Skip to main content

Posts

Showing posts from February, 2017

எழுத்து...

எழுதும் போது ஓர் அர்த்தத்தைக் கொடுக்கிறது எழுதிய பின் பல அர்த்தங்களைச் சேர்க்கிறது.. கார்த்திக் பிரகாசம்..
செத்து பிழைக்க நானொன்றும் மரணிக்கவில்லை பிழைத்து சாக நான் இன்னும் ஜனிக்கவே இல்லை கார்த்திக் பிரகாசம்...

காதல்

சிலருக்கு வரம் சிலருக்கு சாபம் சிலருக்கோ வரமாய் வந்த சாபம்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஊர்களிலுள்ள "நியாய விலைக் கடை"களில் "நியாயம்" என்பது பெயரளவில்தான் நிற்கிறது மற்றபடி "நியாயம்" என்பது விலையில் மட்டும்தானே தவிர தரத்தில் அல்ல. போகிற போக்கை பார்த்தால் அதுவும் இனிமேல் இருக்காது போலிருக்கிறது. "நியாயம்" நாட்டில் காணக் கிடைக்கும் அறிய விடயமாகி விடுமோ என்ற அச்சம் அதிகமாகிறது. ஆனால் நமக்கு "நியாய விலைக் கடைகள் தேவையில்லை. "நியாய விலை நியாய தரம்" கொண்ட கடைகளே தேவை. "நியாயம்" நாட்டில் நிலையாக நிலைக்கட்டும்... கார்த்திக் பிரகாசம்...
எங்கு எவர் செவிகளிலும் கேட்பொறியொன்று கூடுதல் உடல் உறுப்பாகியிருக்கிறது. இன்று விரல்நுனியில் எந்த பாடலை வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கேட்கலாம். ஆனால் சொந்த ஊரில் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்லும் போது பேருந்தில் இசைக்கும் இளையராஜாவின் பாடலில் ஆசைகள் கஷ்டங்கள் உறவுகள் நினைவுகள் ஏக்கங்கள் நெஞ்சை சற்றுக் கூடுதலாக அலைக்கழிக்கும். டீக்கடையில் ஓடும் தேவா பாடல்கள் வழக்கத்தை விட அதிகமானத் துள்ளலை உண்டாக்கும். ஊடல் பொழுதுகளில் யுவனின் இசை ஆறுதலை வஞ்சமில்லாமல் அளிக்கும். கூடல் காலங்களில் ரஹ்மானின் ராகம் காதலை கொஞ்சம் உயர்த்தி பிடிக்கும்.கேட்கும் இடத்தை பொறுத்து இசையின் சுவையும் மாறுபடும். எதிர்பாராத பொழுது தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ வெகுநாட்களுக்கு பிறகு கேட்கும் நமக்கு பிடித்த பாடல் பால்ய கால பரவசங்களை கண்முன் கொண்டு வந்து மயிர்க் கூச்செரிய செய்யும். இதயமும் கொஞ்சம் இடைவெளி விட்டு துடிக்கும். அந்த இடைவெளியை கீதங்கள் நிறைக்கும். மாய நினைவுகள் மனதை மயக்கும். "ஒலியும் ஒளியும்" "கோடை பண்பலை" யென்று பாடல்களுக்காக காத்திருந்த காலம் இப்பொழுதில்ல...
விரைவு ரயிலில் சென்றால் விரைவாக வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்குச் சென்று விடலாமென்று தங்கள் உயிரை பணயம் வைத்து தொங்கி கொண்டு செல்பவர்களின் கவனத்திற்கு.. பரங்கி மலையில் மூன்று உயிர்கள் பரிதாபமாக நேற்று பலியாகி உள்ளன. அதிக கூட்டத்தினால் தொங்கி கொண்டு பயணம் செய்தவர்களில் ஒருவரின் பயணப்பை எதிரே வந்த மின் கம்பத்தில் மாட்டிக் கொள்ள கண் இமைக்கும் நேரத்தில் ஏழு பேர் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்துவிட்டனர். நான்கு பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண் அயரும் நேரத்திலும் கவனமாக இருக்க வேண்டிய காலம். கூட்ட நெரிசலில் நெருக்கியடித்து படிக்கட்டின் விளிம்பில் நின்று பயணம் மேற்கொள்ள முனையும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் வீட்டில் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பெற்றோரைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும், தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை பற்றியும் சிந்திக்கவும். ரயில்வே நிர்வாகமும் ஒரு பெட்டியில் பயணிக்க வேண்டிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டும். தானியங்கி கதவுகளை அனைத்து வகையான ரயில்களிலும் ...
இலக்கங்களை மட்டும் இலக்காகிக் கொண்ட வாழ்க்கைப் பந்தயத்தில் இடறி விழுந்த சகமனிதனைத் தூக்கிவிட கரம் நீட்டாமல்,எழுந்து கால் ஊன்ற கால அவகாசம் அளிக்காமல், இடம் தடம் தெரியாமல் ஏறிமிதித்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் தோற்றவர்கள் யாரும் இல்லை. ஜெயித்தவர்கள் என்று எவரும் இல்லை. கார்த்திக் பிரகாசம்...
ஒரு பெண்ணைப் பார்த்தல் வேறு விரும்புதல் வேறு காதலித்தல் வேறு...!!! கார்த்திக் பிரகாசம்...

