Skip to main content

Posts

Showing posts from May, 2017
அன்புள்ள மூன்றாம் பிறையே விரலில் வைத்த மருதாணி உன் கன்னத்தில் சிவக்கிறதே மருதாணியால் உன் கன்னங்கள் சிவந்ததோ உன் கன்னங்கள் தொட்டு மருதாணி சிவந்ததோ...!!! மருதாணியே முகம் காட்ட மறுப்பவள் நீயே...!!! தாவணி மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மஞ்சள் முகமே ஒருமுறை முகில் துகில் விலக்கி முழுமதி காட்டு முன்ஜென்ம பாவங்கள் தீரட்டும் இன்ஜென்ம பாக்கியங்கள் தொடங்கட்டும் எனக்கு...!!! கார்த்திக் பிரகாசம்...

ஆணிவேராய் நிற்கும் அம்பேத்கர் மன்றங்கள்...

சிறுவர்கள் மற்றும் பெண்களின் கல்வியை மேம்படுத்தவும், ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரச் சிக்கல்களைப் போக்கவும், இளைஞர்கள் சமூக விரோதச் செயல்களில் வழித்தவறி சென்றுவிடாமல் நல்வழிப்படுத்தவும் வடசென்னையின் பல பகுதிகளில் அம்பேத்கர் மன்றங்கள் இன்னும் ஆணிவேராய் நின்றுக் கொண்டிருக்கின்றன. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இம்மன்றங்களை ஆரம்பித்த இளைஞர்கள் இன்றுவரை தம் மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற உறுதுணையாய் இருந்து உதவிக் கொண்டிருக்கின்றனர். "சேவ் டிரஸ்ட்" என்ற அமைப்பு வட சென்னையின் பல பகுதிகளில் விரிந்துள்ள அம்பேத்கர் மன்றங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் மேற்குறிப்பிட்ட செயல்களைத் தொடர்ந்து எவ்வித தங்குதடையுமின்றி வழிநடத்திக் கொண்டிருக்கிறது. சேவ் டிரஸ்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.பாஸ்கர் அவர்கள் இச்செயல்களை முன்னின்று செய்துக் கொண்டிருக்கிறார். இவ்வமைப்பின் மூலம் கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் பாடரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயன் பெறுகின்றனர். பள்ளிப்பாட...

பேருந்து தேவதை

முட்டி மோதும் முட்டக் கண்களால் நொடியில் விழுங்கும் பார்வை விழுங்கியதும் தூக்கியெறியும் கண்சிமிட்டல் மீண்டும் வாரியணைக்க படரும் பார்வை விழியால் விலங்கிட்டு பாவையவள் பார்வையால் பனிப்போர்த் தொடுக்கிறாள்...!!! கார்த்திக் பிரகாசம் ...
அன்றைய நாளில் "நாட்டில் நிகழ்ந்த மிகக் கொடுமையமான மனிதத்தன்மையற்ற செயல் இது" என்பதைத் தவிர வேறென்னவென்று சொல்வது..? மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள உல்ஹாசா நகர் என்னும் பகுதியில், கடையில் இருந்து பலகாரத்தை அனுமதி இல்லாமல் திருடித் தின்றுவிட்டார்கள் என்ற காரணத்திற்காக எட்டு மற்றும் ஒன்பது வயதுள்ள இரண்டு சிறுவர்களைக் கடையின் உரிமையாளரான முகமது பதான் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மேலும் ஆத்திரம் குறையாமல் தன் மகன்களின் மூலம் அந்தச் சிறுவர்களின் தலைமுடியை பாதியாக மழித்து கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்து ஆடையின்றி கண்களில் நீர் கரைபுரண்டோட நின்றிருந்த அந்தச் சிறுவர்களை வீடியோ எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். இதைக் கவனித்துக் கொண்டு நின்றிருந்த அக்கம்பக்கத்து ஆட்கள் ஒருவர் கூட இக்கொடியச் செயலைத் தடுக்கவோ அல்லது தட்டிக் கேட்கவோ முன்வரவில்லை என்பதுதான் இதில் இன்னும் வருத்தமான விஷயம். தின்பண்டத்தின் மீது கைவைத்தவர்கள் கண்டிப்பாக பசியின் கொடுமையினால்தான் செய்திருப்பார்கள்.அந்தப் பலகாரங்களின் மதிப்பு அதிகபட்சம் ஐந்து அல்லது பத்து ரூபாய்க்குள்தான் இருக்கும். எல்லா...

அர்த்தமற்ற பேச்சுகள்...!!!

