Skip to main content
பேருந்து நிறுத்தங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சுவரொட்டிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது. அந்தச் சுவரொட்டிகளில் எம்ஜிஆரின் முகத்தை விட ஜெயலலிதாவின் முகத்தைப் பார்த்தால்தான் மிகுந்த வருத்தமாக இருக்கின்றது. என்னதான் விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று வரலாற்றில் மேலும் ஒருவரியை தனக்கென அடிக்கோடிட்டு ஆட்சி அமைத்த ஜெயலலிதா மட்டும் ஒருவேளை உயிர்த் துறவாமல் இருந்திருந்ததால் கழகத்தை நிறுவிய மற்றும் தன் அரசியல் ஆசானின் "நூற்றாண்டு விழா"வினை எப்படியெல்லாம் அமர்க்களப்படுத்தியிருப்பார். என்னென்ன கொண்டாட்டங்களை கனவுகளை மனதில் பட்டியலிட்டு வைத்திருப்பார். இந்தாண்டு முழுவதும் "எம்ஜிஆர் நூற்றாண்டு விழா"வினை கொண்டாடப்படவேண்டும் என்று கழகத்தினரிடம் சொன்னதாக நினைவு. உண்மையில் கழகத்தினர் ஜெயலலிதாவின் ஆன்மாவை போற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் நினைத்தததை விட ஒருபடி மேலாக "எம்ஜிஆர் நூற்றாண்டு விழா"வினை கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் எல்லாம் தலைகீழாக நிற்கிறது. அதிகார பசியில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் நினைவுகள் ஓரம் கட்டுப்பட்டுவிட்டன.

கட்சியை நிறுவிய தலைவரின் நூற்றாண்டில் அக்கட்சியே கவிழ்ந்துபோய் நிற்பது துரதிருஷ்டம். ஆளும் கட்சியாக இருக்கும் போதே இரண்டாக உடைந்து, சின்னம் இழந்து எந்தப் பக்கம் சாயும் என்று தெரியாமல் அந்தரத்தில் ஊசலாட வைத்து காலம் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறது..

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...