Skip to main content

எம்.எஸ்.பாஸ்கர் என்னும் நடிகன்...!!!

யூட்யூப் சேனல் ஒன்றில் எம்.எஸ்.பாஸ்கரின் நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். காணொளி முடியும் போது "யப்பா என்ன மாதிரியான நடிகன் " என்று தோன்றியது.குறிப்பிட்ட காட்சியைப் பற்றியோ அல்லது கதாபாத்திரத்தைப் பற்றியோ பேசத் தொடங்கும் போதே கணநேரத்தில் உடல்மொழி, வசன உச்சரிப்பு, சூழலுக்கு ஏற்ற முக வெளிப்பாடுகள் என அனைத்துவிதத்திலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிப் போகிறார். கண்ணீர்த் துளிகள் வேண்டிய நேரத்தில் அவரைக் கேட்காமலே கன்னங்களை நனைக்கின்றன. பல வருடங்களுக்கு முந்தி பேசிய வசனங்களை அச்சு பிசகாமல் மனப்பாடமாக பேசுகிறார்.

நம் வாழ்வில் சில பேரைப் பார்க்கும் போது மட்டும் இவர் இன்னும் வாழ்வில் மேல வரவேண்டும். இவர் இந்த இடத்தில் இருக்க வேண்டிய நபர் இல்லை. மேலும் வாழ்வில் உயர வேண்டும். வாய்ப்புகள் அமையும் தருணத்தில் மற்றவர்கள் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தைக் கண்டிப்பாக அவர் அடைவார் என்று ஆழ்மனது அவ்வப்போது ஆருடம் சொல்லும். அது நம் நண்பராகவோ, நமக்கு வேண்டியவராகவோ அல்லது நாம் கவனித்துக் கொண்டிருக்கும் நமக்கு அறிமுகமில்லாத ஒரு நபராகக் கூடவோ இருக்கலாம். நேர்காணல் முடியும் போது "எம்.எஸ்.பாஸ்கர் என்னும் நடிகனை"ப் பார்த்து அப்படித்தான் தோன்றியது.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...