Skip to main content

அறம்...

ஜெயமோகன் எழுதிய அற்புதமான படைப்பு...

பனிரெண்டு சிறுகதைகள் மூலம், அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி வாழ்ந்த உண்மை மனிதர்களின் கதைகளை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.. புத்தகம் படித்து முடித்த பின்பும் அந்த மனிதர்களின் தாக்கங்கள் மனதில் நீக்கமற நிறைகின்றன..

குறிப்பாக சோற்றுக் கணக்கில் வரும் "பெத்தேல் சாகிப்", கோட்டியில் வரும் "பூமேடை ராமையா", யானை டாக்டரில் வரும் "டாக்டர் கிருஷ்ணமூர்த்தி"  மற்றும் வணங்கானில் வரும் "நேசமணி" ஆகிய நால்வரும் மனதை மிகவும் கவர்ந்து விடுகின்றனர்.. அவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது ஆனால் புத்தகத்தைப் படித்த முடித்த தருணத்தில் அவர்களின் மீது அளவு கடந்த மரியாதை ஏற்பட்டு விடுகிறது..  

"அறம்" என்பது நாம் மற்றவர்களிடம் எதிர்ப்பார்ப்பது மட்டுமல்ல, "எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அளிப்பது" மற்றும் "மற்றவர்களுக்கு மட்டுமல்ல, முதலில் நமக்கு நாம் உண்மையாக இருப்பது" என்பதை பனிரெண்டு சிறுகதைகளின் மூலமாக அழுத்தமாக அளித்திருக்கிறார் ஜெயமோகன்...

கார்த்திக் பிரகாசம்... 

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...