பேசினோம் என்னனென்னவோ பேசினோம் தோன்றியதெல்லாம் பேசினோம் நேரம் கடந்து பேசினோம் தேவை மறந்து பேசினோம் திசைகள் தொலைந்து பேசினோம் பேச்சின் முடிவில் என்னப் பேசினோமென்று எண்ணிப் பார்த்தப் போது எதுவுமே தோன்றவில்லை ஆதலால் மீண்டும் முதலில் இருந்து பேசினோம்...!!! கார்த்திக் பிரகாசம் ...
பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் ரேங்க் பட்டியல் இந்தாண்டு வெளியிடப்படவில்லை. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களின் மன உளைச்சலை குறைக்கும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார். அதே போல பள்ளிகள் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளின் மதிப்பெண்களை முன்னிறுத்தி விளம்பரம் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. ஊருக்குச் செல்லும் வழியில் பெரும்பாலான இடங்களில் தங்கள் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர் என மதிப்பெண் மற்றும் புகைப்படத்துடன் விளம்பர பலகைகள் பரவலாக வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இது நடப்பதுதான் என்றாலும் இந்தமுறை முதல்மதிப்பெண் என்னவென்று யாருக்குமே தெரியாது என்பதனால், அதைப் பள்ளிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியலை வெளியிடாதது ப...
ஊரில் மழையென அழைப்பொன்று வந்தால் உச்சிக் குளிர்கிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
அனைத்து நல்லது கெட்டதுகளையும் நாமே சொந்தமாக அடிபட்டு அனுபவித்துத்தான் தெளிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வாய்க்கப் பெற்றிருக்கும் இந்த வாழ்க்கையின் மொத்த வாழ்நாளும் போதாது. நம்மை சுற்றியிருக்கும் ஒவ்வொருடைய வாழ்க்கையும் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை நாம் சிறப்பானதாக வகுத்துக் கொள்ள நமக்கு கிடைத்திட்ட கையேடு. ஒருவனின் வாழ்க்கை என்பது அவனைப் பொறுத்தமட்டில் ஓர் அனுபவமாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்கு அது ஒரு பாடம். கார்த்திக் பிரகாசம்...
நீட் தேர்விற்காக மாணவ மாணவிகள் வரம்புக்கு மீறி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது ஒருபுறம் இருக்கட்டும். அவ்வாறு சோதனைச் செய்யும் போது மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். சோதனைச் செய்ய மகளின் உள்ளாடையை கழற்றச் சொல்லும்போது அங்கு குழுமியிருந்த ஒரு தாய்க்கு கூடவா கோபம் வரவில்லை. மகனின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு சோதனைச் செய்யும் போது ஒரு தந்தைக்கு கூடவா எதிர்த்து கேள்விக் கேட்கத் தோன்றவில்லை. முழுக்கை அணிந்திருந்த மகனின் சட்டையை அத்தனைப் பேரின் முன்னிலையிலும் கழற்றச் சொல்லி பெற்றோர்களே கத்திரிக்கோல் வாங்கி வந்து கத்திரிக்கிறார்கள். ஜீன்ஸ் அணிந்து வந்ததை அனுமதிக்காததால் ஓடிப் போய் மாற்றுத் துணி வாங்கி வருகிறார்கள். இதெல்லாம் என்ன மாதிரியான சோதனை முறைகள் என்ற எண்ணம் அத்தருணத்தில் யாருக்கும் எழவில்லையா..? இல்லையென்றால் என்ன மாதிரி சோதனைச் செய்தால் எங்களுக்கென்ன..! எவ்வளவு கீழ்த்தரமான சோதனைகள் வேணுமானாலும் செய்து எங்கள் பிள்ளைகளை அசிங்கபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களின் மனங்களை நோகடித்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு தேவை மகன்/மகளின் நல்ல மதிப்பெண் மட்டுமே என்ற மதிப்பெண் மன...
விடுமுறை முடிந்து வீட்டிலிருந்து கிளம்புகையில் விழியின் விளிம்புகளில் நிறையும் கண்ணீர்த் துளிகளை ஒருவாறு அடக்கி வழியனுப்பி நிற்கும் பெற்றோர்களைப் போல சென்ன...

எம்.எஸ்.பாஸ்கர் என்னும் நடிகன்...!!!

