பெங்களூரில் புத்தாண்டு இரவில் சாலையில் தனியாக நடந்துச் செல்லும் பெண்ணிடம் இரண்டு ஈனப்பிறவி இளைஞர்கள் தகாத முறையில் நடந்து கொண்ட ஒரு காணொளி வெளி வந்துள்ளது.
தப்பிச் செல்ல முயலும் அந்தப் பெண்ணை தன் நண்பனுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து, முத்தமிட்டு கொடுமைப்படுத்துகிறான் அந்தக் கொடூரன். இதை ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தடுக்க, அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்க ஒருத்தரும் முன்வரவில்லை. இத்தனைக்கும் இது நடந்தது நடுரோட்டில்.
நீங்கள் என்ன பாடம் நடத்தினாலும்,போராட்டம் செய்தாலும், அம்மாவாக இருந்தாலும் சகோதரியாக இருந்தாலும் பெண் என்றால் எங்களுக்கு ஒரு சதைப்பிண்டம். அவ்வளவுதான். அவளை எங்கே எப்படி வேண்டுமானாலும் வன்புணர்வு செய்யுமளவிற்கு மகாமட்டமான கேவலமான இளைஞர் கூட்டம் ஒருபுறம்.
கண்முன்னே கொலை நடந்தாலும் சரி, கொள்ளை நடந்தாலும் சரி கற்பழிப்பு என்றாலும் சரி நமக்கென்னவென்று வேடிக்கைப் பார்க்கும் கோழைத்தனமானக் கூட்டம் ஒருபுறம்.
மறதி மட்டுமல்ல வேடிக்கைப் பார்ப்பதும் நம் நாட்டின் தேசிய வியாதியாகிவிட்டது. வேடிக்கைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு செயலில் இறங்கிவிட்டால் பாதிக் குற்றங்கள் குறைந்துவிடும். தவறுச் செய்பவர்களின் எண்ணிக்கைக் குறைகிறதோ இல்லையோ கண்டிப்பாகத் தவறுகளின் எண்ணிக்கைக் குறைந்துவிடும்.
தவறைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கும் நாம் கோழைத்தனமானவர்கள் மட்டுமல்ல நாமும் குற்றவாளிகள் தான்.
தவறுச் செய்பவர்கள் மட்டுமல்ல நாமும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.
நடுரோட்டில் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்யுமளவிற்கு, மேலும் அதை எந்தவித எதிர்ப்புணர்ச்சியும் இல்லாமல் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கும் அளவிற்கு மானங்கெட்ட அசிங்கமான கேவலமான மனச்சாட்சியைத் தொலைத்த மனிதத் தன்மையை இழந்துவிட்ட ஜடங்களாகிவிட்டோமா நாம்...?
கார்த்திக் பிரகாசம்...
தப்பிச் செல்ல முயலும் அந்தப் பெண்ணை தன் நண்பனுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து, முத்தமிட்டு கொடுமைப்படுத்துகிறான் அந்தக் கொடூரன். இதை ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தடுக்க, அந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்க ஒருத்தரும் முன்வரவில்லை. இத்தனைக்கும் இது நடந்தது நடுரோட்டில்.
நீங்கள் என்ன பாடம் நடத்தினாலும்,போராட்டம் செய்தாலும், அம்மாவாக இருந்தாலும் சகோதரியாக இருந்தாலும் பெண் என்றால் எங்களுக்கு ஒரு சதைப்பிண்டம். அவ்வளவுதான். அவளை எங்கே எப்படி வேண்டுமானாலும் வன்புணர்வு செய்யுமளவிற்கு மகாமட்டமான கேவலமான இளைஞர் கூட்டம் ஒருபுறம்.
கண்முன்னே கொலை நடந்தாலும் சரி, கொள்ளை நடந்தாலும் சரி கற்பழிப்பு என்றாலும் சரி நமக்கென்னவென்று வேடிக்கைப் பார்க்கும் கோழைத்தனமானக் கூட்டம் ஒருபுறம்.
மறதி மட்டுமல்ல வேடிக்கைப் பார்ப்பதும் நம் நாட்டின் தேசிய வியாதியாகிவிட்டது. வேடிக்கைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு செயலில் இறங்கிவிட்டால் பாதிக் குற்றங்கள் குறைந்துவிடும். தவறுச் செய்பவர்களின் எண்ணிக்கைக் குறைகிறதோ இல்லையோ கண்டிப்பாகத் தவறுகளின் எண்ணிக்கைக் குறைந்துவிடும்.
தவறைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கும் நாம் கோழைத்தனமானவர்கள் மட்டுமல்ல நாமும் குற்றவாளிகள் தான்.
தவறுச் செய்பவர்கள் மட்டுமல்ல நாமும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.
நடுரோட்டில் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்யுமளவிற்கு, மேலும் அதை எந்தவித எதிர்ப்புணர்ச்சியும் இல்லாமல் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கும் அளவிற்கு மானங்கெட்ட அசிங்கமான கேவலமான மனச்சாட்சியைத் தொலைத்த மனிதத் தன்மையை இழந்துவிட்ட ஜடங்களாகிவிட்டோமா நாம்...?
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment