Skip to main content
நீ எந்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்று யாராவது என்னைக் கேட்டால், ஒரு டீயை "ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு குடித்த தலைமுறை" என்று சொல்லலாம்.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் அதிகாலையில் வேதியியல் பாடத்திற்கு டியூஷன் போக வேண்டும். ஒவ்வொரு நாளுமே இரவு படுக்கப் போகும் போது எப்படியாவது நாளை மட்டம் அடித்துவிட்டு நன்றாக தூங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் டியூஷன் போகும் வழியில் இருக்கும் அந்த டீக்கடையில் டீக்குடிப்பதற்காகவே எப்படியாவது எழுந்து கிளம்பி விடுவேன்.

டீக்குடிக்கவென்று அப்பா இரண்டு ரூபாய் தருவார். ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு ஸ்ட்ராங்காக ஒரு டீயும், 50 பைசாவிற்கு ஒரு வரிக்கியும் சாப்பிடும் போது அப்படியொரு ஆத்மதிருப்தி கிடைக்கும். ஏதோ அன்றைய நாளுக்கான அத்தனை பலன்களும் ஒரேபொழுதில் கிடைத்துவிட்டதாகத் தோன்றும்.

அப்படித் தொடங்கிய டீக்குடிக்கும் பழக்கம் இன்றளவும் வரையறை இல்லாமல் நீண்டுக் கொண்டிருக்கிறது. நா.முத்துக்குமாரின் "டீக்குடிக்கும் முன் ஒரு டீ. டீக்குடிக்கும் போது ஒரு டீ. டீக் குடித்தப் பின் ஒரு டீ" என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது

ஆனால் இன்று சென்னையில் ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு விலை. எட்டு ரூபாய் முதல் பன்னிரண்டு ரூபாய் வரை சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு டீயின் மதிப்பு உயர்ந்து கிடக்கிறது.

இப்பொழுது கடையில் டீக்குடித்துக் கொண்டிருக்கிறேன். மிதக்கும் நுரையோடு இறந்த காலமும் சேர்ந்தாடுகிறது...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோர்பா என்ற கிரேக்கன்

எழுதியவர்: நீகாஸ் கசந்த்சாகீஸ் மொழிபெயர்ப்பு: கோ.கமலக்கண்ணன் வகைமை: நாவல் வெளியீடு: தமிழினி பதிப்பகம் சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன் மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான் வீற்றிருக்கிறது. -கன்ஃபூசியஸ் நவீன கிரேக்க இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளராகக் கருதப்படும், ‘நீகாஸ் கசந்த்சாகீஸ்‘ எழுதிய புகழ்பெற்ற நாவல் “சோர்பா என்ற கிரேக்கன்”. தமிழில் கோ.கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமலையில் நிகழ்ந்த நண்பர்களுடனான இலக்கியக் கூடுகையின் போது தீவிர வாசகரும், ஆங்கில ஆசிரியருமான திரு.ராஜசேகர் அவர்கள் மூலம் “சோர்பா என்ற கிரேக்கன்”என்ற இந்நாவல் அறிமுகமானது. மொழிபெயர்ப்பு நூல்கள் மீது தமிழிலக்கிய வாசகர்களுக்குப் பொதுவான ஒவ்வாமை நிலவி வருவதாகத் தனது மொழிபெயர்ப்பாளர் உரையில் கோ.கமலக்கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். என்னளவில் இக்கருத்திலிருந்து சற்று முரண்பட விழைகிறேன். எனக்குத் தமிழைத் தவ...