Skip to main content

கதாநாயக பிம்பம்

என் மீதான அவளின் கதாநாயக பிம்பம்
கவர்ச்சிகரமாய் இருந்தது
போக்கில் மெல்லிய புன்னகையை உதிர்க்க
இயேசுவைப் போல் புனிதமானவன் நீ எனச்
செவிகள் கூசிடப் போற்றுவாள்
மழலை சிரிப்புடன் நான் அமர்ந்திருக்க
உலகின் அத்துணை புனித ஆத்மாக்களும்
எந்தன் சிறு பார்வை வேண்டி
பவ்யமாய் நிற்பது போல்
முகம் கொள்வேன்

அப்பிம்பம்
பெருஞ்சுவர் காவலில்லா சிறை
மீண்டெழச் சாத்தியமற்ற
நானே ஆணிகள் துளைத்து
என்மேல் சுமத்திக் கொண்ட
நிரந்தர சிலுவையென
பிறகு தான் புரிந்தது

ஏதோ ஒரு நாள்
இயல்பான மனிதனாய்
எதிர்பாராமல் ஒரு தவறை நிகழ்த்திய போது
அருவருப்பினும் கீழான
அவளின் பார்வையில்
தான் பின்னிய வலையிலேயே
சிக்குண்ட சிலந்தியைப் போல்
முதன்முதலாய் என் கதாநாயக பிம்பம்
துடித்தது

நடக்கும் போது கைகளைப்
பற்றிக் கொள்ளாத ஓர் நாளில்
நூறாவது மாடியிலிருந்து விழுந்த
கண்ணாடியைப் போல்
என் கதாநாயக பிம்பம் சில்லு சில்லாய்
உடைந்தது

சிலுவையைச் சுமந்த சென்ற இயேசுவைப்
பின்தொடர்ந்த பாரபாஸைப் போல்
துரத்தி வந்தவள்
திடீரென்று காணாமல் போய்விட்டாள்

அவள் விட்டுச் சென்ற
அன்பின் வழியில்
அரைகுறையான நான் மட்டும் இருந்தேன்
வெளுத்துப் போன
கதாநாயக பிம்பத்தோடு

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...