சிறுவர்கள் மற்றும் பெண்களின் கல்வியை மேம்படுத்தவும், ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரச் சிக்கல்களைப் போக்கவும், இளைஞர்கள் சமூக விரோதச் செயல்களில் வழித்தவறி சென்றுவிடாமல் நல்வழிப்படுத்தவும் வடசென்னையின் பல பகுதிகளில் அம்பேத்கர் மன்றங்கள் இன்னும் ஆணிவேராய் நின்றுக் கொண்டிருக்கின்றன.
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இம்மன்றங்களை ஆரம்பித்த இளைஞர்கள் இன்றுவரை தம் மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற உறுதுணையாய் இருந்து உதவிக் கொண்டிருக்கின்றனர்.
"சேவ் டிரஸ்ட்" என்ற அமைப்பு வட சென்னையின் பல பகுதிகளில் விரிந்துள்ள அம்பேத்கர் மன்றங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் மேற்குறிப்பிட்ட செயல்களைத் தொடர்ந்து எவ்வித தங்குதடையுமின்றி வழிநடத்திக் கொண்டிருக்கிறது. சேவ் டிரஸ்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.பாஸ்கர் அவர்கள் இச்செயல்களை முன்னின்று செய்துக் கொண்டிருக்கிறார். இவ்வமைப்பின் மூலம் கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் பாடரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயன் பெறுகின்றனர். பள்ளிப்பாடம் மட்டுமில்லாமல் பொது அறிவு, கணினி அறிவு உட்பட சமூக அக்கறை உள்ளவர்களாகவும் வளர்த்தெடுக்கின்றனர்.
அலுவலகத்தில் உள்ள சமூகத் தொண்டு செய்யும் அமைப்பின் மூலம் அந்த அமைப்பைச் சந்தித்தோம். மாணவர்களுக்காக அவர்கள் கேட்டுக் கொண்ட ஆங்கிலம்-தமிழ் அகராதிகள், வடிவியல் பெட்டிகள், எழுது கோல்கள், எழுது பலகைகள், தண்ணீர் பாட்டில்கள் என எங்களால் முடிந்ததை விட ஒருபடி அதிகமாக வாங்கிக் கொடுத்தோம்.விலையை மட்டும் வைத்து பார்த்தால் இவையெல்லாம் பெரிய மதிப்பிலான பொருட்கள் கிடையாது தான். ஆனால் ஒரு பொருளின் மதிப்பு விலையைக் கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அந்தப் பொருளின் மதிப்பான விலை பெரும்பாலும் இல்லாதவரின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. அந்தவகையில் மிகவும் மதிப்புயர்ந்த பொருட்களைக் கொடுக்கையில் அந்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சியைப் பார்த்து மனம் பூரித்து நின்றது.
அந்தக் கூடத்தில் மாலை வகுப்புக்காகக் கூடியிருந்த சிறுவர்களிடம், உங்களுக்கு பிடித்த தலைவர் யார்.? யாரைப் போல் ஆகவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்..? என்றுக் கேட்ட அடுத்த நொடி, "ஒரு சிறுவன் எழுந்து எனக்கு அம்பேத்கரைப் பிடிக்கும். அவரைப் போலாக நான் விரும்புகிறேன்"...!! என்று பொட்டில் அடித்தது போல் கூறினான். கைத்தட்டல்கள் ஓய கடிகார முட்கள் வேகமாய் ஓட வேண்டியிருந்தது.
காலங்கள் மாறிவிட்டன. கனவுகள் நினைவாகவில்லை ஆனாலும் நம்பிக்கை இன்னும் நீர்த்து போய்விடவில்லை.
கார்த்திக் பிரகாசம்...
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இம்மன்றங்களை ஆரம்பித்த இளைஞர்கள் இன்றுவரை தம் மக்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற உறுதுணையாய் இருந்து உதவிக் கொண்டிருக்கின்றனர்.
"சேவ் டிரஸ்ட்" என்ற அமைப்பு வட சென்னையின் பல பகுதிகளில் விரிந்துள்ள அம்பேத்கர் மன்றங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் மேற்குறிப்பிட்ட செயல்களைத் தொடர்ந்து எவ்வித தங்குதடையுமின்றி வழிநடத்திக் கொண்டிருக்கிறது. சேவ் டிரஸ்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.பாஸ்கர் அவர்கள் இச்செயல்களை முன்னின்று செய்துக் கொண்டிருக்கிறார். இவ்வமைப்பின் மூலம் கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் பாடரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயன் பெறுகின்றனர். பள்ளிப்பாடம் மட்டுமில்லாமல் பொது அறிவு, கணினி அறிவு உட்பட சமூக அக்கறை உள்ளவர்களாகவும் வளர்த்தெடுக்கின்றனர்.
அலுவலகத்தில் உள்ள சமூகத் தொண்டு செய்யும் அமைப்பின் மூலம் அந்த அமைப்பைச் சந்தித்தோம். மாணவர்களுக்காக அவர்கள் கேட்டுக் கொண்ட ஆங்கிலம்-தமிழ் அகராதிகள், வடிவியல் பெட்டிகள், எழுது கோல்கள், எழுது பலகைகள், தண்ணீர் பாட்டில்கள் என எங்களால் முடிந்ததை விட ஒருபடி அதிகமாக வாங்கிக் கொடுத்தோம்.விலையை மட்டும் வைத்து பார்த்தால் இவையெல்லாம் பெரிய மதிப்பிலான பொருட்கள் கிடையாது தான். ஆனால் ஒரு பொருளின் மதிப்பு விலையைக் கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அந்தப் பொருளின் மதிப்பான விலை பெரும்பாலும் இல்லாதவரின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. அந்தவகையில் மிகவும் மதிப்புயர்ந்த பொருட்களைக் கொடுக்கையில் அந்தப் பிள்ளைகளின் மகிழ்ச்சியைப் பார்த்து மனம் பூரித்து நின்றது.
அந்தக் கூடத்தில் மாலை வகுப்புக்காகக் கூடியிருந்த சிறுவர்களிடம், உங்களுக்கு பிடித்த தலைவர் யார்.? யாரைப் போல் ஆகவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்..? என்றுக் கேட்ட அடுத்த நொடி, "ஒரு சிறுவன் எழுந்து எனக்கு அம்பேத்கரைப் பிடிக்கும். அவரைப் போலாக நான் விரும்புகிறேன்"...!! என்று பொட்டில் அடித்தது போல் கூறினான். கைத்தட்டல்கள் ஓய கடிகார முட்கள் வேகமாய் ஓட வேண்டியிருந்தது.
காலங்கள் மாறிவிட்டன. கனவுகள் நினைவாகவில்லை ஆனாலும் நம்பிக்கை இன்னும் நீர்த்து போய்விடவில்லை.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment