சாப்பாட்டு மற்றும் டீக்கடை வாசல்களின் வெளியே கையேந்தி நிற்பவர்களை பார்த்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது. சிலர் உண்மையாகவே பிள்ளைகளால் கைவிடப்பட்டோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட கடின சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள் அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அங்கு கையேந்தி நிற்பவர்கள் பெரும்பாலும் அதையே வாடிக்கையாகச் செய்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களை தினமும் அந்த இடத்தில் பார்க்க முடிகிறது. ஒருவர் பணமோ அல்லது சாப்பிட ஏதாவது வழங்கினாலும் அவர்கள் அத்தோடு விடுவதில்லை. அடுத்து வேறொருவரிடம் போய் நிற்கிறார்கள். கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ அல்லது சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க முற்படும் போதோ இவர்கள் கையை ஏந்துகிறார்கள்.
இது சமூகத்தின் மீதான ஒருவித உளவியல் தாக்குதலாகத் தோன்றுகிறது. ஒருவனின் மனிதநேயத்தை ஈவு இரக்கத்தை ஒரு கும்பல் நேரடியாக தங்களின் சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
இயலாமையை போர்வையாக போர்த்திக் கொண்டு அலையும் இதுபோன்ற ஒருசில கும்பல்களால் உண்மையில் கஷ்டப்படுபவர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்கள் எங்கோ யாரோ ஒருவரால் நிமிடத்திற்கு நிமிடம் நிராகரிக்கப்படுகிறார்கள்.
கையேந்தும் மனிதர்களே இல்லாத சமூகம் அமைத்திட வேண்டும். அதிலும் மற்றவர்களின் இரக்கக் குணத்தை தங்களின் இச்சைக்காக இசைந்துக் கொடுக்க கையேந்துபவர்கள் இல்லாத சமூகம் அமைத்திட வேண்டும்.
கார்த்திக் பிரகாசம்...
அவர்களை தினமும் அந்த இடத்தில் பார்க்க முடிகிறது. ஒருவர் பணமோ அல்லது சாப்பிட ஏதாவது வழங்கினாலும் அவர்கள் அத்தோடு விடுவதில்லை. அடுத்து வேறொருவரிடம் போய் நிற்கிறார்கள். கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ அல்லது சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க முற்படும் போதோ இவர்கள் கையை ஏந்துகிறார்கள்.
இது சமூகத்தின் மீதான ஒருவித உளவியல் தாக்குதலாகத் தோன்றுகிறது. ஒருவனின் மனிதநேயத்தை ஈவு இரக்கத்தை ஒரு கும்பல் நேரடியாக தங்களின் சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
இயலாமையை போர்வையாக போர்த்திக் கொண்டு அலையும் இதுபோன்ற ஒருசில கும்பல்களால் உண்மையில் கஷ்டப்படுபவர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்கள் எங்கோ யாரோ ஒருவரால் நிமிடத்திற்கு நிமிடம் நிராகரிக்கப்படுகிறார்கள்.
கையேந்தும் மனிதர்களே இல்லாத சமூகம் அமைத்திட வேண்டும். அதிலும் மற்றவர்களின் இரக்கக் குணத்தை தங்களின் இச்சைக்காக இசைந்துக் கொடுக்க கையேந்துபவர்கள் இல்லாத சமூகம் அமைத்திட வேண்டும்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment