Skip to main content

தண்ணீர் தண்ணீர்...!!!

கிணறு, ஏரி, குளம், குட்டை , ஆறு என அனைத்து நீர் ஆதாரங்களும் நீரைக் கண்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீரும் இருந்த சுவடே இல்லாமல் நீர்த்து போய்விட்டன. குடிநீர் பற்றாக்குறையினால் உள்ளூர் மாவட்டங்களிலேயே வீட்டில் "தண்ணீர் கேன்களை" உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். காவிரி, பவானி, மேட்டூர் என பல்வேறு நீர் ஆதாரங்களையும், ஓடிக் கொண்டே இருக்கும் நதிகளையும், அசராமல் நிற்கும் நீர் நிலைகளையும் சுமந்து கொண்டிருந்த மாவட்டங்கள் இன்று பாட்டிலில் அடைத்த தண்ணீர் கேன்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றன. வானம் பார்த்த மண் வாயைப் பிளந்து மழையை எதிர்பார்த்து தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்து வரும் நாட்களில் கண்டிப்பாக மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென சில வானிலை நிபுணர்களின் தரப்பிலிருந்து கணிப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு மழை வரும்பட்சத்தில்(கண்டிப்பாக வரவேண்டும்) அதில் ஒரு துளியைக்கூட வீணடித்து விடாமல் சேமித்திட வேண்டும். இனிவரும் காலத்தில் சிக்கனத்தில் தண்ணீருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். மறைமுகமாக தண்ணீர் அதிகம் செலவாகும் அத்தனை விடயங்களையும் கண்டறிந்து தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். உதாரணமாக தினசரி வீடுகளில் கழிவறை மற்றும் குளியலறைகளில் வீணாக ஊற்றப்படும் நீரின் அளவைக் குறைக்கலாம். துணி துவைக்கும் போது, காய்கறி மற்றும் பாத்திரங்களைக் கழுவும் போது என எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தண்ணீரின் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும். பயன்படுத்திய நீரை மறுசுழற்சிக்குட்படுத்தி வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்த வேண்டும். நிலத்தடி நீரைக் காப்பதற்கான மற்றும் உயர்த்துவதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

"தண்ணீர் போல் செலவழிக்காதே" என்று சொல்வடையைக்கூட பயன்பாட்டிலிருந்து அகற்ற வேண்டும். "தண்ணீர் வேண்டு"மென்றால் இதுமட்டுமில்லாமல் இன்னும் பல வேண்டும்"களைச் செய்தே ஆக வேண்டும்.

இப்பிறவிலேயே தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். இது நம் தலைமுறைக்கும், நம்மை அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் நாம் செய்தாகவேண்டிய கடமை மட்டுமல்ல கட்டாயமும்கூட.. நீரைச் சேமிக்கவும், சிக்கனமாகப் பயன்படுத்தவும் முனைவோம்

மழை வரட்டும். வறண்டு போன மண்ணுக்கு வளம் கிடைக்கட்டும்.மக்கள் மறுவாழ்வு பெறட்டும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...