ஒரு கன்னியின் காட்சிப்பிழை

கண்ணிலும் கனவிலும் கன்னியை கண்ணாளனும் காதலிக்கும் காட்சிப்பிழைகள் காட்சிப்பிழைகளில் பேதை நெஞ்சு போதைக் கண்டு பேயாட்டம் கொண்டு தரையின் முதுகை எட்டி மிதிக்காமல் தொட்டு வருடுதே இதயத்திற்கும் பாதத்திற்கும் இடைவெளி இம்மியளவுமின்றி இருத்து போகுதே கொலுசின் கொஞ்சல்களும் வளவியின் சிணுங்கல்களும் செவியை சென்றடைவதற்குள் காற்றினில் சிறைப்படுதே சுற்றும் பூமியும் சிறிதுநேரம் நின்று கண்சிமிட்டி செல்லுதே மொட்டுகள் உடையாமல் பூக்கள் கொஞ்சம் பூக்குதே முகில் கூட்டமொன்று முந்தானை தேவதையை முத்துக்களில் நனைக்குதே மழையை மனதுக்குள் பத்திரப்படுத்த நினைக்குதே ஹார்மோன்களின் தாக்கம் அந்நிய செலவாணியை விட அதீத ஆதிக்கம் செலுத்துதே விண்மீன்களை வீட்டிற்கு அழைத்து விருந்தொன்று வைக்கத் தோன்றுதே இவையெல்லாம் பிழையாகவே இருக்கட்டுமே அதில் பிழையேதும் இருப்பதாகத் தோன்றவில்லை கண்ணாளன் வருவான் கண்ஜாடை கனிவான் காதலைத் தருவான் கார்த்திக் பிரகாசம்...
அப்பா சட்டைப்பையில் மறந்துவிட்ட பத்து ரூபாய்த்தாளில் காந்தி ஏனோ சிரித்திருக்கவில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
ரோஜாவினால் மட்டும் எங்கனம் காதலர்களின் கூட்டில் மகிழ்ச்சியாகவும் இழவு வீட்டில் துக்கமாகவும் மணக்க முடிகிறது...!!! ரோஜா ஓர் அபூர்வம்...!!! கார்த்திக் பிரகாசம்...
அகவை ஒற்றையிலிருந்து இரட்டையை எட்டிப் பிடித்த காலம் அவளது தலைப் பின்னல் இரட்டையிலிருந்து ஒற்றையாகியிருந்தது ...!!! கார்த்திக் பிரகாசம்...
பெரும்பாலான டீக்கடை, பெட்டி கடை, மளிகைக் கடை மற்றும் சாலையோர உணவகங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். அரசு பேருந்திலேயே நேற்று ஒரு நடத்துனர் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுக்கிறார். ஏனென்று கேட்டால், "நாங்கள் திரும்பிக் கொடுத்தால் பயணிகள் யாரும் வாங்குவதில்லை அதனால் நாங்களும் யாரிடமும் இப்போது வாங்குவதில்லை " என்கிறார். பத்து ரூபாய் நாணயங்கள் மீதான தேவையில்லாத அச்சம் பொது மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது அல்லது செல்லாது என்று அறிவிக்கப்டும் என்ற வதந்தி பொது மக்களிடையே காணப்படுகிறது. பத்து ரூபாய் நாணயங்கள் கணிசமான அளவில் புழக்கத்தில் இருக்கும் நிலையில், பொது மக்களிடையே காணப்படும் இதுப்போன்ற அச்சத்தினால் ஒருபுறம் சில்லரைத் தட்டுப்படும் மறுபுறம் சில்லரைத் தேக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக பொது மக்களிடையே காணப்படும் பத்து ரூபாய் நாணயங்கள் மீதான அச்சத்தைப் போக்கவும், வதந்தி பரவுவதைத் தடுக்கவும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தக்க நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். கார்த்திக் பிரகாசம்...
சூது கவ்வியது தர்மத்தை அல்ல தண்டனையை...!!! கார்த்திக் பிரகாசம்...
காதலிப்போம் காதலிக்கப்படுவோம் கார்த்திக் பிரகாசம்...
