Skip to main content

பட்டதாரிகளும் அரசுத் தேர்வுகளும்...

மஹாராஷ்டிராவில் நான்காம் வகுப்பு தகுதி நிர்ணயிக்கப்பட்ட, ஐந்து பேர் மட்டுமே தேவைப்படும் சுமைத் தூக்கும் தொழிலாளர் வேலைக்கு மொத்தம் 2424 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதுக்கூட பரவாயில்லை... அதில் 984 பேர் பட்டதாரிகள் மேலும் எம்.பில் படித்த ஐந்து பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தான் பத்தாம் வகுப்பைத் தகுதியாகக் கொண்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பலதரப்பட்ட பட்டதாரிகளும் பாரபட்சம் பார்க்காமல் லட்சக்கணக்கில் எழுதுகிறார்கள் என்றால், மஹாராஷ்டிராவில் நான்காம் வகுப்பைத் தகுதியாகக் கொண்ட ஐந்து பேர் மட்டுமே தேவைப்படும் வேலைக்கு ஆயிரக்கணக்கில் விண்ணப்பித்திருக்கின்றனர்..

வேலையின்மையால் பட்டதாரிகளின் நிலைமை இந்த அளவுக்கு மலிந்துவிட்டதா அல்லது அரசு வேலை என்பதனால் தாங்களாகவே தங்கள் தகுதியைக் குறைத்துக் கொள்கின்றார்களா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

ஆனால் அரசு வேலைதான் வேண்டும் என்று எண்ணுபவர்கள், அவர்களது துறைச் சார்ந்த படிப்புக்கு ஏற்றாற்போல் உள்ள அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஆனால் இது போல குறைந்த தகுதியுடையத் தேர்வுகளுக்கு, அதிகம் படித்தவர்கள் விண்ணப்பிக்கும் போது அந்தத் தேர்வுகளுக்கான குறிக்கோளே தடம் மாறிவிடுகிறது. யாருக்காக அந்த தேர்வுகள் ஏற்படுத்தப்பட்டதோ அதன் உண்மையான நோக்கம் நிறைவேறாமலேயே போய்விடுகின்றன.

ஒருவேளை உண்மையாகவே வேலையின்மையினால் தான் விண்ணப்பிக்கிறார்கள் என்றால் இத்தகைய செயல்களை, பிற்காலத்தில் கடுமையாக அச்சுறுத்தப் போகும் பெரும் அபாயம் அழைக்கும் அழைப்பு மணியாகவே கருதியாக வேண்டும்..

நன்றாக படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும்; நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச ஆசைக்கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் பல பேரின் கனவுகள் அதாள பாதாளத்தில் விழுந்து விடும். பரிசோதிக்கப்படாமலேயே பலரது திறமைகள் வீணாகிப் போகும் நிலைமை ஏற்படும்.

அதேப் போல, எப்படி இருந்தாலும் வேலைக் கிடைக்காது அதற்கு ஏன் இவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் போகப் போக ஆழமாக வேரூன்றிவிட்டால், கல்வியை ஒதுக்குகின்ற ஒரு சமூகம் உருவாக ஆரம்பித்துவிடும்.

"வறுமையின் நிறம் சிகப்பு" என்ற திரைப்படத்தில் கடுமையான பசியில் இருக்கும் கமலஹாசன் சாக்கடைக்குள் விழுந்து கிடக்கும் பழத்தை எடுத்து கழுவி சாப்பிடும் நிலையில் இருப்பார். அப்பொழுது பல படித்த பட்டதாரிகள் அந்த ஒற்றை பழத்திற்காக அடித்துக் கொண்டு சண்டை போடுவது போல கற்பனையில் ஒரு காட்சி அவர் கண்முன் வந்துப் போகும். அது போன்றதொரு கொடூர நிலைமை இனி வரப்போகும் பட்டதாரிகளுக்கு ஒருபோதும் நேர்ந்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டத் தோன்றுகிறது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...