Skip to main content

கிறிஸ்துமஸ்

சிறுவயதில் நானும் தங்கையும் அப்பாவிடம் "கிறிஸ்துமஸ் ஸ்டார்' வாங்கித் தர சொல்லி அடம்பிடிப்போம். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிவந்து பல்புக்கு மின்னிணைப்பு கொடுத்து வீட்டின்முன் தொங்க விடுவார் அப்பா. டிசம்பர் மாதம் தொடங்கும் போதே வீட்டின்முன் ஸ்டார் வெளிச்சமாய்த் தொங்கும்.வீடே நட்சத்திர வெளிச்சத்தில் அழகாய் இருக்கும். அம்மா கிறிஸ்துமஸ் அன்று சர்ச்க்கு கூட்டிப் போவார். "இது கிறித்துவர்கள் கொண்டாடும் பண்டிகை நமக்கெதற்கு.." என்று அவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை.

அக்கம்பக்கத்துத் தெரு நண்பர்களெல்லாம் இணைந்து தெருவின் மையப்பகுதியில் உள்ள வீட்டின் முன் குடில் அமைத்து சீரியல் பல்புகளைக் கொண்டு அலங்கரிப்போம். குடிலின் அடித்தளப் பகுதி முழுதும் வைக்கோல் பரப்பி அதன்மீது மாதா சிலை, இயேசு கிறிஸ்துவின் குழந்தைச் சிலை, வண்ணமயமான மணிகள் மற்றும் நட்சத்திரங்கள் என்று குடிலே கோலாகலமாக இருக்கும். தெருவின் மொத்த சிறுவர் பட்டாளமும் அந்த குடிலின்முன் இருக்கும்.

நண்பர்களுக்குள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் தரிக்கக் கடும் போட்டி நிலவும். கடைசியில் கிறிஸ்துமஸ் தாத்தா உடை வைத்திருப்பவனுக்கோ அல்லது இருப்பதிலேயே உயரமானவாக இருப்பவனுக்கோ அந்த வாய்ப்பு வழங்கப்படும். அவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் தரித்து பையில் பரிசுப் பொருட்களுடன் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் போகுமிடமெல்லாம் சிறுவர்கள் பின்னாடியே திரிவார்கள்.

சரியாக பனிரெண்டு மணிக்கு கேக் வெட்டி இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பைக் கொண்டாடுவோம். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டவன் அனைத்து குழந்தைகளுக்கும் கேக் ஊட்டி விடுவான். அடுத்தநாள் விடிந்ததும் கூட்டமாக சர்ச்க்கு அணிவகுப்போம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒருபோதும் ஒருமதம் சம்மந்தப்பட்ட பண்டிகையாக நாங்கள் நினைத்ததில்லை. எல்லா மதத்து சிறுவர்கள், இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்குப் பெறுவார்கள்.

அனைத்து பண்டிகைகளுக்குப் பின்னாலும் அதன் மதத்தையோ, இனத்தையோ சார்ந்த அடிப்படைக் காரணங்கள் பல இருக்கும். அவை பெரும்பாலும் குறிப்பிட்ட மதம் சார்ந்த பண்டிகையாகவோ அல்லது இனம் சார்ந்த பண்டியாகவோ கடந்து போகும் ஆனால் ஒருசில மட்டும் சாதி மதம் போன்ற கட்டுப்பாடுகளை மீறி சமூகத்தில் சமத்துவத்தை முன்னெடுப்பவையாக அமையும். அதில் கிறிஸ்துமஸ்க்கு முக்கியம் இடம் உண்டு.

இன்று பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் மாடியில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வாசலில் வண்ணக் கோலம் இட்டிருக்கிறார்கள். பாடல்கள் கேட்கின்றன. நட்சத்திரங்கள் வெளிச்சமாய் சிரிக்கின்றன.

மனதில் பழைய நினைவுகள் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கின்றன. தூரத்தில் ஒரு மணிச் சத்தம் பெரிதாக ஒலித்தது.

"மெரி கிறிஸ்துமஸ்"

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...