Skip to main content
நேற்று நள்ளிரவு இரண்டு மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் இருந்து அண்ணா சாலையை இணைக்கும் சாலையில் நூறு அடிக்கு ஒரு திருநங்கை, தூக்கிய அலங்காரத்துடனும் மார்புத் தெரிய துணியை விலக்கிக் கொண்டும் கடந்து போகும் வண்டிகளிடம் கையைக்காட்டி நின்றுக் கொண்டிருந்தனர். நகரத்தில் நள்ளிரவு நேரங்களில் சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் கூட மிரட்டித் துரத்தும் காவல் துறையினரின் கண்களில் இருந்து இவர்கள் எப்படி மறைந்திருந்தனர் என்று தெரியவில்லை.

கோபம் வருமுன் இரக்கம்தான் முதலில் வந்தது. விதி இரக்கமில்லாமல் அவர்களுடைய வாழ்க்கையில் விளையாடி நடுநிசி வீதிகளில் இத்தகைய சூழ்நிலையில் நிற்க பணித்ததை எண்ணி மனம் மிகுந்த வருத்தத்தை அடைந்தது. ஜோதி நரசிம்மனின் "கலைவாணி- ஒரு பாலியல் தொழிலாளியின் கதை", ரேவதியின் "உருவமும் உணர்வும்" போன்ற புத்தகத்தில் வரும் மாந்தர்களின் கதைகள் கண்முன்னே காட்சியாய் விரிந்தது.

பிழைப்புக்கு வழித் தெரியாமல் விபசாரத்தில் ஈடுபடும் அவர்கள் ஏகப்பட்ட வன்கொடுமைகளையும் அனுபவிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மூன்றாம் பாலினம் என்று பொதுவாக அங்கீகரித்துவிட்டாலும் சமூகத்துடன் இயந்து வாழ்வதற்கான சூழ்நிலையும் கால மாற்றமும் இன்னும் முழுஅளவில் ஏற்படவில்லை. அதற்கு உளவியல் ரீதியிலான சமூக மாற்றம் அவசியம் வேண்டும்.

அதே வேளையில் வாழ்க்கையில் எவ்வளவுதான் இடர்பாடுகள் பிரச்சனைகள் என்றாலும் அவர்களின் இத்தகைய செயல்களையும் எளிதில் நியாயப்படுத்தி விட முடியாது. இதனால் இளம்வயது சிறுவர்கள், விவரமறியா இளைஞர்கள் தவறான வழியில் சென்று வாழ்க்கையைத் தொலைத்துவிடும் அபாயமுள்ளது.

திருநங்கைகள் குறித்து சமூக மாற்றமும், அவர்களின் வாழ்வில் பொருளாதார மாற்றமும் இன்னும் முழுஅளவில் ஏற்படாவிட்டாலும் அதற்கான நம்பிக்கை வேர்கள் ஆங்காங்கே முளைவிட தொடங்கிவிட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கையில் வெறும் இருநூறு ரூபாயுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடந்த "சேலத்தைச் சேர்த்த பிரித்திகா யாஷினி' இன்று "இந்தியாவின் முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டர்" என்ற பெருமையை எட்டிப் பிடித்திருப்பது நம்பிக்கை வேருக்கான அடிநாத சாட்சி.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...