Skip to main content
வழக்கம் போல, நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின், கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து மீண்டு வந்த ஒரு பேருந்தில் நானும் நண்பனும் ஏறினோம்.. . பேருந்தில் கூட்டம் அதிகம் இல்லை. ஆனால் பேருந்தில் பெரும்பாலோனோர் பெண்களாக இருந்தனர். பேருந்தின் நடத்துனரும் ஒரு பெண்ணாக இருந்தார்.ஆதலால் ஏறும் முன், "இது பெண்கள் பேருந்தா..."? இல்லை என்று கேட்டு உறுதி செய்துக் கொண்டு ஏறினோம்...

இதற்கு முன் பெண் நடத்துனரைக் காணாததால், அவரின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்..

பேருந்தில் ஏறிய மற்றும் இறங்கிய அனைத்துப் பயணிகளிடமும் மிகவும் கணிவாக நடந்துக் கொண்டார். சில்லறைக் கேட்டார் இல்லாவிட்டால் சில்லறைக் கொடுத்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெண்மணி, நான்கு ரூபாய் பயணச்சீட்டிற்கு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினார். சில்லறை இல்லையா என்றார். இல்லை என்றதும் கடும் சொல் சொல்லாமல், முகம் சுளிக்காமல் மீதிச் சில்லறையைக் கொடுத்துவிட்டார். அதிலும் அந்தப் பெண்மணி, ஒரு பத்து ரூபாய்த் தாள் நன்றாக இல்லை வேற கொடு என்று மீண்டும் நீட்டினார், அதற்கும் அந்தப் பெண் நடத்துனர் ஏதும் சொல்லாமல் வேறொரு பத்து ரூபாய்த் தாளைக் கொடுத்தார்..

இந்தப் பேருந்து, அந்த இடத்திற்குப் போகுமா, இந்த இடத்திற்குப் போகுமா என்றவர்களிடத்திலெல்லாம் போகும், போகாது என்று பொறுப்புடனும் மரியாதையுடனும் பதில் சொன்னது மட்டுமில்லாமல், அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு எந்தப் பேருந்து ஏறினால் போகலாம் என்பதையும் தெளிவாகப் புன்னகையுடன் குறிப்பிட்டார்..

நெரிசலில் பெரும்பாலும் சோர்வையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் விதமாக அமையும் போக்குவரத்துப் பயணம், இந்த நடத்துனரின் செயல்களால் உற்சாகமாக அமைந்தது.எனக்கு ஏற்பட்ட அந்த உணர்வு அந்தப் பேருந்தில் பயணித்த அனைத்து அல்லது பெரும்பாலான பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..

மேலும் இதுப் போன்று,  பெண்கள் பொதுப் பணியில் இயங்கும் போது, அத்துறையில் எந்த விதமான நல்ல தாக்கங்கள் ஏற்படும் என்பதை கண்ணெதிரே காண முடிந்தது...

பெண்கள் பொதுப்பணிக்கு வந்தால் சமூகம் ஒரு குடும்பமாகும். பெண்களின் பொறுமையும் பொறுப்புணர்வும் சமூகம் என்னும் குடும்பத்தை நல்வழிப்படுத்தும்...

கார்த்திக் பிரகாசம்...




Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...