Skip to main content

மாலை 5 மணி.. மதுரை இரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸிற்காக காத்திருந்தேன். நிலையத்தில் இலவச Wi Fi என்பதால் காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு முகபுத்தகத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன்.

திடிரென 60 வயதைக் கடந்த பெரியவர் ஒருவர் எதிரே வந்து ஏதோ கேட்டார். ஹெட்செட் காதை வெளியுலகத்துக்கு செவிடாக்கியிருந்ததால் எதுவும் கேட்கவில்லை. ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு ஹெட்செட்டை ஒருபக்கமாக கழட்டிவிட்டு, என்ன ஐயா..? சொல்லுங்க என்றேன்.

"நான் சொல்ற நம்பருக்கு ஒரு நிமிஷம் போன் போட்டு தறீங்களா" என்றார். அவர் கையில்போன் இல்லை.

ம்ம்ம். சொல்லுங்க.. என்றேன்

நம்பர் சொன்னார். முதல் முறை போகவில்லை. மீண்டுமொரு முறை முயற்சித்தப் போது இணைப்பு கிடைத்தது. போனை அவர் கையில் கொடுத்தேன்.

டேய்.! தாத்தா பேசுறேன் டா.  நான் மதுரைக்கு வந்துட்டேன். இங்க இருந்து சென்னைப் போயிட்டு அப்டியே பாண்டிச்சேரி போயிடரேன். ஆயா'வ நல்லாபடியா பாத்துக்கோ டா. பாவமடா அவ. அவகிட்ட சண்ட போடதடா. ஹலோ..! ஹலோ..! ஹலோ..! இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

போனை என் கையில் கொடுத்த போது அவரின் கண்கள் தெம்பில்லாமல் கலங்கி இருந்தன.. தாங்ஸ் தம்பி என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அந்த மனிதர் யாரென்றுத் தெரியவில்லை. அவரின் உண்மையானச் சூழ்நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால் வாழ்க்கையின் ஏதோ ஒரு இக்கட்டானச் சூழ்நிலையில் சிக்கியிருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. ஏதோவொரு இயலாமை அவரைத் தனிமையில் தள்ளி தாழிட்டிருக்கிறது.

ஏனோ மனம் ஒருவித குற்ற உணர்ச்சியிலிருந்து இயல்பு நிலைக்கு வர சில மணித்துளிகளானது.

தினசரி வாழ்க்கையில் இது போன்ற எத்தனையோ மனிதர்களை, மிக எளிதாக காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு கடந்து விடுகிறோம்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...