Skip to main content

Posts

Showing posts from June, 2016
சிறுவயதில் சினிமாவிற்குக் கூட்டிச் செல்ல அம்மாவிடம் அடம் பிடிப்பேன்.. கண்டபடி அழுவேன். அழுதுக் கொண்டே இருப்பேன்.. முதுகில் இரண்டு அடி பட்டும் படாதவாறு வைத்து விடுவாள். உடனே நான் இன்னும் பலமாக அழ ஆரம்பிப்பேன்.. நான் அழுவதை பார்த்துவிட்டு, "சரி. வெள்ளிக்கிழம சாயந்தரம் கூட்டிப் போறேன் அழாதே என்பாள்".. அப்பா கண்டபடி திட்டுவார்.. சும்மா காத்தாதீங்க "பையன் பொக்குனு போய்டுவான்". நீங்க ஒன்னும் காசு தர வேணாம்" என்று சொல்லிவிட்டு என்னை அவசர அவசரமாக இழுத்துச் செல்வாள். "கண்ணு, அடுத்த மொற வீட்டுக்கு வரும் போது என்ன சினிமாவுக்குக் கூட்டிப் போறியா..? தியேட்டர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு..." இன்று அம்மா அடம் பிடிக்காமல் என்னிடம் கேட்கிறாள்.. நான் வளர்ந்துவிட்டேன்...!!! அவள் குழந்தையாகி விட்டாள்...!!! கார்த்திக் பிரகாசம்...

#அதிர்ச்சி...

உலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முக்கிய பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.. கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் போன்ற பிரச்சனைகள் இந்தியாவில் உள்ள பெண்கள் அதிகம் எதிர்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மே 2016ல் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி நம்நாட்டின் மொத்த மக்கட்தொகை கிட்டத்தட்ட 130 கோடி.. இதில் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 64 கோடி. கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் ஐம்பது லட்சம் பெண் சிசுக்கொலைகள் நடைபெற்று இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 130 கோடி மக்கட்தொகை கொண்ட ஒரு ஜனநாயக நாடொன்று, முதல் மூன்று இடத்தில் இருப்பதற்காக பெருமைப்படக் கூடிய விடயமா இது...? இதில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாக கருதப்படும் "சோமாலியா" நமக்கு அடுத்த நான்காவது இடத்திலும், "பாகிஸ்தான்" ஒன்பதாவது இடத்திலும் தான் உள்ளன... கார்த்திக் பிரகாசம்...

பட்டதாரிகளும் அரசுத் தேர்வுகளும்...

மஹாராஷ்டிராவில் நான்காம் வகுப்பு தகுதி நிர்ணயிக்கப்பட்ட, ஐந்து பேர் மட்டுமே தேவைப்படும் சுமைத் தூக்கும் தொழிலாளர் வேலைக்கு மொத்தம் 2424 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதுக்கூட பரவாயில்லை... அதில் 984 பேர் பட்டதாரிகள் மேலும் எம்.பில் படித்த ஐந்து பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். தமிழகத்தில் தான் பத்தாம் வகுப்பைத் தகுதியாகக் கொண்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பலதரப்பட்ட பட்டதாரிகளும் பாரபட்சம் பார்க்காமல் லட்சக்கணக்கில் எழுதுகிறார்கள் என்றால், மஹாராஷ்டிராவில் நான்காம் வகுப்பைத் தகுதியாகக் கொண்ட ஐந்து பேர் மட்டுமே தேவைப்படும் வேலைக்கு ஆயிரக்கணக்கில் விண்ணப்பித்திருக்கின்றனர்.. வேலையின்மையால் பட்டதாரிகளின் நிலைமை இந்த அளவுக்கு மலிந்துவிட்டதா அல்லது அரசு வேலை என்பதனால் தாங்களாகவே தங்கள் தகுதியைக் குறைத்துக் கொள்கின்றார்களா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. ஆனால் அரசு வேலைதான் வேண்டும் என்று எண்ணுபவர்கள், அவர்களது துறைச் சார்ந்த படிப்புக்கு ஏற்றாற்போல் உள்ள அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் இது போல குறைந்த தகுதியுடையத் தேர்வுகளுக்கு, அதிகம் படித்தவர்கள்...
மனுஷ்ய புத்திரனின் "மரணத்தின் தூது" என்ற கட்டுரையை படித்ததில் இருந்து, நான் இறந்த பிறகு என் மரணச் செய்தியை யாருக்கெல்லாம் கண்டிப்பாகத் தெரியப்படுத்த வேண்டும் என்ற பெயர்ப் பட்டியலை தயார் செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்... வாழ்வில் சில காலமோ அல்லது பெருங்காலமோ நம்மோடு பயணித்தவர்களுக்கு நாம் இறந்த பிறகு நம் மரணம் தெரியப்படுத்தாமல் இருப்பதும் அல்லது யாரோ ஒருவர் மூலம் வெகு நாட்களுக்கு (வருடங்களுக்கு)பிறகு தெரிய வருவதும் நாம் அவர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா..? கார்த்திக் பிரகாசம்...

