Skip to main content

பறவையே எங்கு இருக்கிறாய்...!!!

வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு இசை தான் இளைப்பாறல். அது பிறப்பாயினும், இறப்பாயினும், கொண்டாட்டமாயினும், துக்கமாயினும் எதுவாயினும் சரி.

எப்போதும் ஆறுதலையே தேடியலைந்துக் கொண்டிருக்கும் மனதிற்கு இசை மட்டுமே நிரந்தர ஆறுதல்.இசையினூடாக மனதைத் தொடும் பாடல் வரிகள் இளைப்பாறலைத் தாண்டிய ஆறுதலில் மனதை அரவணைத்துக் கொள்ளும்.

அப்படியொரு அரவணைப்பை நல்கும் இரு பாடல்கள் "பறவையே எங்கு இருக்கிறாய்" மற்றும் "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது".

முதல் பாடல் இன்னக் கவலைக்காக என்றில்லை, எந்தக் கவலையானாலும் என்ன காரணமானாலும்; தூசிகளைத் தனித்தெறியும் முறத்தைப் போல மனதைக் கவலைகளிலிருந்து எளிதாக மீட்டெடுத்து விடும். மனதை லேசாக்கி முழுவதுமாகத் தன்வசப்படுத்திக் கொள்ளும். அதிலும் பாடலின் தொடக்கத்தில் இசைக்கு முன்பாக ஜுவா மற்றும் அஞ்சலியின் குரல்களில் ஒலிக்கும் சில வரிகள். அங்கேயே மனத்தில் புது வெளிச்சம் பாயும்.  இசைஞானியின் குரல் ஒளிந்துள்ள சோகங்களை ஒவ்வொன்றாக வழியனுப்பி வைக்கும். உடலெங்கும் யுவனின் இசை ஆக்கிரமிக்கும். சோகங்களெல்லாம் சுழன்றோடும்.

எவ்வித துயரமானாலும், கடைசி நம்பிக்கையும் தளர்ந்து போய் அடிமட்ட நிலையில் துவண்டு நின்றாலும் கூட  மீண்டெழுந்து வர,  "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது" என்ற ஒரு பாடல் போதும். பின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவிடலாம். அற்புதமான, தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வைக்கும் வரிகள் பாரங்களை காற்றில் எறியும். ஒரு புத்துணர்வு உடலெங்கும் பரவும். "என்ன பெரிய பிரச்சனை ஒரு கை பார்த்துவிடலாம்" என்ற உத்வேகத்தை அளிக்கும். உத்வேகம் அளிக்காவிட்டாலும் "இதெல்லாம் ஒரு பிரச்சனையா...! இதற்காகவா இவ்வளவு நேரம் சோர்ந்துப் போய் அமர்ந்திருக்கிறோம்" என்ற குறைந்தபட்ச நம்பிக்கை மேலிடும் எண்ணத்தையாவது கொண்டு வந்துவிடும். அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு.

சோர்வுறும் வேளையில் தோள் தட்டிக் கொடுத்து இளைப்பாறல் இழைக்கும் இந்த இரு பாடல்களைத் தந்ததற்காகவே யுவனுக்கும், நா.முத்துக்குமாருக்கும் நாம் வாழ்நாள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...