Skip to main content
நாகரீக நகர
வாழ்க்கையில் வளரும்
குழந்தை நான்...

பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன்
விளையாடத் தான் ஆசை
ஆனால்
அவர்கள் கதவைத் திறப்பதாகவே
தெரியவில்லை
ஏனென்றால்
என் வீட்டுக் கதவு
எப்பொழுதும் மூடியே இருக்கின்றது...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments