Skip to main content

Posts

Showing posts from April, 2016
மீண்டுமொரு முறை அவளது நினைவு...!!! நினைத்த நிமிடத்தில் கன்னங்கள் கண்ணீரால் நனைந்தன...!!! காகிதங்கள் கவிதையால் நனைந்தன...!!! கார்த்திக் பிரகாசம்...
வந்ததெல்லாம் வரவுமில்லை சென்றதெல்லாம் செலவுமில்லை படிச்சதெல்லாம் ஞானமில்லை படிக்காததெல்லாம் வேதமில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

ஒரு மனிதர்...!!! ஒரு டீக்கடை...!!!

அவருக்கு 80 முதல் 83 வயதுக்குள்ளிருக்கும். எப்பொழுதும் சிரித்த முகம் தான். அவருடைய கண்கள் இந்த வயதிலும் மூக்கு கண்ணாடியின் உதவியில்லாமலே இயங்குகின்றன. அவருடைய கால்களும் துணை தாங்கி ஏதும் இல்லாமல், அடி பிறளாமல் அடி எடுத்து வைக்கின்றன. காலை 3 55 மணிக்கெல்லாம் டீக்கடைக்கு வந்து விடுகிறார்.. கடையே 4 மணிக்குத் தான் திறப்பார்கள். பெஞ்சை எல்லாம் எடுத்து வரிசையாகப் போட்டு கடை பையனுக்கு உதவி செய்கிறார். கடையில் வேலை செய்யும் பையன் முதல் கடைக்கு வருபவரெல்லாம் நண்பர்கள் தான் அவருக்கு. கடையில் விசாரித்ததில் ஒரு நாளைக்கு குறைந்தது 9 முதல் 10 முறையாவுது வந்து விடுவார் என்கிறார்கள். அவர் ரத்தத்தில் டீக் கலந்திருக்கிறதா அல்லது டீயில் ரத்தம் கலந்துவிட்டதா என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம் தான். உடலில் ரத்தத்திற்காகப் பதிலாக "டீ"யும், வெள்ளை அணுக்களுக்குப் பதிலாக டிக்காசனும் சிகப்பு அணுக்களுக்குப் பதிலாக சக்கரையும் தான் ஓடிக் கொண்டிருக்கும் போலிருக்கிறது. அந்தக் கடையிலும் அவர் குடித்த டீக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அதே சமயம், தெரிந்தவர்கள் யாரேனும...
காதலர்கள் சமாதானம் செய்யவே பிறந்தவர்கள் காதலிகள் சமாதானம் ஆகவே பிறந்தவர்கள்... கார்த்திக் பிரகாசம்...
ஒவ்வொரு முறை புத்தகக் கடைக்குச் செல்லும் போதும், என்னென்ன புத்தங்கங்கள் வாங்க வேண்டும் என்று ஏற்கனவே குறித்து வைத்த பட்டியலுடன் செல்வேன். ஆனால் பெரும்பாலும் குறிப்பு எடுத்த புத்தங்கங்கள் கிடைக்காமல் அல்லது வாங்க முடியாமல் புதிதாக வேறு புத்தகங்களினால் கவரப்பட்டு அந்தப் புத்தகங்களையே வாங்கி விடுவேன். இன்றும் அப்படியே ஆயிற்று. "கி.ரா" எழுதிய "கன்னிமை"யையும், "யூமா.வாசுகி" எழுதிய "ரத்த உறவுகள்" புத்தகத்தையும் வாங்கச் சென்றேன். ஆனால் நான் வழக்கமாக செல்லும் கடையில் இந்த இரண்டு புத்தகங்களுமே இல்லை. கடைசியில் சுந்தர ராமசாமியின் புத்தகங்களை வாங்கி வந்துவிட்டேன். புத்தகங்கள் வாங்கியது நிறைவாக இருந்தாலும் நினைத்த புத்தங்கங்கள் கிடைக்காமல் திரும்பும் போது, விவரம் தெரிந்து பதினைந்து வருடங்களாக புத்தக வாசிப்பே இல்லாமல் வளர்ந்திருக்கிறேன் என்ற உண்மையை நினைக்கும் போதெல்லாம் மனம், வருத்தத்தின் அடி ஆழத்தில் சென்று தங்கி விடுகிறது. கார்த்திக் பிரகாசம்...
காதலிகள் காதலிப்பவனிடம் கருணையுள்ளம் கொண்ட அன்னை தெரசவாகத் தான் இருக்க விரும்புகிறார்கள் ஆனால் தோழிகள் அவர்களை அடோல்ப் ஹிட்லராக ஆக்கி விடுகின்றனர்...!!! கார்த்திக் பிரகாசம்...
விவரம் தெரிந்த நாள் முதல் நித்யா, தன் நிறத்தை நினைத்து வருந்தி அழாத நாள் இல்லை.. அவளது சகோதரிகள் மூவரும் சிவப்பாய் இருக்க, இவள் மட்டும் கருப்பாய் பிறந்து கருப்பாய் வளர்ந்தாள். அவளது சகோதரிகளுக்கு நிறைய நண்பர்கள்.. எப்பொழுதும் அவர்களைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.ஆனால், நித்யா தனித்தே இருந்தாள். அவளுக்கு உண்மையான நண்பர்கள் என்று யாரும் இல்லை. அவள் கருப்பு நிறத்தில் இருந்ததனால், அவளிடம் பேசவோ பழகவோ யாரும் அண்டியதில்லை. அதற்கு அவளது சகோதரிகளுமே ஒரு முக்கிய காரணம். சகோதரிகளே அவளை பாகுபாட்டோடு தான் பார்த்தனர். தங்கள் நண்பர்களின் முன் வந்தால், தன் தங்கையென சொல்ல நேர்ந்தால் தங்களுக்கு அகௌரவமாகப் போய்விடும் என்று அவளை ஒதுக்கினர். ஒதுக்கியது மட்டுமில்லாமல் அவளின் காதுபடவே பலமுறை கூறி இருந்தனர். அதனால் நித்யாவும் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனித்தே வளர்ந்தாள். தனித்தே வளர்ந்ததால் நண்பர்கள் இல்லை. அந்த வருத்தத்தை புத்தங்களின் மூலம் தீர்த்துக் கொண்டாள் நித்யா. புத்தகங்களையே தன் நண்பர்களாக்கி கொண்டாள். அவள் பேசுவதும் பழகுவதும் புத்தகங்களுடன் மட்டும்தான். பகிர்ந்துக் கொள்ள நண்பர்கள் இல்லாததால் தனத...

