Skip to main content

பகத்சிங்...

தன் வாழ்ந்த கால் நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில், இந்திய சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர வேறெந்த சிறு எண்ணத்தையும் கொண்டிருக்காத தன்னலமற்ற தியாகி.. வீரத்தையும் தியாகத்தையும் எப்பொழுதுமே விரல் நுனியில் வைத்திருந்த மாபெரும் போராளி...23வது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காகத் தூக்கு மேடையில் புன்னகையுடன் தன் இன்னுயிரை ஈன்ற வீரன்...

என்.சொக்கன் அவர்கள், பகத் சிங்கின் பிறப்பு முதல் இறுதி வரை, அவருடைய ஆயுதப் போரட்டத்தின் மீதான நம்பிக்கை, அதற்காக அவர் மேற்கொண்ட கிளர்ச்சிகள் என அவரைப் பற்றிய ஒவ்வொரு வரியையும் உணர்ச்சிப் பொங்க எழுதி இருக்கிறார்.. அந்த உணர்ச்சிகரமான வரிகள், புத்தகம் படிப்பவர்களை ஒரே வாசிப்பில் படித்து முடிக்கத் தூண்டுகின்றன..

அந்தப் போராளியை பற்றியும், அவருடைய துணிச்சலான போராட்டங்களையும், வீரம் தூண்டும் எழுத்துக்களைப் பற்றியும் படிக்கும் போது மெய்ச் சிலிர்க்கின்றன.. மேலும் அவர்க்குண்டான மரியாதையை நாம் போதிய அளவில் செய்யவில்லையோ என்ற அச்சத்தையும், கேள்வியையும் மனதில் ஏற்படுத்துகின்றன...

மொத்தத்தில் ஒரு மகத்தான போராளியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தறிந்து கொண்ட மகிழ்ச்சி.. இன்றைய நாள் நல்ல முறையில் செலவிடப்பட்டது என்ற மனத்திருப்தி, இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...