Skip to main content
என்னது..? பிச்சைக்காரர்கள் கூட ஸ்வைப் மெஷின் பயன்படுத்துகின்றனரா..!

"தனக்கு உதவி செய்ய விரும்பும் நபரிடம் கையில் பணம் இல்லை என்று சொன்னதால், ஒன்றும் பிரச்சனை இல்லை என்னிடம் ஸ்வைப் மெஷின் இருக்கிறது" என்று ஒரு பிச்சைக்காரர் சொல்வது போல அமைந்த வாட்ஸ் அப் வீடியோவைப் பற்றி பெருமையாக இன்றொரு கூட்டத்தில் மோடி பேசியுள்ளார்.

மேலும், நோக்கம் நல்லதாக இருக்கும் போது இந்தியர்கள் புதியவற்றை வரவேற்க காலம் தாழ்த்துவதில்லை என்றும் கூறியுள்ளார்.

அது சரிதான்.. நல்லதை வரவேற்க நாங்கள் காலம் தாழ்த்துவதில்லை.
அதனால் தான் இந்த அளவிற்கு பணத் தட்டுப்பாடு நிலவும் போதுக்கூட
இதனால் கண்டிப்பாக ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்

ஆனால் அதற்காக பிச்சைக்காரர்கள் பணமற்ற முறைக்கு தயாராகிவிட்டார்கள் என்று பெருமைப்பட முடியுமா..?

முதலில் அந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை.ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நம் நாட்டில் பிச்சை எடுப்பவர் கூட ஸ்வைப் மெஷின் வைத்திருக்கிறார் என்பதை பெருமைப்பட நினைப்பது எந்த விதத்தில் தனது திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருத இயலும்.

பிச்சைக்காரர்கள் அற்ற சமூகத்தை கட்டமைப்பதுதான் அரசின் கடமையே தவிர, கருப்பு பண ஒழிப்பிற்காக பிச்சை எடுக்கும் முறையை அவர்கள் மாற்றிக் கொண்டு விட்டனர் என்று கூறுவது அல்ல.

இதை அரசின் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றியென நீங்கள் நினைத்தால், அது உங்களுக்கு ஓட்டுப் போட்ட ஒட்டுமொத்த சாமானியர்களை ஏமாற்ற நினைக்கும் முயற்சியாகவே இருக்கும்.

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...