Skip to main content

Posts

Showing posts from April, 2017
நேற்று நள்ளிரவு இரண்டு மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து அண்ணா சாலையை இணைக்கும் சாலையில் நூறு அடிக்கு ஒரு திருநங்கை, தூக்கிய அலங்காரத்துடனும் மார்புத் தெரிய துணியை விலக்கிக் கொண்டும் கடந்து போகும் வண்டிகளிடம் கையைக்காட்டி நின்றுக் கொண்டிருந்தனர். நகரத்தில் நள்ளிரவு நேரங்களில் சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் கூட மிரட்டித் துரத்தும் காவல் துறையினரின் கண்களில் இருந்து இவர்கள் எப்படி மறைந்திருந்தனர் என்று தெரியவில்லை. கோபம் வருமுன் இரக்கம்தான் முதலில் வந்தது. விதி இரக்கமில்லாமல் அவர்களுடைய வாழ்க்கையில் விளையாடி நடுநிசி வீதிகளில் இத்தகைய சூழ்நிலையில் நிற்க பணித்ததை எண்ணி மனம் மிகுந்த வருத்தத்தை அடைந்தது. ஜோதி நரசிம்மனின் "கலைவாணி- ஒரு பாலியல் தொழிலாளியின் கதை", ரேவதியின் "உருவமும் உணர்வும்" போன்ற புத்தகத்தில் வரும் மாந்தர்களின் கதைகள் கண்முன்னே காட்சியாய் விரிந்தது. பிழைப்புக்கு வழித் தெரியாமல் விபசாரத்தில் ஈடுபடும் அவர்கள் ஏகப்பட்ட வன்கொடுமைகளையும் அனுபவிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மூன்றாம் பாலினம் என்று பொதுவாக அங்கீகர...
விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றால் பொதுவாக "மதியத்துக்கு என்னக் குழம்பு வைக்கட்டும்.? இன்னைக்கு இந்தப் பொரியல் செய்யட்டுமா.? நைட் தோசைக்கு தக்காளி சட்னி அரைக்கட்டுமா இல்ல சாம்பார் போதுமா.?" என்று கேட்பவள் இந்தமுறை "உனக்கு எந்த மாதிரி பொண்ணு பாக்கட்டும்" என்று கேட்டாள். ஒருகணம் என்னை தனியாகத் தூக்கியெறிந்துவிட்டு காலம் மட்டும் எங்கேயோ வெகு தொலைவிற்கு வந்துவிட்டதைப் போல் தோன்றியது. காலச்சக்கரத்தின் அதிவேகமான ஓட்டம் மனதில் கொஞ்சம் பதைபதைப்பை உண்டாக்கியது. "உனக்கு ஏதோ பொண்ண புடிச்சு இருந்தக்கூட சொல்லு. பேசலாம்" என்றவளிடம் "அப்படிலாம் ஒண்ணும் இல்லம்மா" என்றதற்கு, பின்ன இப்படி தாடி வெச்சிருந்தா எந்தப் பொண்ணு தான்டா உன்ன பாக்கும். ஒழுங்கா ஷேவ் பண்ணிக்கிட்டு நெத்தில குங்குமம் வச்சிட்டு போனா பாக்காம போன பொண்ணுக்கூட திரும்பிவந்து ஒரு மொற பாத்துட்டு போகும் என்று கன்னத்தில் இடித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டாள். பெண் பற்றியும்,கல்யாணம் பற்றியும் அம்மா வெளிப்படையாக நேருக்கு நேர் பேசுவது இதுவே முதல்முறை. எந்த மாதிரி பொண்ணு பாக்கட்டும்..? என்று அவள் வீசியெறிந்த க...
#நம்பிக்கை யாவரும் யாரோ ஒருவருக்கு நம்பிக்கைக்குரியவர்களே...!!! கார்த்திக் பிரகாசம் ...
நடுநிசியில் காணாமல் போகும் மின்சாரம் கண்டிராத மனித உருப்படிகளை இருளுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
நனைப்பது வெயில்தான் என்றாலும் உடல் முழுதும் ஈரம்... கார்த்திக் பிரகாசம்...
புரியாத பிரியம் பிரியும்போது புரியும்...!!! அக்கணம் தேக்கி வைத்த பிரியமெல்லாம் தெளிந்த நீரோடையாகும்...!!! விநாடி முள்ளின் ஓட்டத்தை இதயத் துடிப்பு முந்தும்...!!! சினிமா பாட...
