கொண்டிருந்தான்...

அலுவலகத்தில், கூட பணிபுரியும் பெண் என்று, அவன் பேசுவதில் இருந்து ஊகித்து அறிந்தான் மணி..

மணிக்கு, அவர்கள் ஏதோ ஒரு விஷயத்திற்காகப் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பது போலத் தோன்றியது... ஆனால் கண்டுக் கொள்ளாதது போல், டீக்குடித்து விட்டு அருகில் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான்...

நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகு"சரி விடு.. நானே விட்டுத் தரேன்.. ஏன்னா விட்டுக் கொடுக்குறவங்க கெட்டுப் போக மாட்டாங்க..." ரகு போனில் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்...

அவள் அடுத்து என்ன சொன்னாள் என்று தெரியவில்லை ரகு சிரிப்பதை நிறுத்திவிட்டு அமைதியானான்...

அவள் அப்படி என்ன சொன்னாள் என்று தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருந்தாலும், அவனாகச் சொல்வதற்காகக் காத்து கொண்டிருந்தான் மணி...

ஆனால், அவன் சொல்வதாகத் தெரியவில்லை.. ஆதலால் மணியே கேட்டான்... என்ன டா ஆச்சு.. அவ என்ன சொன்னா.. அமைதி ஆயிட்ட..?

இவன் " விட்டுக் கொடுக்குறவங்க கெட்டுப் போகமாட்டாங்க" என்று சொன்னதற்கு அந்தப் பெண் சொல்லி இருக்கிறாள்..

"பசங்க நீங்க விட்டுக் கொடுத்த கெட்டுப் போகமாட்டிங்க .. ஆனா பொண்ணுங்க நாங்க கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் கண்டிப்பா கெட்டுப் போய்டுவோம்.."

மணிக்கு இதைக் கேட்டதும் சுளீர் என்றிருந்தது... பேசாமல் கேட்காமலே இருந்திருக்குலாம் எனத் தோன்றியது..

வீட்டை அடையும் வரை மணியும் ரகுவும் பேசிக் கொள்ளவேயில்லை...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...