சொல்லிவிடு...

உனக்கு எல்லா சந்தோஷங்களையும் நானே தர வேண்டும் என்று நினைக்கின்றேனே...!!! இதற்குப் பெயர் தான் பேராசையா..? கார்த்திக் பிரகாசம்...

ஆறுதல்...!!!

ஆறுதலென்பது ஒருவரின் கஷ்டத்தை காயத்தை கசப்பான அனுபவத்தை இல்லாமையை இயலாமையை மீண்டும் அவருக்கு ஞாபகப்படுத்தாமல் இருத்தலே...!!! கார்த்திக் பிரகாசம்...
கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் காலம் வரையில், அம்மா தான் சினிமாவிற்குக் கூட்டிச் செல்வார்... அம்மாவுடன் சேர்ந்து பார்த்த திரைப்படங்களையோ அல்லது அத்திரைப்படத்தின் பாடல்களையோ எதேச்சையாக இப்பொழுது பார்க்க நேரும் போது மனதின் ஓரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் துளி துளியாய் சிதறிக்கிடக்கும் அந்தப் பழைய நினைவுகள் ஒன்றாக சேர்ந்து நினைவு மாலையைக் கோர்க்கின்றன... 2000களில் வெளிவந்த படங்களின் பாடல்களை கேட்கும் போது அம்மாவின் ஞாபகமும் பழைய நினைவுகளும், மண்ணில் விழுந்த முதல் மழைத் துளி மறைந்துக் கிடைக்கும் மகத்தான மண் வாசத்தை வெளிக்கொணர்வது போல மனதை ஆக்கிரமிக்கின்றன. "படையப்பா" படத்தின் போது "ரஜினி ரஜினி தான்" என்று ரஜினிகாந்த்திற்குப் பாராட்டு பத்திரம் வாசித்ததும், "ஷாஜஹான்" படத்தின் முடிவை பார்த்து "விஜய்க்கு கண்ணீரோடு ஆறுதல்" சொல்லியதும், "ஆனந்தம்" படத்தில் "மம்முட்டியை ரம்பா ஜாடையாக பேசும் போது" உனக்கென்னடி அவன பத்தி தெரியும் என்று ரம்பாவைத் திட்டியதும், 7ஜி ரெயின்போ காலனி படம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், " ஏன்டா இந்தப் பட...
குளிக்கும் போது பார்த்து விட்டான் என்பதற்காகத் தற்கொலை செய்துக் கொண்டவளின் உடல் நிர்வாணமாக கிடந்தது பிரேத பரிசோதனை கூடத்தில்...!!! கார்த்திக் பிரகாசம்...
நாகரீக நகர வாழ்க்கையில் வளரும் குழந்தை நான்... பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடத் தான் ஆசை ஆனால் அவர்கள் கதவைத் திறப்பதாகவே தெரியவில்லை ஏனென்றால் என் வீட்டுக் கதவு எப்பொழுதும் மூடியே இருக்கின்றது...!!! கார்த்திக் பிரகாசம்...
தன்னைப் போல் கஷ்டப்படக்கூடாது என்று பெற்றோர்கள்  அவனை  வெளியூர் வேலைக்கு அனுப்பி வைத்தனர்... அவர்கள் செய்தது சரி தான் அவன் அவர்களைப் போல கஷ்டப்படவில்லை ...!!! ஆனால் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறான்...!!! கார்த்திக் பிரகாசம்...
காத்திருந்து காத்திருந்து காண முடியாத அசதியிலிருந்த கண்கள் கண்டவுடன் கண்ணீரைக் கசக்கித் தள்ளின...!!! கார்த்திக் பிரகாசம்...

சுக(மை)வாசி...

இருளை விரட்டி அடித்துக் கொண்டிருந்த வெளிச்சத்தில் அனலை அண்ட விடாத குளிர் காற்றில் தனது பிளாட்பாரக் கடையில் வியாபாரம் செய்துக் கொண்டே பரிட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தான் சென்னை சில்க்ஸின் வாசலில்....!!! கார்த்திக் பிரகாசம்...
நெட் இல்லா கணினி நெற்றிப் பொட்டு இல்லா கன்னியின் முகத்தைப் போல் முழுமையாய் இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
நல்லவனாய் நடிப்பவன் நல்லவனாய் வாழ்பவனை மிஞ்சி விடுகிறான்...!!! கார்த்திக் பிரகாசம்...
காலையில் தோழி ஒருத்தி தன் திருமணத்திற்கு சொல்வதற்காக அழைத்திருந்தாள்.. அவளிடம் பேசி நீண்ட வருடம் ஆகியிருந்ததால் மகிழ்வுடன் அலைபேசியை எடுத்தேன். வழக்கமான வாழ்த்துக்கள் பறிமாறியப் பின், திருமணத்திற்குப் பிறகு எங்கு குடியேறப் போகிறாய் சென்னையா பெங்களூரா ..? என்று கேட்டேன். அதற்கு அவள் சேலத்திலேயே (சொந்த ஊர்) தான் என்றாள். எனக்கு அலாதியான மகிழ்ச்சி. திருமணத்திற்குப் பிறகும் நீ சொந்த ஊரிலேயே இருக்கப் போகிறாய் என்றால், நீ மிகவும் அதிர்டசாலி என்று வாழ்த்துச் சொல்லினேன்.. உண்மையில் அலைப்பேசியை துண்டித்தப் பிறகும், அவள் திருமணத்திற்கு அழைத்ததை விட, சொந்த ஊரிலேயே இருக்கப் போகிறேன் என்று கூறியது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.. இன்றையச் சுழலில், பெரும்பாலான குடும்பத்தில் "முதல் பட்டதாரி என்ற பெருமையுடன்" பிழைப்புக்காக சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். மூன்று நான்கு வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்துவிட்டு வேறு வழியில்லாமல் அங்கேயே நிரந்தரமாக குடியேறியும் விடுகின்றனர்.. அதன் பிறகு குழந்தை குட்டியென பூர்விகமே மாறிவிடுகிறது. இது காலம்காலமாக நடத்துக் ...
பிடித்ததெல்லாம் விலகிப் போனப் பின் பிடிக்காததெல்லாம் பழகிப் போகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட ஏழு பேரின் விடுதலைக்காக "அற்புதம்மாள்" தலைமையில் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து சென்னைக் கோட்டை வரை நடைபெற்ற பேரணியில் முழுவதுமாக பங்குக் கொண்டு "அற்புதம்மாளை" நேரில் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி... 25 ஆண்டுகள் தனி ஆளாகத் தன் மகனின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அவர் உண்மையிலேயே "அற்புத அம்மாள்" தான்.. கால் நூற்றாண்டுகளாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்காக நடைபெற்ற பேரணியில் நானும் கலந்துக் கொண்டு ஒருசில வியர்வைத் துளிகளைச் சிந்தியதில் பலத் துளி மகிழ்ச்சி மற்றும் திருப்தி... கார்த்திக் பிரகாசம் ...

உணர்வும் உருவமும்...

