Skip to main content

Posts

Showing posts from 2018

மெட்ராஸ் தாத்தா

ஒரே நேரத்தில் குறிவைத்து எய்யப்பட்ட ஆயிரமாயிரம் அம்புகளைப் போல உடலைக் குத்தித் துளைக்கின்றன மழைத்துளிகள். பகலெது இரவெது என்ற தகவல் அறியவிடாமல் பெய்யென பெய்யும் பேய் மழை. உடல் நடுங்குகிறது. "இருந்தாலும் இந்த மழை ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது". மழை தந்த ஈரத்தால் கனமான தலைமுடியை உதறிக் கொண்டே பேருந்தில் ஏறினேன். எப்பொழும் போல ஓட்டுநரின் பக்கவாட்டில் இருக்கும் முன் இருக்கைக்குச் சென்றேன். ஜன்னல் இருக்கை ஆளில்லாமல் தனித்திருந்தது. மழையில் நனைந்திருந்தது. மழைக்கால ஜன்னல் இருக்கையை போல என்றோவொருநாள் நானும் எல்லோராலும் கைவிடப்படுவேனோ.? ஆனால் அது என்னமோ தெரியவில்லை சாலையை மறைக்காத அந்த முன் இருக்கையில் அமரும் போது மனதிற்குள் ராணியைப் போன்ற ஓர் உள்ளுணர்வு. ஜன்னலில் பட்டுத் தெறித்த மழைத்துளிகள் உடலையும் உள்ளாடையையும் நனைக்கையில் உலராத ஈரம் உயிரின் மூலத்தைத் தொட்டுச் செல்கிறது. அணிந்திருந்த கண்ணாடியில் ஒட்டியிருந்த வட்ட மழைத்துளிகளின் வழியே பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்த அந்த வயதான உருவத்தைப் பார்த்தேன்.வளைந்த கைத்தடியைப் போலிருந்தது. குறுகிய உடல்.குளிருக்கு நடுங்கும் கோழிக் ...

மாற்றங்க(ள்)ளே வி(னா)டை

ஏமாற்றமா..??? பிடித்ததெல்லாம் விலகிப் போன பி ன் பிடிக்காததெல்லாம் பழகிப் போகும் பழகிக் கொள்கிறேன். கவலையா..??? அவற்றையெல்லாம் அவ்வப்போது கண்ணீரில் கரைத்துவிடுவேன். நிம்மதியா..??? கண்ணீரின் சாம்பலில் மீட்டெடுப்பேன். மகிழ்ச்சியா..??? மழைக்கால ஜன்னல் இருக்கைக்கு மகிழ்ச்சி எ(ஏ)து. துணையா..??? பிணநாள் வரையில் நானெந்தன் நிழலிலேயே இளைப்பாறுவேன். கார்த்திக் பிரகாசம்...
2000ம் ஆண்டு தமிழகத்தையே பதற்றத்தில் உலுக்கிய சம்பவம், சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் ஆங்காங...
பூப்பெய்தியவளின் தீட்டை புயல் வந்து தீர்த்தது.? கார்த்திக் பிரகாசம்...

நானொரு சாதீய இந்துவாகச் சாகமாட்டேன்.

மீண்டுமொரு ஆணவக் கொலை. பட்டியலின சாதீயைச் சேர்ந்தவரை காதலித்து மணந்துக் கொண்டதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அப்பெண்ணின் அப்பன், பெரியப்பன்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரையும் மிகவும் கொடுமையான முறையில் கொலைச் செய்து ஆற்றில் வீசியுள்ளனர். சகாரா பாலைவனம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பசுமையாக இருந்ததாம்..! செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் அல்ல, பெரும் ஏரியே கொட்டிக் கிடக்குறதாம்..! மனிதனின் உடலையறுத்து செய்யும் மருத்துவத்திற்கும் மனித இயந்திரங்கள் கண்டுபிடித்தாகிவிட்டதாம்...! இரவில் வெளிச்சத்திற்கான மின்சாரத் தேவையைப் போக்கிட செயற்கை நிலவுச் செய்கிறார்களாம்...! அனைவருக்கும் கழிப்பிடம் சாத்தியப்படும் நோக்கில் நீர் உபயோகிக்காமலேயே,கழிவுகளை ஓரிடத்தில் தேக்காமல் அவற்றை மறுசுழற்சிக்குட்படுத்தி, சுத்தம் செய்யத் தேவைப்படும் நீரை அதன் மூலமே பிரித்தெடுக்கும் - ஏதோ நானோ மெம்பரேன் டெக்னாலாஜியாம்...! இவ்வாறு மேலை நாடுகளெல்லாம் அறிவியலை தங்களுக்குள் கையகப்படுத்தி உலகத்தின் மறுபக்கச் சுவரைத் துளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பைசாக்கு புரோஜனமில்லாத சாதியைத் தூக்கிப் பிடித்த...

