Skip to main content

ரஜினிகாந்த்...!!!

இந்தப் பெயரைக் கேட்டாலே மனதிற்குள் மகிழ்ச்சி  வெள்ளம் பொங்குகிறதே. ஏன்.? இந்த மனுசனின் பெயரைத் திரையில் பார்த்தாலே கண்கள் கலங்குகின்றதே. ஏன்.? யாரோ இவரைத் திட்டினால் என் இரத்த உறவைத் திட்டியது போல் கோபம் பீறீடுகிறதே. ஏன்.? எந்தவித பூர்வஜென்ம சம்மந்தமும் இல்லாமல் இந்த மனிதன் எனக்குள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறாரே. ஏன்.? என் தினசரி வாழ்க்கையில் இந்தப் படிக்காதவனின் ஆளுமை அடர்ந்து நிற்கிறதே. ஏன்.?

இந்தக் கேள்விகளைப் பலமுறை எனக்குள் கேட்டுக் கொண்டதுண்டு.. ஆனால் இதற்கான பதில்கள் மனத்தில் எதிரொலித்ததில்லை.

ஆனால் நடிகன் என்பதைத் தாண்டி இந்த மனிதன் ஏதோ ஒரு வகையில் அல்ல பல வகைகளில் என் வாழ்க்கையை வெகுவாக பக்குவப்படுத்தி இருக்கிறார். இன்னும்  பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த மனிதனைப் பற்றி நினைத்தால் எத்தணை ஆச்சரியங்கள்.

ஆட்சியும் அதிகாரமும் தேடி வந்தப் போதும் அதை ஒருபோதும் நாடி செல்லாத இந்த மனிதனை என்னவென்று சொல்வது.. புகழின் உச்சாணிக் கொம்பில் நிற்கும்போதும் வெறிக் கொண்டு ஆடாமல் புத்தர் போல எப்படி இந்த மனிதனால்  மௌனமாகப் புன்னகைக்க முடிகின்றது.

இவரை வைத்து வியாபாரம் செய்து பெரும்பணம் பார்த்தவர்களே, இழிவாகப் பேசும் போதும் "எல்லாம் சாயா" என்று எப்படி எளிதாகக் கடக்க முடிகிறது.

இந்த மனிதனை விமர்சனம் செய்பவர்கள் கூட இவரின் படம் வெளியாகும் நாள் , டிக்கெட்டிற்காகத் திரையரங்கத்தின் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்களே.. என்ன செய்ய..!

ரஜினி'யானபின்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட்டை இழக்காமல் இருக்க முடிகிறதே... என்ன சொல்ல..!

ஒவ்வொரு முறை சோர்ந்து போய் அமரும்போது இந்த மனிதன் பேசிய வார்த்தைகள் இதுவரைக் கண்டிராத புத்துணர்வைக் கொடுக்கின்றன.
மகிழ்ச்சியில் கேட்கும் போது சந்தோஷம் இரட்டிப்பாக்கிறது.  ஆன்மிகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்தவன், "படைப்பு இருந்தால் படைப்பாளி இருந்து தான் ஆகணும். படைப்பாளி இல்லாமல் படைப்பு இல்லை" என்று இந்த மனிதன் சொன்னதைக் கேட்டதும் மனம் மாறி நின்றது. அதற்காகக் கடவுளை வெளியில் தேடி அலைய வேண்டாம் அது நம் உள்ளுணர்வு நமக்குள் தேடி அலைய வேண்டியது என்று சொன்னது ஆழ்மனதில் நன்கு பதிந்துவிட்டது

இவர் சொல்லும் குட்டிக் குட்டிக் கதைகள் யதார்த்தத்தை உணர வைக்கின்றன. இவரைப் பார்த்து புகழ் என்ற மாய போதையை புறந்தள்ள முடிகிறது. இந்த மனிதன் பேசிய வசனங்கள் மட்டும் பல சூழ்நிலைகளுக்கு மருந்தாகின்றன.

ராகவேந்திரர் 'ஆயினும், ராணா'வாயினும் ரஜினி சித்தர் தான் நிறைந்திருக்கிறார்.

தலைவா.. உங்கள் வழி தனி வழி. என் வழி என்றும் உங்கள் வழியில்..

மாதா பிதா குரு ரஜினிகாந்த்...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...