ஒரு திருநங்கையால் எழுதப்பட்ட திருநங்கையர்களின் வாழ்க்கைப் பதிவுகள் தான் "உணர்வும் உருவமும்". தங்களை அரவாணி (அ) திருநங்கை என்று உணர்ந்த தருணத்தில் இருந்து அவர்கள் மீது கொட்டப்படும் சமூக அவமானங்கள், சக நண்பர்களின் ஏளனங்கள், பெற்றோரே துரத்தி அடிப்பது, என் பிள்ளையே இல்லை என்று தூற்றுவது. உடன் பிறந்தவர்கள் சொத்தில் பங்கில்லை என்று ஏமாற்றுவது, சக அரவாணிகளைத் தேடி அலைவது, பாலியல் தொந்தரவுகள்,பாலியல் கொடுமையில் அறியாமல் சிக்கிக் கொள்வது பின்பு நினைத்தாலும் மீள முடியாமல் தவிப்பது என ஒவ்வொரு சூழ்நிலையையும் சம்மந்தப்பட்டவர்களின் அனுபவங்களின் மூலமாக ஆழமாக பதிவு செய்திருக்கிறார் திருநங்கை ரேவதி. அது மட்டுமில்லாமல், திருநங்கைகளுக்காக இயங்கும் தன்னார்வ அமைப்புகள் வளர்ந்து வரும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவு பற்றியும் விளக்கி இருக்கிறார். இப்புத்தகம், திருநங்கைகளின் மீது கருணையை, பரிவை எதிர்பார்க்கும் முனைப்புடன் இல்லை. மாறாக அவர்களும் ஆண் பெண் போல மனித உயிர்கள்; அவர்களுக்கு உரிய அங்கிகாரம் அளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது.. கார்த்திக் பிரகாசம்...
மணி சரியாக மதியம் 1.30. உச்சி வெயில் உடலெங்கும் வெப்பத்தை பரப்பிக் கொண்டிருந்தது. வியர்வையால் தன் அடையாள நிறத்தை இழந்திருந்தது அவனுடைய சட்டை. வேட்டியில் அங்கங்கு கிழிசல்கள். செருப்புகள் தேய்ந்து போய் தன் உயிரை ஈன்றுவிடும் நிலையில் இருந்தன. காலை சாப்பாடே ஆகாத நிலையில் மதிய வெயிலில் அவனுடைய பசி, உடல் பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்தது. கால்கள் நடுங்க தொடங்கின. மரத்தில் சாய்ந்தவாறே ரோட்டில் உட்கார்ந்துவிட்டான் சேகர். ஒரு மாதம் முன்பு வரை சேகரின் நிலைமையே வேறு. அன்பான மனைவி. பாசமாக வளர்த்து ஊரே மெச்சும் அளவிற்கு ஒரே மேடையில் திருமணம் முடித்து வைக்கப்பட்ட இரு மகன்கள் என மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் சென்று கொண்டிருந்த நாட்கள், அவன் மனைவியின் திடீர் மரணத்தால் எல்லாம் மாறியது. மகன்களுக்குள் தந்தையை யார் பார்த்து கொள்வது என்ற பிரச்சனை. "அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு மொத்த செலவையும் நான் தானே செய்தேன். ஆதலால், இவரை நீ கடைசி வரை பார்த்துக் கொள்.. நான் என் குடும்பத்தையும் இனிமேல் பார்க்க வேண்டும்" என்றான் பெரியவன். "உன்னை பல லட்சங்களை செலவு ...
வாழ்வில் கடினமான நாட்கள் காசில்லா நாட்கள் வாழ்வில் கவலையான நாட்கள் காசிருந்தும் யாரையும் கவனிக்க இயலா நாட்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
பகல் வெளிச்சத்தின் இருட்டில் மழை...!!! கார்த்திக் பிரகாசம்...
உலகமே எதிர்காலத்திற்காகச் சுழன்றுக் கொண்டிருக்கையில் மனம் மட்டும் புகைப்படங்களினுடாக கடந்த காலத்தில் சுழன்றுக் கொண்டிருக்கிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
மழை வராவிட்டாலும் மண்வாசம் சுகமே உன் காதலைப் போல...!!! கார்த்திக் பிரகாசம்...

பழைய காலண்டரில் இரு தினங்கள்...

