Skip to main content
காலையில் தோழி ஒருத்தி தன் திருமணத்திற்கு சொல்வதற்காக அழைத்திருந்தாள்.. அவளிடம் பேசி நீண்ட வருடம் ஆகியிருந்ததால் மகிழ்வுடன் அலைபேசியை எடுத்தேன். வழக்கமான வாழ்த்துக்கள் பறிமாறியப் பின், திருமணத்திற்குப் பிறகு எங்கு குடியேறப் போகிறாய் சென்னையா பெங்களூரா ..? என்று கேட்டேன்.

அதற்கு அவள் சேலத்திலேயே (சொந்த ஊர்) தான் என்றாள். எனக்கு அலாதியான மகிழ்ச்சி. திருமணத்திற்குப் பிறகும் நீ சொந்த ஊரிலேயே இருக்கப் போகிறாய் என்றால், நீ மிகவும் அதிர்டசாலி என்று வாழ்த்துச் சொல்லினேன்.. உண்மையில் அலைப்பேசியை துண்டித்தப் பிறகும், அவள் திருமணத்திற்கு அழைத்ததை விட, சொந்த ஊரிலேயே இருக்கப் போகிறேன் என்று கூறியது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது..

இன்றையச் சுழலில், பெரும்பாலான குடும்பத்தில் "முதல் பட்டதாரி என்ற பெருமையுடன்" பிழைப்புக்காக சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். மூன்று நான்கு வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்துவிட்டு வேறு வழியில்லாமல் அங்கேயே நிரந்தரமாக குடியேறியும் விடுகின்றனர்.. அதன் பிறகு குழந்தை குட்டியென பூர்விகமே மாறிவிடுகிறது. இது காலம்காலமாக நடத்துக் கொண்டிருக்கிறது என்றாலும் முன்பை விட இப்பொழுது எண்ணிகையில் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

"சொந்த ஊரில் திருவிழா, உறவினரின் திருமணம், குடும்ப தலைக்கட்டில் முக்கியஸ்தர் மரணம்" போன்ற சொந்தமெல்லாம் ஓரிடத்தில் கூடும் முக்கிய நிகழ்வுகளுக்குக் கூட "விடுமுறை இல்லை" என்று பிழைப்புத் தேடி வந்த தலைமுறை பிடிவாதமாக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது..

அவ்வாறு குடியேறுபவர்களின் பெற்றோரின் ஏக்கங்களை யார் நிறைவேற்றுவார்கள். அவர்கள் நோய்வாய்ப் படும் காலத்தில் யார் உடனிருந்து பார்த்துக் கொள்வார்கள்..

சொந்த ஊரில் தனித்தனியாக இருந்தாலும் பக்கத்து சந்தில் பெரியம்மா வீடு, அடுத்த தெருவில் மாமா வீடு, நினைத்தால் போய்ட்டு வரும் தூரத்தில் தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி என சொந்தங்கள் கூடி இருக்கும். இங்கு இரண்டு வீடு தள்ளி யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் சொந்தப் பந்தங்களின் வாசமே இல்லாமல், தாத்தா பாட்டியின் பாசமே அறியாமல், சொந்த ஊரின் மகிமையே தெரியாமல் ஒரு தலைமுறையினர் இன்று தலைக் காட்ட ஆரம்பித்துவிட்டனர்..

அலைபேசியில் மட்டும் தாத்தா பாட்டி சொந்தப் பந்தங்களுடன் பேசி, அலைபேசியில் மட்டும் பாசத்தை பகிர்ந்துக் கொண்டு, அலைபேசியில் மட்டும் மழை வந்தாதா வெயில் அடித்ததா என்றுக் கேட்டு கொண்டு, அலைபேசியில் மட்டும் ஏக்கங்களையும் ஒரு சில கண்ணீர்த் துளிகளையும் சிந்தி விட்டு மற்ற நேரத்தில் கண்டுக்கொள்ளாமல், சொந்தபந்தங்களின் நினைவை அனைத்து வைக்க, அது ஒன்றும் அலைபேசியில் இருக்கும்
"மொபைல் டேட்டா" அல்ல.

சொந்த ஊர் பாசம், சொந்தக்காரர்களின் மீதான நேசம் என்பதெல்லாம் வெள்ளிக்கிழமை இரவு தோன்றி ஞாயிற்றுக் கிழமை நடுராத்திரியில் மறைந்து விடும் கனவாக மாறி வருகிறது.

திருமணத்திற்கு பிறகும், சொந்த ஊரில் சொந்தங்களுடன் வாழ வாய்ப்பு அமைந்தவர்கள் பாக்கியசாலிகள். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...