Skip to main content

உணர்வும் உருவமும்...

ஒரு திருநங்கையால் எழுதப்பட்ட திருநங்கையர்களின் வாழ்க்கைப் பதிவுகள் தான் "உணர்வும் உருவமும்".

தங்களை அரவாணி (அ) திருநங்கை என்று உணர்ந்த தருணத்தில் இருந்து அவர்கள் மீது கொட்டப்படும் சமூக அவமானங்கள், சக நண்பர்களின் ஏளனங்கள், பெற்றோரே துரத்தி அடிப்பது, என் பிள்ளையே இல்லை என்று தூற்றுவது. உடன் பிறந்தவர்கள் சொத்தில் பங்கில்லை என்று ஏமாற்றுவது, சக அரவாணிகளைத் தேடி அலைவது, பாலியல் தொந்தரவுகள்,பாலியல் கொடுமையில் அறியாமல் சிக்கிக் கொள்வது பின்பு நினைத்தாலும் மீள முடியாமல் தவிப்பது என ஒவ்வொரு சூழ்நிலையையும் சம்மந்தப்பட்டவர்களின் அனுபவங்களின் மூலமாக ஆழமாக பதிவு செய்திருக்கிறார் திருநங்கை ரேவதி.

அது மட்டுமில்லாமல், திருநங்கைகளுக்காக இயங்கும் தன்னார்வ அமைப்புகள் வளர்ந்து வரும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவு பற்றியும் விளக்கி இருக்கிறார்.

இப்புத்தகம், திருநங்கைகளின் மீது கருணையை, பரிவை எதிர்பார்க்கும் முனைப்புடன் இல்லை. மாறாக அவர்களும் ஆண் பெண் போல மனித உயிர்கள்; அவர்களுக்கு உரிய அங்கிகாரம் அளிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது..

கார்த்திக் பிரகாசம்...


Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...