Skip to main content

நல்ல முயற்சி...!!!

ரூமிற்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் போத்திஸ் ஹைபர் கடைக்குப் போகிறேன் வரியா என்று நண்பன் கேட்டேன்... "சரி.. அந்தக் கடைக்கு போனால் ஏசியில் கொஞ்ச நேரம் உலாத்தலாமே" என்று நானும் கிளம்பிவிட்டேன்...

கடைக்குள் போனதும் அவன் வீட்டு உபயோக பொருட்கள் தளத்தில் வேண்டிய பொருட்களைத் தேடி தேடி வாங்கிக் கொண்டிருந்தான்...நான் வழக்கம் போல "எதெல்லாம் என்னால் இப்போதைக்கு வாங்க முடியாதோ" அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...

எல்லாவற்றையும் சேகரித்து கடைசியாகப் பில் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒலிப்பெருக்கியில் ஒரு அறிவிப்பு வந்தது.. அந்த அறிவிப்பு சிறிது ஆச்சரியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தது.

"போத்திஸ் ஹைபர்" வாடிக்கையாளர்கள், தங்கள் பில்லைக் காட்டி தரைத்தளத்தில் மரக்கன்று ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு தான் அது...!!

தரைத் தளத்தில் வந்து பார்த்தால், மக்கள் கூட்டமாகத் தங்கள் பில்களைக் காட்டி மரக்கன்றைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அது ஒரு நீண்ட வரிசையாகப் பெருகிக் கொண்டும் இருந்தது..

"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" "இயற்கையைப் பாதுகாப்போம்" என்று வசனத்தை மட்டும் நம்மில் பெரும்பாலனோர் பேசிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு முன்னணி வர்த்தக நிறுவனம் இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

அதேப் போல் மக்களும், "மரக்கன்று தானே.! இதற்குப் போய் வரிசையில் நின்று நேரத்தை வீணாக்க வேண்டுமா..! அந்த நேரத்தில் பேருந்தையோ அல்லது ரயிலையோ பிடித்தால், வீட்டிற்கு சென்று விடலாம் என்று ஏளனமாக நினைக்காமல், நீண்ட வரிசையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து தங்களுக்கு பிடித்த மரக்கன்றை வாங்கி சென்றது நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாகத் தோன்றியது..

வர்த்தக நிறுவனங்கள் இதுப் போன்ற சமூக அக்கறையை கையில் எடுத்துக் கொண்டால், அவர்களின் வியாபாரத்திற்கும் அதை விட பெரிய விளம்பரம் தேவையாக இருக்காது. சமூகத்திலும் ஆரோக்கியமான முன்னேற்றத்துடன் கூடிய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...