கல் நெஞ்சக்காரி...!!!

காத்திருப்பது தெரிந்தும் கண்டுக்கொள்ளாமல் செல்கிறாள் கல் நெஞ்சக்காரி...!!! பிடித்திருந்தும் பிரியம் காட்ட மறுக்கிறாள் பிடிவாதக்காரி...!!! ஏனோ கண்களில் காதலித்து கனவுகளில் மட்டும் கைகோர்க்கிறாள் கைகாரி...!!! கார்த்திக் பிரகாசம்...
நிலவின் ஒளியே பகலைப் போல் ஆக்கிரமித்திருக்கும் அந்த ஒத்த அறையில் ரெண்டு பாய்களை முழுதாக விரிக்க முடியாமல் அப்பா ஒரு மூலையில் அம்மாவும் அவனும்  ஒரு மூலையில் இடத்தின் அளவில்தான் வஞ்சமே தவிர அது தூக்கத்தில் இருந்ததில்லை. அருகருகே கை கால்களைத் தூக்கி போட்டு நெருக்கிக் கொண்டு படுத்த போதும் தூக்கம் தொலைவில் சென்றதில்லை... இன்று அடுக்குமாடி வீட்டில் பட்டனைத் தட்டினால் வீட்டை ஒரு நிமிடத்தில் ஊட்டியாக்கி விடும் ஏசி நிலவின் ஒளியை கொஞ்சமாய் சிறைப்பிடித்து தான்தான் இந்த பிரபஞ்சத்தின் அழகு என்று பெருமைப்பட்டு சிரிக்கும் இரவு விளக்கு மேகங்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து செய்தது போல் பஞ்சு மெத்தைகள் அப்பா அறையில் இருக்கிறார் அம்மா ஹாலில் இருக்கிறார் அவன் பால்கனியில் இருக்கிறான் தூக்கம்தான் தொலை(வு)ந்து போய்விட்டது...!!! கார்த்திக் பிரகாசம்...

கோடை...!!!