பிறந்து சில தினங்களே ஆன நாய்க்குட்டியொன்றை ஆசை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்திருக்கிறாள் தோழி. இரவு ஏதொரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நாய்க்குட்டி திடீரென்று எழுந்து வந்து அவளுடைய கைகளுக்கு நடுவே தலைச்சாய்த்து படுத்து உறங்கியிருக்கிறது. பசிக்கு அழுதக் குழந்தை தன் பால்கனிகளில் பாலுண்டு நன்கு பசியாறி உறங்குவது போலொரு காட்சிபேழை மனதில் மின்னலிட்டிருக்கிருக்கும் போலிருக்கிறது. சொல்லும் போது அவளுடைய கண்களில் அப்படியொரு ஆனந்த ஆர்ப்பாட்டம் அரங்கேறியது. பெண்ணாகப் பிறந்ததற்காக அவள் கொண்ட பெருமை அவளின் ஒவ்வொரு கண் அசைவிலும் அகப்பட்டது. திருமணமாகாத அவள், ஆனந்தத்தில் ஒரு நிமிடம் தாய்மையின் சிலிர்ப்பை அனுபவித்திருக்கிறாள். பின்னே தாய்மையை உணர திருமணமாக வேண்டுமா என்ன பெண்ணாகப் பிறந்தாலே போதுமே..! கார்த்திக் பிரகாசம்...
உன் இதழ் ரேகைகள் இன்னும் என் இதயத்தின் இளங்குருதியில் அணுவணுவாய் அலைந்து திரிகிறதே எப்படிக் கடந்துச் செல்ல...!!! உன் மழலைக்குரல் ஆதி முதல் அந்தம் வரை உடலின் அனைத்து புலன்களையும் பாரபட்சமின்றி அணைத்துச் செல்கிறதே எப்படிக் கடந்துச் செல்ல...!!! நீ வீசிய புன்னகை என் கண்களில் வானவில்லை மிஞ்சிய வண்ணங்களை இன்னும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறதே எப்படிக் கடந்துச் செல்ல...!!! இலக்கின்றி எங்கெங்கோ அலைந்தாலும் இறுதியில் உன் நினைவே இலக்காகி மனம் உருகி நிற்கிறதே எப்படிக் கடந்துச் செல்ல...!!! உனை நான் எப்படிக் கடந்துச் செல்ல...!!! கார்த்திக் பிரகாசம்...
இரண்டு பெண்கள் சந்தித்துக் கொள்கின்றனர். அவர்கள் தோழிகள் இல்லை. சொந்தபந்தம் இல்லை. உடன் படித்தவர்கள் கிடையாது. இதற்குமுன் ஒருவருக்கொருவர் அறிமுகமே கிடையாது. இவர்கள் சந்தித்தற்கான காரணம் இதுதான். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட இருபெரும் கொடும்சம்பவங்களின் ஆறா காயங்களின் வடுக்கள். இருவரும் சாதிய வன்முறையால் வாழ்க்கைத் தடத்திலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள். "சாதி" என்னும் தீக்கு இரையாகி தங்கள் துணைகளை இழந்த திவ்யா மற்றும் கவுசல்யா. தற்போது கவுசல்யா, சாதியம் மற்றும் கவுரவக் கொலை ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யும் மத்திய அரசு அமைப்பு ஒன்றில் பணியாற்றி வருகிறார். அக்கம் பக்கம் வாழ்வோரின் கேலி பேச்சுகளுக்குள்ளாகி வெளியே வேறெங்கும் செல்லாமல் கல்லூரிக்கு மட்டும் சென்று வருகிறார் திவ்யா. ஏதேதோ ஆசைகளுடன் தொடங்கும் வாழ்க்கை அர்த்தமற்ற மனிதநேயமற்ற செயல்களால் திக்கற்ற இருளான திசைகளில் திரும்பிவிடுகிறது. கார்த்திக் பிரகாசம்...
காமமில்லா காதல் இங்கு யாருக்கு வேண்டும்...!!! கார்த்திக் பிரகாசம்...
"எட்டாம் வகுப்பு வரை ஹிந்தியைக் கட்டாயமாக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யபட்டுள்ளது . சாலையின் மைல்கற்கள், வங்கிகளின் தானியங்கி பண இயந்திரங்கள், ரயில்வண்டி முன்பதிவுத் தளம் என அன்றாட வாழ்க்கையில் ஹிந்தியை மெல்ல மெல்ல செருகிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்நிலையில் அடுத்த முயற்சியாக " அனைத்து மாநிலங்களிலும் எட்டாம் வகுப்பு வரை ஹிந்தியைக் கட்டாயமாக்க வேண்டும்" என்று மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு மாபெரும் "ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தை" எடுத்து நடத்தவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. திணிக்க முனைந்தால் மீண்டும் திமிறி எழுவோம்.. கார்த்திக் பிரகாசம்...

ஆணிவேராய் நிற்கும் அம்பேத்கர் மன்றங்கள்...

சிறுவர் மற்றும் பெண்களின் கல்வியை மேம்படுத்தவும், ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரச் சிக்கல்களைப் போக்கவும், இளைஞர்கள் சமூக விரோதச் செயல்களில் வழித்தவறி சென்றுவிடாமல் நல்வழிப்படுத்தவும் வடசென்னையின் பல பகுதிகளில் அம்பேத்கர் மன்றங்கள் இன்னும் ஆணிவேராய் நின்றுக் கொண்டிருக்கின்றன. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இம்மன்றங்களை ஆரம்பித்த இளைஞர்கள் இன்றுவரை தம் மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற உறுதுணையாய் இருந்து உதவிக் கொண்டிருக்கின்றனர். அந்தக் கூடத்தில் மாலை வகுப்புக்காகக் கூடியிருந்த சிறுவர்களிடம், உங்களுக்கு பிடித்த தலைவர் யார்.? யாரைப் போல் ஆகவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்..? என்றுக் கேட்ட அடுத்த நொடி, "ஒரு சிறுவன் எழுந்து எனக்கு அம்பேத்கரைப் பிடிக்கும். அவரைப் போல ஆக நான் விரும்புகிறேன்"...!! என்று பொட்டில் அடித்தது போல் கூறினான். கைத்தட்டல்கள் ஓய கடிகார முட்கள் வேகமாய் ஓட வேண்டியிருந்தது காலங்கள் மாறிவிட்டன. கனவுகள் நிறைவேறவில்லை ஆனால் நம்பிக்கை இன்னும் நீர்த்து போய்விடவில்லை... கார்த்திக் பிரகாசம்...
இரவு 11:35 மணி.. அறுபது வயதைக் கடந்த முதியவர். எதிரில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன். அனேகமாகப் பேரனாக இருக்கக்கூடும். அந்தச் சிறுவன் சிந்தாமல் சிதறாமல் ரசித்து ரசித்து ருசித்து ருசித்து ஒவ்வொரு துளியாக ஐஸ்கிரீமை அனுபவித்துக் கொண்டிருந்தான். அதை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவரின் உதட்தோர புன்னகையை வெள்ளை மீசையும் தாடியும் தடுக்க, அவரின் கண்கள் எவ்வித தடையும் இல்லாமல் அகல விரிந்து சிரித்துக் கொண்டிருந்தன. இதைவிட வேறென்ன வேண்டும் இன்றைய இனிதே வழியனுப்ப...!!! கார்த்திக் பிரகாசம்...

தண்ணீர் தண்ணீர்...!!!