தவறவிட்ட சந்தர்ப்பங்கள் தக்கச் சமயத்தில் தண்டிக்கும்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஒருவர் மீது நாம் கொண்ட வெறுப்பு அவரை எதிர்ப்பவரின் மீது நாம் காட்டும் அனுதாபமாக தன்னிச்சையாக மாறிவிடுகிறது...!!! உணர்வுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...!!! கார்த்திக் பிரகாசம்...
தாங்கள் நாற்பத்தைந்து ஐம்பது வயதில் சாதித்ததை பிள்ளைகள் இருபத்தைந்து வயதில் சாதிக்க வேண்டுமென பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாழ்க்கைக் கடலில் மூச்சுத் திணற திணற அழுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிள்ளைகள் சொத்து, பதவி, பட்டம், புகழ் ஆகியவற்றுடன் சேர்த்து அவர்களுடைய வியாதிகளையும் சேர்த்து சம்பாதித்துக் கொண்டிருப்பதை அவர்கள் ஏனோ கவனிக்க மறந்து விடுகின்றனர் அல்லது அதைப் பற்றி சிந்திக்காமலேயே விட்டு விடுகின்றனர். தங்களுடைய கனவுகளுக்கும் பொறுப்புகளுக்கும் மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறை எந்தப் பக்கமும் கரைச் சேர்வதென்று திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் அழுத்தத்தினால் அவசர அவசரமாக வளர்ந்து, அவசர அவசரமாக வாழ்ந்து, ஓர் தலைமுறை இருந்த இடம் தெரியாமல் அவசர அவசரமாக இறந்துக் கொண்டிருக்கிறது. கார்த்திக் பிரகாசம்...
எழுவது என்றோ ஓர் நாள் விழுவதற்கே...!!! விழுவதும் ஓர் காலம் ஆணித்தரமாக ஊன்றி எழுவதற்கே...!!! கார்த்திக் பிரகாசம் ...
எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதல்ராவாகிறார் சசிகலா...!!! எப்படி யோசித்து பார்த்தாலும் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு கட்சியின் தலைவனை/தலைவியை முன்னிறுத்தி தான் குறிப்பிட்ட வேட்பாளர்களை தங்களின் பிரதிநிதிகளாக மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். வேட்பாளரின் தகுதிகளையோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பொறுத்தோ அல்ல. ஆக ஒரு கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும் கட்சித் தலைமையை முன்னிறுத்திதான் தங்கள் வெற்றிகளைப் பதிவு செய்கின்றனர். அதன்படி இன்றைய அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதா என்ற ஒற்றை பிம்பத்தினால் ஜெயித்தவர்கள். ஜெயலலிதா மறைந்த போதே இவர்கள் பெற்ற வெற்றியும் மறைந்துவிட்டது. எவரது முகத்தைக் காட்டி இவர்கள் பதவிக்கு வந்தார்களோ அவரே இன்றில்லை எனும் போது இவர்கள் பெற்ற வெற்றி எப்படிச் செல்லுபடியாகும். இதில் இவர்களெல்லாம் ஒன்றிணைந்து எந்தவித அரசியல் முன்னனுபவமும் இல்லாத, இதுவரையில் எந்தவித அரசியல் பின்புல பதவிகளிலும் இருந்திடாத ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்கின்றனர். அதுவும் தங்கள் தலைவியே இருமுறை முதல்வர் பதவியில் அமர வைத்த ஒருவரை கீ...
ஒட்டுமீசை ஒருபோதும் வளராது...!!! (யாரையும் குறிப்பிடவில்லை. குறிப்பாக அவரை இல்லவே இல்லை) கார்த்திக் பிரகாசம்...