மதிய நேரத்தில் மாநகர பேருந்தில் பயணிப்பது மரண தண்டனையை மிஞ்சிவிடும் போலிருக்கிறது...!!! வீட்டின் சாளரங்கள் வெப்பத்தை மட்டும் தாராளமாக உமிழ்கின்றன...!!! காற்றாடியோ கடனேவென்று சுற்றிக் காற்றைத் தருவதை மறந்து விட்டு வெறும் சப்தத்தை மட்டும் எழுப்பிக் கொண்டிருக்கிறது...!!! இரவிலோ வியர்வையால் குளித்த தலையணைகள் முகக் களிம்பு பூசிய கன்னிப் பெண்ணின் முகத்தைப் போல நிறம் மாறிக் கொண்டிருக்கிறது...!!! வெப்பத்தைச் சுவாசிக்கவும் வியர்வையைக் குடிக்கவும் செய்து கோடைக் காலம் கொடூரமாய் தண்டித்துக் கொண்டிருக்கிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
கொளுத்தும் வெயிலில் பேருந்துகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே ஊர்ந்து கொண்டிருக்க குளிரூட்டப்பட்ட மகிழூந்துகள் மட்டும் வேறொரு குளிர் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...
பிரவினிடம் உன் ராசி என்னவென்று கேட்டால், கொஞ்சமும் தயக்கமில்லாமல் "எங்கப்பாவிடம் திட்டும் வாங்கும் ராசி" என்று சொல்லுவான். நல்லதோ கெட்டதோ எதோ ஒரு விஷயத்திற்காக அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பது அவன் வழக்கம். காலையோ மாலையோ அவனை திட்டிக் கொண்டே இருப்பது அவன் அப்பாவின் வழக்கம். சிறு வயதில் இருந்தே அப்பாவுக்கு பயந்த பிள்ளையாகவே வளர்ந்தான் பிரவின். அப்பா திட்டும் போது, அவன் அழுததோ எதிர்த்து பேசியதோ இல்லை. ஆனாலும் அவனுடைய அம்மாவைத் திட்டினால் மட்டும் அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.. அப்பாவை எதிர்த்து பேச வேண்டும் போலிருக்கும். ஆனால் அப்பாவின் மீது கொண்ட பயத்தின் காரணத்தினால் அழுதுக் கொண்டே தூங்கிவிடுவான். இந்த விசயத்தில் அவன் அம்மாவிற்கே ஒரு வருத்தம் உண்டு. அவர் அப்படி திட்டும் போது, வீட்டிற்கு பெரிய மகன் நீ தான். நீயே கேட்கவில்லையென்றால் வேறு யார் கேட்பார்கள் என்று அவன் மீது வருத்தப்பட்டுக் கொள்வாள். பிரவினுக்கும் திருப்பி கேட்க வேண்டும் என்றுதான் எண்ணம் இருக்கும் ஆனால் அப்பாவின் மீதான பயம், அந்த எண்ணத்தை முழுதாக விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்... இப்படியே தான் அவனுடைய ...
விழுந்து விட்டோம் என்பதனால் வீழ்ந்து விட்டோம் என்றாகி விடாது...!!! கார்த்திக் பிரகாசம்...

#பள்ளி #பரிட்சை...

பள்ளிக் காலம் முடிந்த துன்பத்தில் பரிட்சை முடிந்த இன்பம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்து போனது...!!! கார்த்திக் பிரகாசம்...

அன்புள்ள அரசியல்வாதிகளுக்கு...!!!

முன்பெல்லாம் நீங்கள் பேசியதையோ செய்ததையோ நாங்கள் மறப்பதற்கு சில காலங்கள் அவகாசம் கொடுத்தீர்கள் ...!!! அதனால் எங்களின் மனதும் மறந்தது இதயம் கனிந்தது உங்களுக்கே ஓட்டுக்களும் விழுந்தது...!!! ஆனால் இப்பொழுது அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலையில்லாமல் நாளொரு வீதம் வாரமொரு வீதம் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்...!!! பாவப்பட்ட மக்களாகிய நாங்கள் மன்னிக்கிறமோ இல்லையோ கண்டிப்பாக மறந்து விடுவோம்.. உங்களுக்கே அது நன்றாகத் தெரியும்...!!! ஆனால் ஒரேயொரு  வேண்டுகோள்...!!! மறப்பதற்கு மட்டும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்...!!!  எங்கள் ஓட்டுகள் உங்களுக்கே...!!!  கார்த்திக் பிரகாசம்...
காலையில் சீக்கிரம் எழுந்து விட்டான் பாலு. அன்று அவனுக்கு பிறந்தநாள். எழுந்ததில் இருந்து நண்பர்கள், குடும்ப உறவுகள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என்று ஒவ்வொருவராய் மாறிமாறி போன் செய்து கொண்டே இருந்தனர். உண்மையில் சொல்லப் போனால் அவன் சீக்கிரம் எழுந்ததற்கு காரணமே அந்த அழைப்புகள் தான். தொடர்ந்து வந்து கொண்டே இருந்த அழைப்புகள் அவனை சில மணி நேரத்திற்கு சிரித்த முகமாவே வைத்திருந்தது. எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான்.. எப்பொழுதும் அலுவலகத்திற்கு கிளம்புவதை விட அன்று மிகுந்த உற்சாகமாக இருந்தான். பிறந்த நாளன்று எப்பொழுதுமே தன்னை மீண்டும் ஒரு குழந்தையாகப் பாவித்துக் கொள்வது பாலுவின் வழக்கம்.. அந்த நினைவே அந்த நாளை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் மாற்றி விடும் என்ற நம்பிக்கை.. போன் பேசிக் கொண்டிருந்ததில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அறக்க பறக்க 9:10 ரயிலை பிடித்தான். மிதமான கூட்டம் இருந்ததால் வாசற்படியிலேயே பாதுகாப்பாக நின்றுக் கொண்டான்.. எதிர் வாசற்படியில் இவனைப் போலவே சில இளைஞர்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.. அவர்கள் ஏதோவொரு விசயத்தை பற்றி சந்தோசமாகப் பே...
அப்பா அடிக்கடி அவனை அடித்துச் சொல்வார்... மனுஷனா பொறந்தா ஒண்ணு சுயபுத்தி இருக்கணும் இல்லைன்னா சொல் புத்தியாவுது இருக்கணும் ரெண்டும் இல்லைன்னா வாழ்க்கைல உருப்படவே முடியாது...!!! கார்த்திக் பிரகாசம்...
சாமானியனின் மாற்றத்தில் இருந்தே சமூக மாற்றம் தொடங்குகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...

