Skip to main content

நான் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன்

"மகர்" இனத்தவரின் மதமாற்றத்திற்காக டாக்டர்.அம்பேத்கர் ஆற்றிய உரைகள் மற்றும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. உரைகள் என்றால் வெறுமனே அல்ல. மத மாற்றத்தினால் ஏற்படப் போகும் சாதக பாதகங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் கூடிய தெளிவான பேச்சுகள்.

ஏன் இந்து மாதத்தில் இருந்து வெளியேற வேண்டும் வேண்டும்.? இந்து மாதத்தில் மட்டும் தான் சாதிய பாகுபாடு உண்டா மற்ற மாதங்களில் இல்லையா.? மத மாற்றத்தினால் நம் அரசியல் உரிமைகள் பறிப்போகுமா.? மதமாற்றத்தை ஏற்றுக் கொண்டுவிட்டால் எந்த மதத்திற்கு மாற வேண்டும்.? ஏன் புத்த மதம்.? புத்த மதத்தின் கோட்பாடுகள் மற்ற மதங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது.? என அனைத்து விதமான கேள்விகளையும் கேட்டு அதற்கான பதில்களையும் பாமரனுக்கும் புரியும் விதத்தில் கொடுத்துள்ளார்.

"கருப்பாயி என்கிற நூர்ஜஹான்" மற்றும் "நான் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன்" என இரண்டு புத்தங்கங்களையும் தற்செயலாக அடுத்தடுத்து படிக்கும் சூழல் அமைந்துவிட்டது.

இரண்டிலுமே "மையக் கரு" ஒன்று தான்.இரண்டு புத்தககங்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. இந்து மாதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை கொடுமையும் அதனால் மதம் மாறும் மக்களும் தான் களம்.

"நான் இந்துவாகச் சாகமாட்டேன்" என்ற புத்தகத்தில் அம்பேத்கர் மதமாற்றத்திற்கான அவசியத்தை மக்களிடையே எடுத்துச் சொல்கிறார். தீண்டாமைக் கொடுமையினால் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியப் பின் அம்மக்கள் அனுபவிக்கும் வேறுவிதான பிரச்னைகளை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது "கருப்பாயி என்கிற நூர்ஜஹான்".

சகமனிதனை மனிதனாகப் பார்க்காமல் சாதியும் சாதியக் கொடுமைகளும் ஒருவனை எவ்வளவு இழிவுபடுத்தியிருக்கின்றன/இழிவுபடுத்துகின்றன என்பதை கண்முன்னே கொண்டுவருகின்றன இந்த இரு புத்தகங்களும்.

நகரமயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் என்று வேகமாக மக்கள் ஆதலாகிக் கொண்டிருந்தாலும் "சாதிமயமாதல்" இன்றளவும் நம்மை விட்டு அகலவில்லை. சாதி பாகுபாடு நிலவும்வரை சமூகத்தில் சமத்துவத்தை நிலை நிறுத்துவது கடினம்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...