Skip to main content
அலுவலுகத்திலுள்ள "சமூக சேவை செய்யும் அமைப்பின் மூலமாக" ஒரு குழந்தைகள் ஆதரவு இல்லத்திற்கு சென்றிருந்தோம். மொத்தம் பதினெட்டுக் குழந்தைகள். ஒவ்வொருக்கும் ஒரு கதை. ஆனால் அவற்றை சாதாரண ஒரு கதை என்ற அளவில் எளிதில் கடந்து விடமுடியாது. ஒவ்வொன்றும் நெஞ்சை உலுக்கும் மனதை உடைக்கும் கண்களை குளமாக்கும் கதைகள்.

அப்பா செத்துவிட்டார் என்பதற்காக அம்மாவால் ஆசிரமத்தில் விடப்பட்டவர்கள். அம்மா வேறொருவருடன் சென்றுவிட்டார் என்பதால் அப்பாவால் இங்கு விடப்பட்டவர்கள். பெற்றோர்களை விபத்தில் இழந்தவர்கள். தான் எப்படி கருவுற்றேன் குழந்தை ஈன்றேன் என்றே தெரியாத, இயல்பு நிலையையே உணராத ஒரு பெண்ணின் குழந்தை. அப்பா அம்மா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பதால் தாத்தா பாட்டியால் கவனிக்க முடியாமல் ஆதரவு இல்லத்திற்கு வந்தவர்கள் என்று துரத்தி விளையாட வேண்டிய வயதில் அனைவரும் அனாதைப் பட்டத்தால் சமூகத்தில் தூக்கி எறியப்பட்டவர்கள்.

நீங்கள் வளர்ந்து என்னவாகப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு போலீஸ், கலெக்டர், என்ஜினீயர், மிலிட்டரி என்று இடைஞ்சல் இல்லாமல் வந்து விழுந்தன குழந்தைகளின் பதில்கள்.

உங்களுக்கு என்ன வேண்டும் நாங்கள் வாங்கித் தருகிறோம் என்று சொன்னதற்கு, அவர்கள் கேட்ட விஷயங்கள் அவர்களின் வயதுக்கே உண்டான குழந்தைத் தனத்தின் மிச்சமீதி. சிப்ஸ், கிண்டர் ஜாய், கம்மல் செட், இங்க் பென், லாங் சைஸ் நோட் என்று பெரிய பெரிய விஷயங்களை கேட்டப் பின்பு தான் புரிந்தது அவர்களுக்கு கிடைக்காதவற்றின் அருமை.

பொருளின் மதிப்பு விலையிலா இருக்கிறது கேட்பவரின் நிலையில் தானே உள்ளது. அவர்கள் கேட்ட அவர்களின் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுத்தோம். வேறேதும் செய்ய முடியவில்லை அவர்களை சிலமணி நேரம் சிரிக்க வைப்பதைத் தவிர...!!!

அவர்களின் வாழ்க்கையில் அத்தனைச் சோகங்கள். பிள்ளைப் பருவத்தில் பெற்றோர்கள் இல்லாமல் வளர்வதை விட வேறென்னப் பெரிய துன்பத்தை கடவுளால் கொடுத்துவிட முடியும். ஆனாலும் சிரிக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் குழந்தைகள்..

எல்லாருக்கும் வாழ்க்கை எளிதானாக அமைந்துவிட விடுவதில்லை.. ஏனோ சமீப நாட்களில் இந்த உண்மை மனதில் அடிக்கடி நெருப்பாய்ச் சுட்டுக் கொண்டிருக்கிறது.

கார்த்திக் பிரகாசம்...


Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...