Skip to main content
எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதல்ராவாகிறார் சசிகலா...!!!

எப்படி யோசித்து பார்த்தாலும் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு கட்சியின் தலைவனை/தலைவியை முன்னிறுத்தி தான் குறிப்பிட்ட வேட்பாளர்களை தங்களின் பிரதிநிதிகளாக மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். வேட்பாளரின் தகுதிகளையோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பொறுத்தோ அல்ல. ஆக ஒரு கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும் கட்சித் தலைமையை முன்னிறுத்திதான் தங்கள் வெற்றிகளைப் பதிவு செய்கின்றனர்.

அதன்படி இன்றைய அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதா என்ற ஒற்றை பிம்பத்தினால் ஜெயித்தவர்கள். ஜெயலலிதா மறைந்த போதே இவர்கள் பெற்ற வெற்றியும் மறைந்துவிட்டது. எவரது முகத்தைக் காட்டி இவர்கள் பதவிக்கு வந்தார்களோ அவரே இன்றில்லை எனும் போது இவர்கள் பெற்ற வெற்றி எப்படிச் செல்லுபடியாகும்.

இதில் இவர்களெல்லாம் ஒன்றிணைந்து எந்தவித அரசியல் முன்னனுபவமும் இல்லாத, இதுவரையில் எந்தவித அரசியல் பின்புல பதவிகளிலும் இருந்திடாத ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்கின்றனர். அதுவும் தங்கள் தலைவியே இருமுறை முதல்வர் பதவியில் அமர வைத்த ஒருவரை கீழிறக்கிவிட்டு.

எதிர்க்க வேண்டியவர்கள் வலுவாக நிலையில் இருந்தும் எதுவும் பேச மறுக்கின்றனர்.

ஒரு நாட்டின் முதல்வர் என்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகளெல்லாம் ஒன்றிணைந்து தங்களின் வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...