இந்தத் தலைப்பே புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. அந்த உந்துதல் உண்டாக்கிய எதிர்பார்ப்பு வீண் போய்விட வில்லை... மொத்தமாக பதினைந்து சிறு கதைகள்... கதைகள் என்றுக்கூட சொல்லி விட முடியாது. ஏனென்றால் ஒவ்வொன்றும் நிகழ்வுகளாக கண் முன்னே நடப்பது போல இருக்கிறது ஆசிரியரின் நடை... எளிய நடையில் இலகுவான கதைகள் மூலம் ஆழமான உணர்வுகளையும் மனதில் அதிர்வுகளையும் ஏற்படுத்தி இருக்கிறார் திரு.பாலு சத்யா... கார்த்திக் பிரகாசம்...

மீண்டும் ஒரு ஞாயிற்றுக் கிழமைக்காக...!!!

நீ இருக்கும் தைரியத்தில் தானே   அனைத்தையும் சகித்துக் கொண்டு மற்ற நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன் ஆனால்  நீயோ  வாரம் ஒருமுறை வருகிறாய்   வந்ததை உணரும் முன்னே சென்றுவிடுகிறாய் நீ  சென்ற மறுகணமே  மறுபடியும் உனை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறேன் இமைகள் விலகிய  கண்களை போல...!!!   கார்த்திக் பிரகாசம்...
நான் கிழித்த கோட்டை தாண்டமாட்டான்(ள்) \ என் மகன்(ள்) என அங்கலாய்ப்பது பெருமை இல்லை நான் கோடு கிழிக்கும் அளவுக்கு என் மகன்(ள்) விட்டதில்லை என்பதே வளர்ப்பின் உண்மையான பெருமை...!!! கார்த்திக் பிரகாசம்...
"கட்டுபாடுகள்" மிகுந்த வீட்டில் வளர்ந்தவர்கள் அதை ஒருபோதும் மீறுவதில்லை அவர்கட்கு சந்தர்ப்பங்கள் அமையா வரை...!!! கார்த்திக் பிரகாசம்...
படுக்கையறையிலும் சமையலறையிலும் மிஞ்சியது போக பெண்ணுக்கு நிறைவாய் எஞ்சி நிற்பது  என்னவோ வியர்வைத் துளிகள் மட்டுமே...!!! கார்த்திக் பிரகாசம்...

அன்பிற் சிறந்த தவமில்லை...

கூடி இணைந்து அன்பால் கட்டமைக்கப்பட்ட "கூட்டுக் குடும்பம்" என்ற வாழ்க்கை முறை, இன்றைய சூழ்நிலையில் சின்னாபின்னமாய் சிதறி "தனிக் குடும்பமாகவும்" "தனி மனிதர்களாகவும்" திரிந்து விட்டதை மிகுந்த வேதனையுடனும் ஆதங்கத்துடனும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார் தமிழருவி மணியன்... கூடி வாழ்வதன் அவசியத்தையும் கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் உணர்த்துகிறார். வயதான தாய் தந்தையரை பேணிக்காப்பதை பெரும் கடமையாக கொண்டிருந்த நம் சமூகத்தில், இன்று அதிகரித்து வரும் முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களை கண்டு கவலை கொள்ள வைக்கிறார். தாய் தந்தையரை பேணிக்காத்த புராண கதைகள், கவிதைகள் என ஒவ்வொரு வரியிலும் யோசிக்க வைக்கிறார். அன்பு காட்டுவதன் நோக்கத்தை, கூட்டுக் குடும்பமாய் வாழ வேண்டிய அவசியத்தை, தாய்மையின் மேன்மையை, ஆன்மிக சிந்தனைகளை மிகுந்த சிரத்தையுடன் புராண கதைகள், சங்ககால இதிகாசங்கள், மேல்நாட்டு அறிஞர்களின் கவிதைககள், பாரதி மற்றும் பாரதிதாசனின் புரட்சி கவிதைகள் மூலம் சமூக அக்கறையோடு பதிவு செய்திருக்கிறார். பொருளாதாரத்தை மட்டும் மையமாக கொண்டு ஓடிக் கொண்டிருக்கும...
உடன் படுத்தவனே உடன் பட மறுக்கும் போது யார் தான் நம்புவார்கள் அவன் தான் உன் அப்பா என்று...!!! கார்த்திக் பிரகாசம்...