டீக்கடையில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான் கார்த்திக்.. அவனுடைய போன் ஒலித்தது.. அவன் முகச்சுளிப்புடன் போனை அனைத்து விட்டு மீண்டும் நண்பர்களோடு பேச ஆரம்பித்தான்.. சிறிது நேரத்தில் மீண்டும் போன் ஒலித்தது.. இந்த முறை எரிச்சல் அடைந்தான் கார்த்திக்... அவன் நண்பர்கள் வேறு, போன் பேச வற்புறுத்தினர்.. இது இன்னும் அவனுக்கு எரிச்சலை தந்தது.. ஏனென்றால் போன் செய்து கொண்டிருப்பது அவனுடைய அம்மா...
கார்த்திக் வேலைக்கென்று சென்னை வந்து முழுமையாக மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. இருந்தாலும் அவன் அம்மா ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்தாறு முறையாவுது போன் செய்து விடுவார்.. காலையில் விழித்து டீக்குடிப்பது முதல் இரவு சாப்பிட்டு தூங்கும் வரை அனைத்தையும் போனிலேயே கேட்டறிந்து கொண்டு அடுத்ததை செய்ய சொல்வார்.. இது கார்த்திக்கு ஒருவிதமான எரிச்சலை தந்தது. தன்னை இன்னும் சிறுவனாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொள்வான்..
நண்பர்கள் வற்புறுத்தியதில் எரிச்சல் அடைந்த கார்த்திக், போனை எடுத்தான்.. எடுத்த எடுப்பிலேயே தன் எரிச்சலை அம்மாவிடம் எறிந்தான்..
"..எதற்கு இத்தனை முறை போன் செய்து கொண்டே இருக்கிறீர்கள்.. நான் என்ன சின்ன பையனா... என்னை சுதந்திரமாக இருக்கவே விட மாட்டீர்களா..? இனிமேல் அடிக்கடி எனக்கு போன் செய்யதீர்கள்... நானே செய்கிறேன் அப்பொழுது பேசிக் கொள்ளலாம்.. அதுவே போதும்...!!! என்று ஏகத்துக்கும் பேசி விட்டான்.. எதிரில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை..
அடுத்து சில நாட்கள் வீட்டில் இருந்து போன் வரவில்லை.. அவனும் போன் செய்யவில்லை.. கார்த்திக் ரொம்ப சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டான்.. யாருக்கும் எதுவும் தினசரி ஒப்புவிக்க தேவையில்லை என்று சந்தோசமாகத் திரிந்தான். நிமிடங்கள் நாட்களையும், நாட்கள் வாரங்களையும் நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருந்தன..
ஒருநாள் கார்த்திக்கு திடீரென காய்ச்சல் வந்தது.. என்ன செய்வதென்று தெரியவில்லை.. வீட்டில் இருந்தும் போன் இல்லை. மாத்திரை வாங்கிக் கொடுக்கக் கூட ஆள் இல்லை.. சுதந்திரமாக அவன் நினைத்தது இப்பொழுது சுமையாகத் தெரிந்தது.. தினந்தோறும் ஏற்படும் பகிர்ந்துக் கொள்ள வேண்டிய பல அனுபவங்கள் அவனிடம் கேட்க ஆள்இல்லாமல் தேங்கி கிடந்தன.. சுதந்திரமாக நினைத்தது அவனை தனியொரு தனிமை சிறையில் அடைத்துவிட்டதாய் உணர்ந்தான்..
உடனே போன் செய்து அம்மாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மனது கதறியது.. ஆனால் ஏதொரு மனோபாவம் அவனை போன் செய்ய விடாமல் தடுத்தது.. தயக்கமும் வெட்கமும் மாறி மாறி வதப்படுத்தின.. சில மணி நேர போராட்டங்களுக்குப் பின் போன் செய்தான்...
அம்மா.. எனக்கு உடம்பு சரியில்லை என்று மட்டும் தான் சொன்னான்... உடனே எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரை, சாப்பிட வேண்டிய உணவு என்று பதறிப் போய் சொன்னார் அவன் அம்மா... அடுத்த அரைமணி நேரத்துக்கு ஒருமுறை, உடம்பு எப்படி இருக்கிறது..? சாப்பிட்டாயா...? வாந்தி நின்று விட்டதா.? இன்னும் நிற்கவில்லை என்றால் இந்த மாத்திரை சாப்பிடு.! என்று அவன் அம்மா போன் செய்துக் கொண்டே இருந்தார்..