எங்கிருந்தோ வந்தோம்

அலுவலகத்தில் நெருக்கமான நண்பர்கள் அமைவார்கள் என்ற நம்புவதெல்லாம், "கஜா" புயல் கண்டிப்பாகச் சென்னைக்கு மழையைத் தரும் என்ற எதிர்பார்ப்பை போலத் தான். இறுதியில் மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சும். இருப்பினும் நகரம் தூங்கிக் கிடக்கையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் மட்டும் கொட்டித் தீர்த்த மழையைப் போல எப்பொழுதாவது சிலர் அமைவார்கள். ஒருவர் இருவர் அமைந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் கிட்டத்தட்ட இருபத்தைந்து பேருக்கு மேலொரு  அணியே அமைந்தால்.? அதுவும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாகப் பயணித்தால்.! அது எந்தவொரு  இயற்கை நிகழ்வும் அரங்கேறிடாத டிசம்பர் மாத சென்னையைப் போன்றது. பெரும் ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் தரக் கூடியது. இரண்டு வருடத்திற்கும் மேலாக பயணித்த திட்டப்பணி, போதுமான அல்லது எதிர்பார்த்த  முழுவடிவத்தை  அடைந்துவிட்டதால் இத்தனை நாள் சுமந்திருந்த சுமையை இன்று ஒரே நாளில் இறக்கி வைத்து தன் சவாரியை முடித்துக் கொண்டது. பயணம் முடிந்துவிட்டது. இனி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணம் என்பது நியதி. எதிர்பார்ப்பும் கூட. ஆனால்  பணத்தையும், அறிவையும் பெருக்க...

மீண்டும் அவள் தொட்டிலுக்கு

'ஓ. இத இப்பிடி மாத்திட்டாங்களா ..!'; 'ஹே.. இந்த எடத்துல தான் தீனிக் கட இருந்துச்சு..?'; 'ச்சார் கூட மாத்தல பாரு'; 'தோ. இங்க கேட் மாதிரி பெருசா கம்பி இருக்கும் தர டிக்கெட் எடுத்தவங்க பெஞ்சு டிக்கெட் பக்கம் போகாம இருக்குறதுக்காக. அப்பவும் நம்மாளுங்க தாண்டி போய்ட்டு தான் இருப்பாங்க. அந்த கேட்டு சும்மா கடனேனு நிக்கும்.!' முன்ன இந்தளவுக்கு சவுண்ட் 'டம்முடம்மு' ன்னு இருக்காது பாத்துக்க.. கக்கூஸ் பக்கம் போகவே முடியாது. இப்போ பரவால்ல. "நாம ஒருதடவ ஆயா வீட்டுக்கு வந்திருந்தப்ப, மாமா ஒன்ன 'பிரியமானவளே' படத்துக்கு கூட்டிட்டு போனாறே. ஞாபகம் இருக்கா.?" அது இந்த தியேட்டர் தான். அப்போ 'ஜோதி தியேட்டர்'ன்னு இருந்துச்சு. இப்ப 'சரஸ்வதி தியேட்டர்'ன்னு மாத்திட்டாங்க. "சொந்த ஊரில் சிறுவயதில் எப்பொழுதோ சென்ற திரையரங்கிற்கு, இருபத்தியேழு வருடங்கள் கழித்து மறுபடியும் சென்றால் எப்படி இருக்கும்.?" படம் முடிந்து வெளியே வரும் வரையிலும் இப்படிதான் சிலாகித்துக் கொண்டு இருந்தாள் அம்மா. கார்த்திக் பிரகாசம்...

புன்னகைச் செய் மனமே

தட்டிக் கொண்டே இரு நிறுத்தாதே. உனது கதவுகள் ஒருநாள் திறக்கும் அன்று அழையா விருந்தாளிகள் - வாசலில் உன்முன் மண்டியிட்டு நிற்பார்கள் உன்னை ஏறி மிதித்தவர்கள் உதறித...

மரணத்தின் மடியில்

அன்று குடிக்கவில்லை. வழக்கமாக புகைக்கும் அளவிற்குக்கூட புகைக்கவில்லை இருந்தாலும் உடல் அசௌகரியமாக இருந்தது. நானே மருத்துவமனைக்குச் சென்றேன் வெள்ளைத் தாளில் ஏ...

புத்தனாகிய நான்

நதி வழி இலையாய் சில வேளைகளில் சலன சஞ்சாரமற்ற மோனத்துடன் சில வேளைகளில் பேரியாதாளி அவயத்துடன் நகர்ந்திடும் நாட்கள் சமுத்திரத்தில் சேர்க்குமா சாக்கடையில் தள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. கார்த்திக் பிரகாசம்...