நல்ல முயற்சி...!!!

ரூமிற்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் போத்திஸ் ஹைபர் கடைக்குப் போகிறேன் வரியா என்று நண்பன் கேட்டேன்... "சரி.. அந்தக் கடைக்கு போனால் ஏசியில் கொஞ்ச நேரம் உலாத்தலாமே" என்று நானும் கிளம்பிவிட்டேன்... கடைக்குள் போனதும் அவன் வீட்டு உபயோக பொருட்கள் தளத்தில் வேண்டிய பொருட்களைத் தேடி தேடி வாங்கிக் கொண்டிருந்தான்...நான் வழக்கம் போல "எதெல்லாம் என்னால் இப்போதைக்கு வாங்க முடியாதோ" அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்... எல்லாவற்றையும் சேகரித்து கடைசியாகப் பில் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒலிப்பெருக்கியில் ஒரு அறிவிப்பு வந்தது.. அந்த அறிவிப்பு சிறிது ஆச்சரியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தது. "போத்திஸ் ஹைபர்" வாடிக்கையாளர்கள், தங்கள் பில்லைக் காட்டி தரைத்தளத்தில் மரக்கன்று ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு தான் அது...!! தரைத் தளத்தில் வந்து பார்த்தால், மக்கள் கூட்டமாகத் தங்கள் பில்களைக் காட்டி மரக்கன்றைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அது ஒரு நீண்ட வரிசையாகப் பெருகிக் கொண்டும் இருந்தது.. "மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" "இயற்கையைப்...
தோல்வியைக் கையாள தெரிந்தவனிடம் வெற்றி தன் வேலையைக் காட்டுவதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
டீக்கடையில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான் கார்த்திக்.. அவனுடைய போன் ஒலித்தது.. அவன் முகச்சுளிப்புடன் போனை அனைத்து விட்டு மீண்டும் நண்பர்களோடு பேச ஆரம்பித்தான்.. சிறிது நேரத்தில் மீண்டும் போன் ஒலித்தது.. இந்த முறை எரிச்சல் அடைந்தான் கார்த்திக்... அவன் நண்பர்கள் வேறு, போன் பேச வற்புறுத்தினர்.. இது இன்னும் அவனுக்கு எரிச்சலை தந்தது.. ஏனென்றால் போன் செய்து கொண்டிருப்பது அவனுடைய அம்மா... கார்த்திக் வேலைக்கென்று சென்னை வந்து முழுமையாக மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. இருந்தாலும் அவன் அம்மா ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்தாறு முறையாவுது போன் செய்து விடுவார்.. காலையில் விழித்து டீக்குடிப்பது முதல் இரவு சாப்பிட்டு தூங்கும் வரை அனைத்தையும் போனிலேயே கேட்டறிந்து கொண்டு அடுத்ததை செய்ய சொல்வார்.. இது கார்த்திக்கு ஒருவிதமான எரிச்சலை தந்தது. தன்னை இன்னும் சிறுவனாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொள்வான்.. நண்பர்கள் வற்புறுத்தியதில் எரிச்சல் அடைந்த கார்த்திக், போனை எடுத்தான்.. எடுத்த எடுப்பிலேயே தன் எரிச்சலை அம்மாவிடம் எறிந்தான்.. "..எதற்கு இத்தனை முறை போன் செய்து கொண்டே இருக...
சம்பாதித்தவர்கள் எல்லோரும் சாதித்தவர்கள் இல்லை...!!! சாதித்தவர்கள் எல்லோரும் சம்பாதித்தவர்கள் இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...