Skip to main content

ஒருநாள் ஊதியம்

கடந்த நூறு வருடத்தில் காணாத வறட்சியால் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்தது மற்றும் காவிரி நீர் முழுதாக கிடைக்காமல் போனது ஆகிய காரணங்களால் பயிர்களெல்லாம் வாடிப் போய் கருகி விட்டன. பொங்கலுக்கு புதுப்பொலிவுடன் உற்சாகமாகத் தயாராகும் விவசாயிகள் இந்தமுறை கலங்கிப் போய் நிற்கின்றனர் அரசு கணக்கெடுப்பின்படி இதுவரை பதினேழு பேர் தற்கொலை மற்றும் மனம் தாங்காமல் உயிர்த் துறந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையில் மனம் தளராமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் இன்னும் ஏராளம்பேர் இருக்கின்றனர்.
அவர்களின் நம்பிக்கைக்கு கைக்கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்ற நம் ஒருநாள் ஊதியத்தை அந்த விவசாயிகளுக்கென்று ஒதுக்குவோம். நம் பலபேரின் ஒருநாள் ஊதியம் ஒன்று சேர்த்தால் நம்மால் முடிந்தவரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவலாம். ஏனென்றால் இது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. நம் பிரச்சனை. அவர்களின் சோற்றுப் பிரச்சனை மட்டுமல்ல நம் சோற்றுப் பிரச்சனையும் கூட. நம் சோற்றுக்காக உழைப்பவர்களின் பிரச்சனை.

ஒருநாள் ஊதியம்.. ஒன்று கூடுவோம்.. ஒன்று கூட்டுவோம்..

நண்பர்கள் தங்கள் விருப்பத்தைப் பின்னூட்டம் செய்யவும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...