அம்மாவின் கவனிப்பிலேயே கார்த்திக்கின் பாதி காய்ச்சல் கரைந்தது... அம்மாவிடம் கேட்ட மன்னிப்பில், அவள் மன்னித்ததில் மீதி காய்ச்சலும் பறந்தது.. தானே தேடிக் கொண்டே தனிமையில் இருந்து மீண்டு வந்தான் கார்த்திக்... இப்பொழுதெல்லாம் அம்மா போன் செய்வதற்கு முன், இவன் எழுந்து போன் செய்து விடுகிறான்...
கார்த்திக் பிரகாசம்...
கார்த்திக் வேலைக்கென்று சென்னை வந்து முழுமையாக மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. இருந்தாலும் அவன் அம்மா ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்தாறு முறையாவுது போன் செய்து விடுவார்.. காலையில் விழித்து டீக்குடிப்பது முதல் இரவு சாப்பிட்டு தூங்கும் வரை அனைத்தையும் போனிலேயே கேட்டறிந்து கொண்டு அடுத்ததை செய்ய சொல்வார்.. இது கார்த்திக்கு ஒருவிதமான எரிச்சலை தந்தது. தன்னை இன்னும் சிறுவனாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொள்வான்..
நண்பர்கள் வற்புறுத்தியதில் எரிச்சல் அடைந்த கார்த்திக், போனை எடுத்தான்.. எடுத்த எடுப்பிலேயே தன் எரிச்சலை அம்மாவிடம் எறிந்தான்..
"..எதற்கு இத்தனை முறை போன் செய்து கொண்டே இருக்கிறீர்கள்.. நான் என்ன சின்ன பையனா... என்னை சுதந்திரமாக இருக்கவே விட மாட்டீர்களா..? இனிமேல் அடிக்கடி எனக்கு போன் செய்யதீர்கள்... நானே செய்கிறேன் அப்பொழுது பேசிக் கொள்ளலாம்.. அதுவே போதும்...!!! என்று ஏகத்துக்கும் பேசி விட்டான்.. எதிரில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை..
அடுத்து சில நாட்கள் வீட்டில் இருந்து போன் வரவில்லை.. அவனும் போன் செய்யவில்லை.. கார்த்திக் ரொம்ப சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டான்.. யாருக்கும் எதுவும் தினசரி ஒப்புவிக்க தேவையில்லை என்று சந்தோசமாகத் திரிந்தான். நிமிடங்கள் நாட்களையும், நாட்கள் வாரங்களையும் நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருந்தன..
ஒருநாள் கார்த்திக்கு திடீரென காய்ச்சல் வந்தது.. என்ன செய்வதென்று தெரியவில்லை.. வீட்டில் இருந்தும் போன் இல்லை. மாத்திரை வாங்கிக் கொடுக்கக் கூட ஆள் இல்லை.. சுதந்திரமாக அவன் நினைத்தது இப்பொழுது சுமையாகத் தெரிந்தது.. தினந்தோறும் ஏற்படும் பகிர்ந்துக் கொள்ள வேண்டிய பல அனுபவங்கள் அவனிடம் கேட்க ஆள்இல்லாமல் தேங்கி கிடந்தன.. சுதந்திரமாக நினைத்தது அவனை தனியொரு தனிமை சிறையில் அடைத்துவிட்டதாய் உணர்ந்தான்..
உடனே போன் செய்து அம்மாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மனது கதறியது.. ஆனால் ஏதொரு மனோபாவம் அவனை போன் செய்ய விடாமல் தடுத்தது.. தயக்கமும் வெட்கமும் மாறி மாறி வதப்படுத்தின.. சில மணி நேர போராட்டங்களுக்குப் பின் போன் செய்தான்...
அம்மா.. எனக்கு உடம்பு சரியில்லை என்று மட்டும் தான் சொன்னான்... உடனே எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரை, சாப்பிட வேண்டிய உணவு என்று பதறிப் போய் சொன்னார் அவன் அம்மா... அடுத்த அரைமணி நேரத்துக்கு ஒருமுறை, உடம்பு எப்படி இருக்கிறது..? சாப்பிட்டாயா...? வாந்தி நின்று விட்டதா.? இன்னும் நிற்கவில்லை என்றால் இந்த மாத்திரை சாப்பிடு.! என்று அவன் அம்மா போன் செய்துக் கொண்டே இருந்தார்..
அம்மாவின் கவனிப்பிலேயே கார்த்திக்கின் பாதி காய்ச்சல் கரைந்தது... அம்மாவிடம் கேட்ட மன்னிப்பில், அவள் மன்னித்ததில் மீதி காய்ச்சலும் பறந்தது.. தானே தேடிக் கொண்டே தனிமையில் இருந்து மீண்டு வந்தான் கார்த்திக்... இப்பொழுதெல்லாம் அம்மா போன் செய்வதற்கு முன், இவன் எழுந்து போன் செய்து விடுகிறான்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment