Skip to main content
இடைத் தேர்தலை ரத்து செய்வது மட்டும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. மாறாக சம்மந்தப்பட்ட வேட்பாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ தேர்தலில் நிற்கத் தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும்.

இப்படி பணம் விநியோகித்து வெல்பவர்கள்தான், இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க ஊழலிலும் இன்னபிற குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். "பணம் கொடுத்தால் ஜெயித்துவிடலாம்" என்று முழுமூச்சாக இறங்கிவிட்ட அரசியல் கட்சிகளின் மனோபாவத்தை மாற்றிட தேர்தல் ஆணையம் சில கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும்.

இதை ஏதொரு தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தலுக்கானப் பிரச்னை என்று அலட்சியமாக விடமுடியாது. இது நாட்டின் "ஜனநாயகத்தை அரித்துக் கொண்டிருக்கும் கரையான் புற்று".

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்ததன் மூலம் எந்த நோக்கத்திற்காக நிறுத்தப்பட்டதோ அதை அடைய முடிந்ததா..? அதே வேட்பாளர்கள் அதே முறையைக் கடைபிடித்து அதே இடத்தில் வெல்கின்றனர். காரணம் வலிமையானக் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இல்லாததே.

சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் இப்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் ஆர்.கே நகர். இந்தப் பட்டியல் இனி நீளக்கூடாது. அதற்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முறைக்கேட்டில் ஈடுபட நினைக்கும் அரசியல் கட்சிகளுக்குப் பயத்தை ஏற்படுத்த வேண்டும்.

"குற்றம் செய்தவனையும் கண்டிக்காமல், அந்தக் குற்றம் நிகழ்வதற்கான அடிப்படைக் காரணத்தையும் கண்டறிந்து களையாமல்" நியாயத்தை எப்படி நிலைநாட்ட முடியும்..!

சில சமயங்களில் தண்டனைகள் கடுமையானால்தான், தெரிந்தே செய்யப்படும் குற்றங்களும் முறைக்கேடுகளும் குறையும்.அத்தகைய விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் உடனடியாக உண்டாக்க வேண்டும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...