யூட்யூப் சேனல் ஒன்றில் எம்.எஸ்.பாஸ்கரின் நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். காணொளி முடியும் போது "யப்பா என்ன மாதிரியான நடிகன் " என்று தோன்றியது.குறிப்பிட்ட காட்சியைப் பற்றியோ அல்லது கதாபாத்திரத்தைப் பற்றியோ பேசத் தொடங்கும் போதே கணநேரத்தில் உடல்மொழி, வசன உச்சரிப்பு, சூழலுக்கு ஏற்ற முக வெளிப்பாடுகள் என அனைத்துவிதத்திலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிப் போகிறார். கண்ணீர்த் துளிகள் வேண்டிய நேரத்தில் அவரைக் கேட்காமலே கன்னங்களை நனைக்கின்றன. பல வருடங்களுக்கு முந்தி பேசிய வசனங்களை அச்சு பிசகாமல் மனப்பாடமாக பேசுகிறார். நம் வாழ்வில் சில பேரைப் பார்க்கும் போது மட்டும் இவர் இன்னும் வாழ்வில் மேல வரவேண்டும். இவர் இந்த இடத்தில் இருக்க வேண்டிய நபர் இல்லை. மேலும் வாழ்வில் உயர வேண்டும். வாய்ப்புகள் அமையும் தருணத்தில் மற்றவர்கள் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தைக் கண்டிப்பாக அவர் அடைவார் என்று ஆழ்மனது அவ்வப்போது ஆருடம் சொல்லும். அது நம் நண்பராகவோ, நமக்கு வேண்டியவராகவோ அல்லது நாம் கவனித்துக் கொண்டிருக்கும் நமக்கு அறிமுகமில்லாத ஒரு நபராகக் கூடவோ இருக்கலாம். நேர்காணல் முடியும் போது "எம்.எஸ்.பாஸ்கர் ...
கவிஞனுக்கு ஓர் ஓவியை வாழ்க்கைத் துணையானால்...? பேனாவும் தூரிகையும் காதல் கொள்ளும் எழுத்துக்கள் வண்ணங்களில் குளிக்கும் தூரிகைகள் சொற்களைத் தீட்டும் சொற்கள் சிலையாகும் தூரிகைகள் எழுதக் கற்கும் அருவமான உணர்வுகளுக்கு உருவம் உண்டாகும் மௌன படங்களுக்குள்ளும் மாபெரும் உரையாடல்கள் நிகழும் புன்னகை ஓவியத்தில் வண்ணங்களைக் கூட்டும் கண்ணீர் கவிதையில் காயங்களைக் காட்டும் கவிதைகள் ஓவியமாகும் ஓவியங்கள் கவிதையாகும் எழுதாத ஓவியத்தையும் வரையாத கவிதையையும் தேடித் தேடி இரவுகள் தொலையும்... கார்த்திக் பிரகாசம்...
நாவல் பழத்தை நங்கையவள் நாவால் நீட்டினாள் நானிலமும் நாணியது...!!! கார்த்திக் பிரகாசம்...
பேருந்து நிறுத்தங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சுவரொட்டிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது. அந்தச் சுவரொட்டிகளில் எம்ஜிஆரின் முகத்தை விட ஜெயலலிதாவின் முகத்தைப் பார்த்தால்தான் மிகுந்த வருத்தமாக இருக்கின்றது. என்னதான் விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று வரலாற்றில் மேலும் ஒருவரியை தனக்கென அடிக்கோடிட்டு ஆட்சி அமைத்த ஜெயலலிதா மட்டும் ஒருவேளை உயிர்த் துறவாமல் இருந்திருந்ததால் கழகத்தை நிறுவிய மற்றும் தன் அரசியல் ஆசானின் "நூற்றாண்டு விழா"வினை எப்படியெல்லாம் அமர்க்களப்படுத்தியிருப்பார். என்னென்ன கொண்டாட்டங்களை கனவுகளை மனதில் பட்டியலிட்டு வைத்திருப்பார். இந்தாண்டு முழுவதும் "எம்ஜிஆர் நூற்றாண்டு விழா"வினை கொண்டாடப்படவேண்டும் என்று கழகத்தினரிடம் சொன்னதாக நினைவு. உண்மையில் கழகத்தினர் ஜெயலலிதாவின் ஆன்மாவை போற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் நினைத்தததை விட ஒருபடி மேலாக "எம்ஜிஆர் நூற்றாண்டு விழா"வினை கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் எல்லாம் தலைகீழாக நிற்கிறது. அதிகார பச...
இப்போதைக்கு இதழ்களை நனை எக்கணமும் இதயத்தில் நினை...!!! இதழ்கள் இணைகையில் இதயம் வரை ஈரம் படரட்டும் இதயம் நினைக்கையில் நனைக்கும் தூரத்தில் என்றென்றும் நம் இதழ்கள் இருக்கட்டும் இதழும் இதயமும் நினைந்து நினைந்து நனையட்டும்...!!! கார்த்திக் பிரகாசம்...
அடுத்த வியாபாரம் ஆரம்பமாகிவிட்டது பாகுபலி சேலைகள் பாகுபலி ஆபரணங்கள்... கார்த்திக் பிரகாசம்...