மணிக்கு முப்பது வயதாகி விட்டது.. அவன் பெண் பார்க்காத இடம் இல்லை. நல்ல கம்பெனியில், அதிக சம்பளம் கொடுக்கக் கூடிய வேலையில் இருந்தும் அவனுக்கு பெண் தர யாரும் முன் வரவில்லை.
அதற்குக் காரணமும் இருந்தது. மணிக்கு ஐந்து வயதிருக்கும் போதே அவனது பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். ஐந்து வயதிலேயே அனாதையான மணியை, அவனது உறவினர்களும் கை விட்டனர்.
பெற்றோரையே இறந்த பிறகு, தன்னைக் கைவிட்ட உறவினர்களுக்காகப் பெரிதும் கவலைப்படாமல் அந்த ஊரை விட்டே வந்து விட்டான் மணி.
ஊரை விட்டு வந்த மணி, ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்தான். போகப் போக அந்த டீக்கடையே அவனுக்கு நிரந்தர ஆறுதலானது.. டீக்கடையில் வேலை செய்யும் ஒருவரின் உதவியுடன் பகுதி நேர பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தான்..
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தான். பெரிய கல்லூரியொன்றில் உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பு மணிக்குக் கிடைத்தது. வேலைச் செய்த டீக்கடையில் இருந்து விலகிக் கல்லூரி சேர்ந்தான். கல்லூரி இறுதி ஆண்டில் நல்ல கம்பெனியில் வேலைக் கிடைத்தது.
நல்ல வேலைக் கிடைத்து விட்டது. அடுத்து என்ன..! அவனுக்கென்று வாழ்வில் ஒரு துணை வேண்டும் என்று எண்ணினான். ஆதலால் வரன் தேடும் வலைத்தலங்களிலும், தெரிந்தவர்கள் மூலமாகவும் பெண்த் தேட ஆரம்பித்தான்.
ஆனால் பார்த்த இடத்தில் எல்லாம், மணிக்குப் பெற்றோர்கள் இல்லை என்ற காரணத்தினால் அவனை நிராகரித்தனர். அவனை நம்பி தங்கள் பெண்ணைத் தர பயந்தனர்..
மணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானான். அவன் மனது யாராவது ஆறுதல் சொல்வார்களா என்று ஆவலாய் எதிர்பார்த்தது. உடனடியாகக் கிளம்பி அவன் வேலைச் செய்த டீக்கடைக்குச் சென்றான்.
டீயைக் குடித்த படியே ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்தான். கண் முன்னே அவன் பெற்றோரை இழந்தது, அந்த டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்தது என அவனது பாலியல் நினைவுகள் கண் முன்னே காற்றாகப் பறந்தன.
சிறிது நேரத்தில் ஒரு தெளிவு பிறந்தது போல, சட்டென்று டீக்கடை விட்டு கிளம்பினான்..
மறுநாள் காலையில், நேராக அனாதை இல்லத்திற்குச் சென்றான். தன்னைப் போலவே சிறு வயதிலேயே தாய்த் தந்தையரை இழந்த ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் தத்து எடுத்தான். அந்தக் குழந்தைகளுக்குத் தன் தாய் தந்தையின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தான்.இனி தன் வாழ்க்கையில் திருமணம் என்பது இல்லை. இந்த இரு குழந்தைகளையும் வளர்த்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவது தான் வாழ்க்கையின் ஒரே கடமை என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்...
அந்தக் குழந்தைகள் அவனை "அப்பா" என்று அழைக்கும் ஒவ்வொரு தருணமும், தன் வாழ்க்கைக்குப் புது அர்த்தம் பிறப்பதாய் உணர்ந்தான்.. குழந்தைகளின் பரிசுத்தமான முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனதில் இருந்த கவலைகள் யாவும் மறைந்து போயின.. தன் பிறப்பிற்கான காரணத்தை, அந்தப் பிஞ்சு குழந்தைகளின் கண்களில் புரிந்துக் கொண்டான் மணி...
கார்த்திக் பிரகாசம்...
அதற்குக் காரணமும் இருந்தது. மணிக்கு ஐந்து வயதிருக்கும் போதே அவனது பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். ஐந்து வயதிலேயே அனாதையான மணியை, அவனது உறவினர்களும் கை விட்டனர்.
பெற்றோரையே இறந்த பிறகு, தன்னைக் கைவிட்ட உறவினர்களுக்காகப் பெரிதும் கவலைப்படாமல் அந்த ஊரை விட்டே வந்து விட்டான் மணி.
ஊரை விட்டு வந்த மணி, ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்தான். போகப் போக அந்த டீக்கடையே அவனுக்கு நிரந்தர ஆறுதலானது.. டீக்கடையில் வேலை செய்யும் ஒருவரின் உதவியுடன் பகுதி நேர பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தான்..
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தான். பெரிய கல்லூரியொன்றில் உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பு மணிக்குக் கிடைத்தது. வேலைச் செய்த டீக்கடையில் இருந்து விலகிக் கல்லூரி சேர்ந்தான். கல்லூரி இறுதி ஆண்டில் நல்ல கம்பெனியில் வேலைக் கிடைத்தது.
நல்ல வேலைக் கிடைத்து விட்டது. அடுத்து என்ன..! அவனுக்கென்று வாழ்வில் ஒரு துணை வேண்டும் என்று எண்ணினான். ஆதலால் வரன் தேடும் வலைத்தலங்களிலும், தெரிந்தவர்கள் மூலமாகவும் பெண்த் தேட ஆரம்பித்தான்.
ஆனால் பார்த்த இடத்தில் எல்லாம், மணிக்குப் பெற்றோர்கள் இல்லை என்ற காரணத்தினால் அவனை நிராகரித்தனர். அவனை நம்பி தங்கள் பெண்ணைத் தர பயந்தனர்..
மணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானான். அவன் மனது யாராவது ஆறுதல் சொல்வார்களா என்று ஆவலாய் எதிர்பார்த்தது. உடனடியாகக் கிளம்பி அவன் வேலைச் செய்த டீக்கடைக்குச் சென்றான்.
டீயைக் குடித்த படியே ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்தான். கண் முன்னே அவன் பெற்றோரை இழந்தது, அந்த டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்தது என அவனது பாலியல் நினைவுகள் கண் முன்னே காற்றாகப் பறந்தன.
சிறிது நேரத்தில் ஒரு தெளிவு பிறந்தது போல, சட்டென்று டீக்கடை விட்டு கிளம்பினான்..
மறுநாள் காலையில், நேராக அனாதை இல்லத்திற்குச் சென்றான். தன்னைப் போலவே சிறு வயதிலேயே தாய்த் தந்தையரை இழந்த ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் தத்து எடுத்தான். அந்தக் குழந்தைகளுக்குத் தன் தாய் தந்தையின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தான்.இனி தன் வாழ்க்கையில் திருமணம் என்பது இல்லை. இந்த இரு குழந்தைகளையும் வளர்த்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவது தான் வாழ்க்கையின் ஒரே கடமை என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்...
அந்தக் குழந்தைகள் அவனை "அப்பா" என்று அழைக்கும் ஒவ்வொரு தருணமும், தன் வாழ்க்கைக்குப் புது அர்த்தம் பிறப்பதாய் உணர்ந்தான்.. குழந்தைகளின் பரிசுத்தமான முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனதில் இருந்த கவலைகள் யாவும் மறைந்து போயின.. தன் பிறப்பிற்கான காரணத்தை, அந்தப் பிஞ்சு குழந்தைகளின் கண்களில் புரிந்துக் கொண்டான் மணி...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment