Skip to main content

நான் பூலான்தேவி...!!!

"மல்லா" என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறந்து, வாழ்க்கையின் போக்கில் கொள்ளைக்காரியாக மாறி பின்பு மனம்திருந்தி தண்டனையை அனுபவித்து மக்களவை உறுப்பினராக இருந்து சுட்டுக்கொல்லப்பட்ட பூலான் தேவியின் மறுபக்கத்தைக் காட்டும் வாழ்க்கை வரலாறுதான் "நான் பூலான்தேவி".

தவறென்று தெரிந்தே செய்பவர்கள், அந்தத் தவறைச் செய்வதற்கான நியாயங்களை தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளின் மூலமாகவும், அநியாயங்களின் மூலமாகவும் வகுத்து வைத்திருப்பார்கள்.

பூலான் தேவி அச்சுறுத்தும் கொள்ளைக்காரியாகவும், பழிவாங்கும் கொலைக்காரியாகவும் ஆனதற்கு பின்னாலும் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் நியாங்களாக உருமாறி நிற்கின்றன. சிறுவயதில் இந்தச் சமூகம் அவருடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய கொடுமைகளையே, பூலான் தேவி பிற்காலத்தில் இந்தச் சமூகத்தின் மீது பிரதிபலித்திருக்கிறார். அவர் செய்தது சரியா தவறா என்ற விவாதத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு முதலில் அவர்பக்க நியாயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு மு.ந.புகழேந்தி தமிழில் மொழிப்பெயர்த்துள்ள " நான் பூலான்தேவி" உதவியாக இருக்கும்.

அவர் கொலைக்காரி என்பதும்,கொள்ளைக்காரி என்பதும் உண்மையே. ஆனால் அவர் அவ்வாறு ஆனதற்கு இச்சமூகம் செய்த முன்வினைகள் ஏராளம்.

கார்த்திக் பிரகாசம்...


Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...