கிணறு, ஏரி, குளம், குட்டை , ஆறு என அனைத்து நீர் ஆதாரங்களும் நீரைக் கண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீரும் இருந்த சுவடே இல்லாமல் நீர்த்து போய்விட்டன. குடிநீர் பற்றாக்குறையினால் உள்ளூர் மாவட்டங்களிலேயே வீட்டில் "தண்ணீர் கேன்களை" உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். காவிரி, பவானி, மேட்டூர் என பல்வேறு நீர் ஆதாரங்களையும், ஓடிக் கொண்டே இருக்கும் நதிகளையும், அசராமல் நிற்கும் நீர் நிலைகளையும் சுமந்து கொண்டிருந்த மாவட்டங்கள் இன்று பாட்டிலில் அடைத்த தண்ணீர் கேன்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றன. வானம் பார்த்த மண் வாயைப் பிளந்து மழையை எதிர்பார்த்து தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் கண்டிப்பாக மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென சில வானிலை நிபுணர்களின் தரப்பிலிருந்து கணிப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு மழை வரும்பட்சத்தில்(கண்டிப்பாக வரவேண்டும்) அதில் ஒரு துளியைக்கூட வீணடித்து விடாமல் சேமித்திட வேண்டும். இனிவரும் காலத்தில் சிக்கனத்தில் தண்ணீருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். மறைமுகமாக தண்ணீர் அதிகம் செலவாகும் அத்தனை விடயங்களைய...
இடைத் தேர்தலை ரத்து செய்வது மட்டும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. மாறாக சம்மந்தப்பட்ட வேட்பாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ தேர்தலில் நிற்கத் தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும். இப்படி பணம் விநியோகித்து வெல்பவர்கள்தான், இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க ஊழலிலும் இன்னபிற குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். "பணம் கொடுத்தால் ஜெயித்துவிடலாம்" என்று முழுமூச்சாக இறங்கிவிட்ட அரசியல் கட்சிகளின் மனோபாவத்தை மாற்றிட தேர்தல் ஆணையம் சில கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும். இதை ஏதொரு தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தலுக்கானப் பிரச்னை என்று அலட்சியமாக விடமுடியாது. இது நாட்டின் "ஜனநாயகத்தை அரித்துக் கொண்டிருக்கும் கரையான் புற்று". தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்ததன் மூலம் எந்த நோக்கத்திற்காக நிறுத்தப்பட்டதோ அதை அடைய முடிந்ததா..? அதே வேட்பாளர்கள் அதே முறையைக் கடைபிடித்து அதே இடத்தில் வெல்கின்றனர். காரணம் வலிமையானக் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இல்லாததே. சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் இப்போது...

நான் பூலான்தேவி...!!!

"மல்லா" என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறந்து, வாழ்க்கையின் போக்கில் கொள்ளைக்காரியாக மாறி பின்பு மனம்திருந்தி தண்டனையை அனுபவித்து மக்களவை உறுப்பினராக இருந்து சுட்டுக்கொல்லப்பட்ட பூலான் தேவியின் மறுபக்கத்தைக் காட்டும் வாழ்க்கை வரலாறுதான் "நான் பூலான்தேவி". தவறென்று தெரிந்தே செய்பவர்கள், அந்தத் தவறைச் செய்வதற்கான நியாயங்களை தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளின் மூலமாகவும், அநியாயங்களின் மூலமாகவும் வகுத்து வைத்திருப்பார்கள். பூலான் தேவி அச்சுறுத்தும் கொள்ளைக்காரியாகவும், பழிவாங்கும் கொலைக்காரியாகவும் ஆனதற்கு பின்னாலும் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் நியாங்களாக உருமாறி நிற்கின்றன. சிறுவயதில் இந்தச் சமூகம் அவருடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய கொடுமைகளையே, பூலான் தேவி பிற்காலத்தில் இந்தச் சமூகத்தின் மீது பிரதிபலித்திருக்கிறார். அவர் செய்தது சரியா தவறா என்ற விவாதத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு முதலில் அவர்பக்க நியாயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு மு.ந.புகழேந்தி தமிழில் மொழிப்பெயர்த்துள்ள " நான் பூலான்தேவி" உதவியாக இருக்கும். அ...