Skip to main content
அலமாரியை பார்த்தப்படியே எந்தச் சட்டை அணியலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக அந்தச் சட்டைக் கண்ணில் பட்டது. கடைசியாக அந்தச் சட்டையணிந்து சில நாட்கள் தான் இருக்கும். இருந்தாலும் அந்தச் சட்டையிலேயே கண்கள் நிலைகுத்தி நின்றன. ஏதேதோ நினைவுகள் அலமாரியை விட்டு இறங்கி வந்து காட்சிப் பேழையாக கண்முன்னே விரிந்தன.

அது நீலமும் கருப்பும் ஒன்றுக்கொன்று கலந்து நிறைந்திருக்கும் சட்டை. அவளுக்கு நீலம் பிடிக்கும். எனக்கு கருப்பு பிடிக்கும்.  இரண்டு நிறங்களும் நிறைந்திருப்பதால் எங்கள் இருவருக்கும் இந்தச் சட்டையைப் பிடிக்கும்.

அந்தச் சட்டை அணிந்திருந்த ஒருசமயம், இந்தச் சட்டையில் ஒரு தனித்தன்மை இருக்கிறது தெரியுமா.? சொல்கிறேன் கேள் என்றேன். 

அவள் ஆவலானாள்.!

கருப்புடன் ஜோடி சேரும் அனைத்து நிறங்களுமே அழகாகும். ஏற்கனவே அழகாக இருப்பதுக்கூட கருப்புடன் சேரும்போது தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் மிச்ச அழகையும் மிச்சம் வைக்காமல் கொட்டிவிடும். அதுதான் கருப்பின் சிறப்பம்சம். ஆனால் கருப்பை அழகாக்கும் நிறங்கள் என்றுப் பார்த்தால் மிகக் குறைவு. என்னைப் பொறுத்தவரையில்  சிகப்பும் நீலமும் மட்டும் தான் கருப்பை அழகாக வெளிக்கொண்டு வரும் நிறங்கள்.  இந்தச் சட்டையைப் போல.

இதில் நீலம் நீ. கருப்பு நான். என்னை அழகாக்குபவள் நீ. உன்னை அடைக்காப்பவன் நான். இது நீலமும் கருப்பும் கலந்த சட்டை மட்டுமல்ல. உன்னில் நானும் என்னில் நீயும் நம்மில் நாமும் கலந்திருப்பதற்கான சாட்சி.   

ஆவலில் இருந்த அவளுடைய கண்கள் இப்பொழுது கொஞ்சம் கலங்கியிருந்தன.

கண்களைத் துடை..! யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்றேன். ஆமாம். யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்று என் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். கலங்கியிருந்தது என்னவோ அவளுடைய கண்கள். கண்ணீரைக் கொட்டியதோ என் கண்கள்.

அன்றிலிருந்து இந்தச் சட்டை அணியும் போதெல்லாம் முத்தம் உறுதி.

கார்த்திக் பிரகாசம்... 

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...