நான் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன்

"மகர்" இனத்தவரின் மதமாற்றத்திற்காக டாக்டர்.அம்பேத்கர் ஆற்றிய உரைகள் மற்றும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. உரைகள் என்றால் வெறுமனே அல்ல. மத மாற்றத்தினால் ஏற்படப் போகும் சாதக பாதகங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் கூடிய தெளிவான பேச்சுகள். ஏன் இந்து மாதத்தில் இருந்து வெளியேற வேண்டும் வேண்டும்.? இந்து மாதத்தில் மட்டும் தான் சாதிய பாகுபாடு உண்டா மற்ற மாதங்களில் இல்லையா.? மத மாற்றத்தினால் நம் அரசியல் உரிமைகள் பறிப்போகுமா.? மதமாற்றத்தை ஏற்றுக் கொண்டுவிட்டால் எந்த மதத்திற்கு மாற வேண்டும்.? ஏன் புத்த மதம்.? புத்த மதத்தின் கோட்பாடுகள் மற்ற மதங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது.? என அனைத்து விதமான கேள்விகளையும் கேட்டு அதற்கான பதில்களையும் பாமரனுக்கும் புரியும் விதத்தில் கொடுத்துள்ளார். "கருப்பாயி என்கிற நூர்ஜஹான்" மற்றும் "நான் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன்" என இரண்டு புத்தங்கங்களையும் தற்செயலாக அடுத்தடுத்து படிக்கும் சூழல் அமைந்துவிட்டது. இரண்டிலுமே "மையக் கரு" ஒன்று தான்.இரண்டு புத்தககங்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. இந்து மாதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின...
டெல்லியில் ஜோதி சிங் (நிர்பயா) புனேயில் ரசிலா கேரளத்தில் லட்சுமி சென்னையில் ஸ்வாதி சேலத்தில் வினுப்ரியா அரியலூரில் நந்தினி இந்தப் பெண்களின் பின்புலங்கள் வெவ்வேறானாலும் இவர்கள் மாண்டதற்கு முதன்மை காரணம் "சாதி, மதம், மொழி, மாநிலம்" என எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு பார்த்தால், "இவர்கள் பெண்ணாகப் பிறந்தது" மட்டும் தான் எஞ்சி நிற்கிறது. பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக இந்த உயிர்களோடு வெளியே தெரியாத இன்னும் பல உயிர்கள் தினம்தினம் பறிபோகிக் கொண்டிருக்கின்றன. தனி மனித ஒழுக்கம், அறம், நன்னெறி மற்றும் சுயக் கட்டுப்பாடு போன்ற வாழ்வியல் கூறுகள் மனித சமூகத்திற்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றை அந்நியமாக்கிவிட்டு ஒழுக்கமின்மை, வன்மம், சுயநலம் ஆகியவற்றை நோக்கி வேகமாக படையெடுத்துக் கொண்டிருக்கிறது. நியாயம் கேட்பவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் தீமைச் செய்பவர்கள் செய்துக் கொண்டே இருக்கிறார்கள் உடலுக்கு பின்னாலுள்ள ஒரு பெண்ணின் உணர்வுகளும், அவளது உயிரோடு சேர்த்து கருவறுக்கப்படுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சமூகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் ஆண்களாகிய நாம...
சாப்பாட்டு மற்றும் டீக்கடை வாசல்களின் வெளியே கையேந்தி நிற்பவர்களை பார்த்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது. சிலர் உண்மையாகவே பிள்ளைகளால் கைவிடப்பட்டோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட கடின சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள் அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அங்கு கையேந்தி நிற்பவர்கள் பெரும்பாலும் அதையே வாடிக்கையாகச் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தினமும் அந்த இடத்தில் பார்க்க முடிகிறது. ஒருவர் பணமோ அல்லது சாப்பிட ஏதாவது வழங்கினாலும் அவர்கள் அத்தோடு விடுவதில்லை. அடுத்து வேறொருவரிடம் போய் நிற்கிறார்கள். கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ அல்லது சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க முற்படும் போதோ இவர்கள் கையை ஏந்துகிறார்கள். இது சமூகத்தின் மீதான ஒருவித உளவியல் தாக்குதலாகத் தோன்றுகிறது. ஒருவனின் மனிதநேயத்தை ஈவு இரக்கத்தை ஒரு கும்பல் நேரடியாக தங்களின் சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இயலாமையை போர்வையாக போர்த்திக் கொண்டு அலையும் இதுபோன்ற ஒருசில கும்பல்களால் உண்மையில் கஷ்டப்படுபவர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்கள் எங்கோ யாரோ ஒருவரால் நிமிடத்திற்கு நிமிடம் நிராகரிக்கப...

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

ஊருக்குள் அயராது உழைத்து நேர்மையுடனும் பாச நேசத்துடனும் வாழ்ந்தாலும், ஊருக்கு வெளியில் நம்மை கீழ்ச்சாதி பயனென்று தனியாகத் தானே உட்கார வைக்கின்றான். இந்த(து) மாதத்தில் கீழ்ச்சாதியில் பிறந்ததால் தானே எல்லோர் கண்ணிலும் இழிவாகவும் தரக்குறைவாகவும் தெரிகிறோம். இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் இந்த சாதியின் பேரால் தரக்குறைவாக நடத்தப்படும் கொடுமைகளில் இருந்து விடுதலை கிடைக்குமே என்று மதம் மாறிய ஒரு ஊரின் கதை தான் "கருப்பாயி என்கிற நூர்ஜஹான்". மதம் மாறிய பிறகு சாதி பிரச்சனை கண்மறைவாகி வேறொரு பிரச்சனை முளைக்கிறது. முழுமனதாக இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு முப்பது வருடங்களுக்கு மேலாகியும் அந்த ஊர் மக்கள் தொடர்ந்து மாறிய மதமான இஸ்லாமிலும் பரம்பரை இஸ்லாமியர்களால் ஒதுக்கப்படுகிறார்கள். அதுவும் கீழ்ச்சாதியில் இருந்து மாதம் மாறியவன் என்று தெரிந்தால் இன்னும் இழிவான பார்வை தெளிக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தில் பிறந்த பெண்களை யாரும் பெண் கேட்டு வருவதில்லை. அவ்வாறு நாற்பது வயதாகியும் யாரும் மணம் முடிக்க வராத நிலையில் இனிமேலும் பெற்றோர்க்கு பாரமாக இருக்க வேண்டாமென தன் வாழ்வையே முடித்துக் கொள்...