Skip to main content
கழுத்தில் மஞ்சள் தடங்களைப் பதித்திருந்த தாலி...! நெற்றியில் குவிந்திருந்த குங்குமம்...! கால் விரல்களின் இடுக்குகளில் நெளிந்து கொண்டிருந்த மெட்டி...!

தொப்பை என கிண்டல் செய்த இடத்தில், கருவொன்று கர்வமாய்...!!! அவள் கர்ப்பமாய்...!!!

அவள் அழவில்லை ஆனால் கண்களில் கண்ணீர்... அவன் சிரிக்கவில்லை ஆனால் உதடுகளில் புன்னகை...

எத்தனை நாள் ஆகிவிட்டது இவளை சந்தித்து... குழந்தைப் போல் இருந்தவள் இன்னும் சில மாதங்களில் குழந்தைப் பெற போகிறாள்... ஆச்சரியத்தில் இருந்து மீளாமல் இருந்தான் மணி.. 

இவ்வளவு அவசர அவசரமாக ஓடி, யாரை சந்திக்கப் போகிறது..? எதைச் சாதிக்கப் போகிறது..? என்று காலத்தின் மீது கோபமும் கொண்டான்...

வெகு நாட்களுக்குப் பின் விழுந்த முதல் மழைத் துளி, மடிந்து கிடக்கும் மண்ணின் மணத்தை முழுவதுமாகத் தூண்டுவதைப் போல, நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவளை சந்தித்த வேளையில், மணியின் மனதில் கேட்பாரற்று பூட்டிக் கிடந்த நினைவு புதையல்கள் மீண்டுமொரு முறை கிளர்ந்து எழுந்தன...

பள்ளி, கல்லூரி, வேலை என்று தன் பழங்கால நினைவுகளில் எங்கு கால் வைத்தாலும் அவளின் கால் தடமும் கூடவே வரும்... அதை பல சமயங்களில் அவன் ரசித்திருக்கிறான்...

வைரமுத்துவின் வரிகளைப் போல, பிரிவொன்று நேருமென்று தெரிந்தும், அவளின் மீதான பிரியத்தை மணி குறைத்துக் கொண்டதே இல்லை...

ஆனால் அவளின் திருமணத்திற்குப் பிறகு எல்லாமே மாறிப் போனது.. திருமணம் நடக்கும் போது அருகில் இருந்தவள் திருமணம் முடிந்தவுடன் தொலைவில் சென்றுவிட்டாள்... தொலைவு சென்றதும் தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது..

பெண் என்பவள் தங்கையானாலும், தோழியானாலும் திருமணம் ஆனதும் ஏற்படும் அந்த இயல்பான இடைவெளியை அவனால் எளிதில் ஏற்கவும் இயலவில்லை.. கடக்கவும் முடியவில்லை...

ஒருவருட இடைவெளிக்கு பிறகு அன்று தான் அவளை பார்க்கிறான் மணி... குறும்புத் தனம் குறையாத அவள், குடும்ப பெண்ணாகப் பொறுப்பேற்றிருந்தாள்...

வாங்கி வந்த பழங்களையும், இனிப்பு காரங்களையும் அவள் கைகளில் கொடுத்தான்.. எதுக்கு மணி, இதெல்லாம்... என்று சந்தோசமாக சலித்துக் கொண்டே உள்ளே எடுத்துச் சென்றாள்...

டீ வைத்து கொடுத்தாள்.. பேசிக் கொண்டே அம்மாவின் உதவியுடன் சீக்கிரமாக சமையல் வேலையும் முடித்து விட்டாள்...

சமைத்து முடித்ததும் அவனை சாப்பிட சொன்னாள்.. மணி எவ்வளவோ மறுத்து பார்த்தான்.. ஆனால் அவள் வற்புறுத்துவதை நிறுத்தவில்லை... அதனால் சாப்பிட உட்கார்ந்தேன்...

அவள் பரிமாறினாள்.. நீயும் ஒரு தட்டு எடு.. ஒன்றாக சாப்பிடலாம் என்றான் மணி..

இல்லை மணி... அவர் பசியோடு வருவார்.. அவர் வந்ததும் நான் அவரோடு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று மறுத்து விட்டாள்... அவனுக்கு சந்தோசப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியவில்லை... இருந்தாலும் தனது தோழி, தான் ஆசைப்பட்டு கட்டிக் கொண்ட கணவனுக்காகப் பாசமான மனைவியாக மாறியிருப்பதில் அவனுக்கு பெருமிதமாக இருந்தது...

சாப்பிட்டு சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு, புகுந்த வீட்டில் மகளை விட்டுச் செல்லும் தந்தையைப் போல, அவளை சந்தோசமாக இருக்கும்படி கூறிவிட்டு நினைவுகளை சுமந்து கொண்டு மணி கிளம்பினான்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...