மணிக்கு நண்பர்களோடு இருப்பதென்றால் அப்படியொரு இன்பம். நண்பர்களோடு சந்தோசமாக ஊர் சுற்றுவதும், இரவு நேர ஹோட்டல்களில் குடிப்பதும் தான் அவனுடைய தினசரி முக்கிய வேலையாக இருக்கும்..
மணிக்கு உண்மையில் மதுக் குடிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் நண்பர்களுக்காகச் செல்வான்.. ஆனால் அனைவர் குடித்ததர்க்கும் சேர்த்து மணி தான் எப்பொழுதுமே பணம் செலுத்துவான்... ஒவ்வொரு முறை நண்பரகளோடு வெளியே செல்லும் போதும் 4000, 5000 என்று தண்ணீர்ப் போல பணத்தை வாரி இறைப்பான்.. அப்படி, பணம் செலவிடுவதற்காக அத்தனை வருடங்களில் அந்த ஒருநாள் வரும் வரையிலும் அவன் ஒருபோதும் வருந்தியதே இல்லை.
அன்று, தூரத்து உறவினர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்காகத் தனது சொந்த ஊர் கிராமத்திற்குச் சென்றிருந்தான் மணி. கண்டு வெகு நாட்கள் ஆயிருந்ததால் அவனது உறவினர்கள் வெகுவாக நலம் விசாரித்தனர்.. பாச மழையைப் பொழிந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலேயே தங்கச் சொல்லி மணியைப் பாசத்தினால் கட்டாயபடுத்தினர்.
இறுதியாக அவனது அத்தை வீட்டில் தங்கினான். அவனது அத்தை அந்த ஊரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபவர். நாட்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கழிந்தன. ஒவ்வொரு நிமிடத்தையும் மணி மனதார மகிழ்ந்து வழியனுப்பினான்.
விழா முடிந்து அனைவரும் அவரவர் ஊருக்குக் கிளம்பினர். மணியும் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது அத்தை அவனோடு சில நேரம் பேச வேண்டுமென்று அழைத்தாள்.
மணியும் எழுந்து சமையலறைக்குச் சென்றான். அத்தை எதையோ சொல்ல தயங்குவதை உணர்ந்த மணி, எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் பரவாயில்லை... என்று அனுமதி அளித்தான்.. அவன் அத்தை.., "இந்த கிராமத்தில் நிறைய குழந்தைகள் படிக்கும் ஆர்வமிருந்தும், தங்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையினால் கல்வி கற்க முடியாத அவலநிலையில் உள்ளனர். நானும் எனது நண்பர்களும் எங்களால் முடிகின்றவரை சிலக் குழந்தைகளின் படிப்பு செலவை செய்கிறோம்.. நீயும் உன்னால் இயன்றதைக் கொடுத்தால் இயலாத பலக் குழந்தைகள் கல்வி பெறுவர்.." என்றாள்..
அன்று முதல் வீண் விரையங்களை நிறுத்தினான். மது, ஹோட்டல் போன்ற செலவுகளைத் தவிர்த்தான். ஆனால் நண்பர்களைத் தவிர்க்கவில்லை. தன் சம்பளத்தின் ஒரு பெரும் பகுதியை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கென செலவு செய்தான்...
கார்த்திக் பிரகாசம்...
மணிக்கு உண்மையில் மதுக் குடிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் நண்பர்களுக்காகச் செல்வான்.. ஆனால் அனைவர் குடித்ததர்க்கும் சேர்த்து மணி தான் எப்பொழுதுமே பணம் செலுத்துவான்... ஒவ்வொரு முறை நண்பரகளோடு வெளியே செல்லும் போதும் 4000, 5000 என்று தண்ணீர்ப் போல பணத்தை வாரி இறைப்பான்.. அப்படி, பணம் செலவிடுவதற்காக அத்தனை வருடங்களில் அந்த ஒருநாள் வரும் வரையிலும் அவன் ஒருபோதும் வருந்தியதே இல்லை.
அன்று, தூரத்து உறவினர் ஒருவரின் இல்லத் திருமண விழாவிற்காகத் தனது சொந்த ஊர் கிராமத்திற்குச் சென்றிருந்தான் மணி. கண்டு வெகு நாட்கள் ஆயிருந்ததால் அவனது உறவினர்கள் வெகுவாக நலம் விசாரித்தனர்.. பாச மழையைப் பொழிந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலேயே தங்கச் சொல்லி மணியைப் பாசத்தினால் கட்டாயபடுத்தினர்.
இறுதியாக அவனது அத்தை வீட்டில் தங்கினான். அவனது அத்தை அந்த ஊரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபவர். நாட்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கழிந்தன. ஒவ்வொரு நிமிடத்தையும் மணி மனதார மகிழ்ந்து வழியனுப்பினான்.
விழா முடிந்து அனைவரும் அவரவர் ஊருக்குக் கிளம்பினர். மணியும் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது அத்தை அவனோடு சில நேரம் பேச வேண்டுமென்று அழைத்தாள்.
மணியும் எழுந்து சமையலறைக்குச் சென்றான். அத்தை எதையோ சொல்ல தயங்குவதை உணர்ந்த மணி, எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் பரவாயில்லை... என்று அனுமதி அளித்தான்.. அவன் அத்தை.., "இந்த கிராமத்தில் நிறைய குழந்தைகள் படிக்கும் ஆர்வமிருந்தும், தங்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையினால் கல்வி கற்க முடியாத அவலநிலையில் உள்ளனர். நானும் எனது நண்பர்களும் எங்களால் முடிகின்றவரை சிலக் குழந்தைகளின் படிப்பு செலவை செய்கிறோம்.. நீயும் உன்னால் இயன்றதைக் கொடுத்தால் இயலாத பலக் குழந்தைகள் கல்வி பெறுவர்.." என்றாள்..
ஒரு குழந்தைக்கு, ஒரு வருடத்திற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டான்.. அவன் அத்தை, 4500 முதல் 5000 வரை ஆகும் என்றாள். மணிக்குத் தூக்கிவாரிப் போட்டது.. இத்தனை வருடமாய் அனாவசியமாய், அதுவும் குடிப்பதற்காக அவன் செலவிட்ட பல 4000 மற்றும் 5000 ரூபாய்களை நினைத்து பார்த்தான்.
தான் இத்தனை நாளாய் அனாவசியமாய் செலவு செய்த பணம், அந்த கிராமத்தில் வசிக்கும் பல பேரின் கல்விக்கு அத்தியாவசியமாய் இருப்பதை உணர்ந்து மனம் உடைந்தான்.. இதயம் படபடத்தது.. கைகள் நடுங்கின..
தான் இத்தனை நாளாய் அனாவசியமாய் செலவு செய்த பணம், அந்த கிராமத்தில் வசிக்கும் பல பேரின் கல்விக்கு அத்தியாவசியமாய் இருப்பதை உணர்ந்து மனம் உடைந்தான்.. இதயம் படபடத்தது.. கைகள் நடுங்கின..
பணம் இல்லாததால் அவர்களுக்கு ஏற்படும் அவமதிப்பையும், தன்னைப் போன்ற பணத்தில் புரள்பவர்கள் பணத்திற்கு ஏற்படுத்தும் அவமதிப்பையும் எண்ணி மனம் புழங்கினான்..
அன்று முதல் வீண் விரையங்களை நிறுத்தினான். மது, ஹோட்டல் போன்ற செலவுகளைத் தவிர்த்தான். ஆனால் நண்பர்களைத் தவிர்க்கவில்லை. தன் சம்பளத்தின் ஒரு பெரும் பகுதியை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கென செலவு செய்தான்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment