Skip to main content
விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றால் பொதுவாக "மதியத்துக்கு என்னக் குழம்பு வைக்கட்டும்.? இன்னைக்கு இந்தப் பொரியல் செய்யட்டுமா.? நைட் தோசைக்கு தக்காளி சட்னி அரைக்கட்டுமா இல்ல சாம்பார் போதுமா.?" என்று கேட்பவள் இந்தமுறை "உனக்கு எந்த மாதிரி பொண்ணு பாக்கட்டும்" என்று கேட்டாள். ஒருகணம் என்னை தனியாகத் தூக்கியெறிந்துவிட்டு காலம் மட்டும் எங்கேயோ வெகு தொலைவிற்கு வந்துவிட்டதைப் போல் தோன்றியது. காலச்சக்கரத்தின் அதிவேகமான ஓட்டம் மனதில் கொஞ்சம் பதைபதைப்பை உண்டாக்கியது.

"உனக்கு ஏதோ பொண்ண புடிச்சு இருந்தக்கூட சொல்லு. பேசலாம்" என்றவளிடம் "அப்படிலாம் ஒண்ணும் இல்லம்மா" என்றதற்கு, பின்ன இப்படி தாடி வெச்சிருந்தா எந்தப் பொண்ணு தான்டா உன்ன பாக்கும். ஒழுங்கா ஷேவ் பண்ணிக்கிட்டு நெத்தில குங்குமம் வச்சிட்டு போனா பாக்காம போன பொண்ணுக்கூட திரும்பிவந்து ஒரு மொற பாத்துட்டு போகும் என்று கன்னத்தில் இடித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டாள். பெண் பற்றியும்,கல்யாணம் பற்றியும் அம்மா வெளிப்படையாக நேருக்கு நேர் பேசுவது இதுவே முதல்முறை.

எந்த மாதிரி பொண்ணு பாக்கட்டும்..? என்று அவள் வீசியெறிந்த கேள்வி இதுவரையில் மனம் கண்டிராத கற்பனைத் தேனைச் சுரக்கச் செய்தது. நிலவை நிமிர்ந்து பார்க்க, நானே தனித்து இருக்கின்றேன் என்னிடம் போய் யோசனைக் கேட்கிறாயே..! என்று அலுத்துக் கொள்வதுபோல் அது மேகங்களைப் போர்த்தி தன்னை மறைத்துக் கொள்ள முயன்றது. தர்ம சங்கடம் தரவேண்டாமென்று தலையைக் குனிந்து கொண்டேன். கற்பனைக் கயிறோ அறுந்து அறுந்து பிணைந்தது உறக்கமோ விழியை பிரித்து பிரித்து விலகிச் சென்றது.

பால்கனியில் நானும் நிலவும் தனித்திருக்க அன்றைய இரவோ விருப்பமில்லாமல் விடியலை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...