தெருவில் ஒரு கவிதை

இன்று படுக்கையிலிருந்து எழவே மணி பத்தாகிவிட்டது. ஒற்றை தலைவலி வேறு. ஒரு டீக்குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் மணியாகிவிட்டது, அலுவலகத்திற்குக் கிளம்பலாமா இல்லை டீக்கடைக்குப் போலாமா.! என்ற சில நொடி யோசனையின் முடிவில் 'டீக் குடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதே சாலச் சிறந்தது' என்று எப்போதுமே எடுக்கும் நிரந்தர முடிவை முன்னெடுத்து சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கித் தெருவில் நடந்தேன். அடுக்குமாடி கட்டத்திலிருந்து இருவர் வெளியே வந்தனர். அது ஆண்கள் தங்கும் மேன்சன். ஆதலால் அவர்கள் தந்தையும் மகனும் என்பதை எளிதாய் யூகித்தறிய முடிந்தது. அகண்ட தெருவின் இடது ஓரத்தில் அவர்களிருவரும் பேசிக் கொண்டே நடக்க, அவர்களைக் கவனித்தவாறே வலப்பக்கத்தின் ஓரத்தில் நான் நடந்தேன். பதினைந்து அடிகள் நடந்திருப்போம். திடுமென மகனை நிற்கச் சொல்லிவிட்டு பின்னால் திரும்பி மேன்சனை நோக்கிச் சென்றார் தந்தை. மகன் நின்றார். நானும் தான். மேன்சனின் வாசலில் அமர்ந்திருந்த வயதான செக்யூரீட்டியின் கைகளில், மேல் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து தள்ளினார். அந்தச் செக்யூரீட்டி வேண்டாமென்று...

அணைத்து வையுங்கள்

அடுத்தமுறை நீங்கள் ஓரு கூட்டத்தில் பங்கேற்கும் போது தயைக் கூர்ந்து தங்களது அலைபேசியை அணைத்து வையுங்கள் ஏனெனில் அங்கு ஓர் எழுத்தாளன் - கவிஞன் - பேச்சாளன் உங்களது ...

கவிஞர் ஆத்மாநாம் விருது 2018

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையால் வழங்கப்படும் 'கவிஞர் ஆத்மாநாம் விருது' இவ்வருடம், கவிஞர் போகன் சங்கர், ஆர்தர் ரைம்போ எழுதிய "நரகத்தில் ஒரு பருவக்காலம்" புத்தகத்தி...

முதல் அனுபவம்

உடல் முழுவதும் நடுக்கம் பரவியிருந்தது. "என் இதயத் துடிப்பு எனக்கே கேட்கிறது" என்பார்களே அதை இன்றுதான் முதல்முறையாக உணர்ந்தேன். அப்படிபட்ட நடுக்க மனநிலையில் தான் ...

சாதியே - நீ செத்துப் போ

மதம்மாறி மணம் கொண்டவர்களை கண்டதுண்டு..! மணமான பின் மதத்தை மாற்றிக் கொண்டவர்களையும் கண்டதுண்டு..! சாதிமாறி மணம் கொண்டவர்களை கண்டதுண்டா..? மணமான பின் சாதியை மாற்றிக் க...

மற்போர்

இதழ்களிட்ட சமரில் நேர்ந்ததெல்லாம் சுகமாய் வலித்திடும் நற்காயங்கள்...!! அக்காயங்களாற இதழ்களின் மற்போரே உடனடி மருந்து...!! கார்த்திக் பிரகாசம்...

இறந்தவன் பேசுகிறேன்

அன்றுதான் முதல்முறை இறந்தேன்...! மீசை முளைப்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிய ஓர் துர்நாளில் பேச்சு வாக்கில் "போய்த் தொல" என்று அம்மாவைச் சொல்லிவிட்டேன்..! எப்போது...

தற்காலிக மரணம்

நத்தையாய் விழிகள் நகர்கின்றன சுவாசிக்க முடிகின்றது கால்கள் அசைகின்றன...! ஆக சாகவில்லை தற்காலிக மரணம்தான்...! ஆந்தையாய் மனது அலையும் புரிந்தும் புரியாதது போல உயிரைப் போட்டு உருட்டும்...! காட்டருவி கொட்டும் சப்தத்திலும் கண்களை மூடினால் சாரலின் சுகத்தில் ஆன்மாவிற்குள் ஓர் அமைதி பரவுமே...! அதுபோலவே அவளது முகம் மனமெங்கும் பரவும் தடுத்திட முடியாது...! வேரின் இடம் நீருக்குத் தெரிந்திருப்பது போல நீரின் தடம் வேர் அறிந்தே இருப்பது போல அவள் நினைவும் என் நெஞ்சமும் ஒன்றாகும்...! எதற்குள் எது அடங்கியிருக்கிறது என்றறிவது இமைப்பதைப் போல அவ்வளவு எளிதானது அல்ல மண்ணில் மழைத் தொட்ட முதல் இடத்தைக் கண்டறிவது போல கடினமானது...! எப்புலனுக்கும் புலனாகாது...! அந்த நேற்றைய நினைவுகள் உடலை இலகுவாக்கி மனதின் எடையைக் கூட்டும்...! குருதியோட்டம் குலைவுறும்...! விழிகளில் காட்சிகள் பதியாமல் வெறுமனே விழும்...! கரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒன்றும் இருக்காது...! கால்கள் முன்னாலும் காலம் பின்னாலும் உடலை முறுக்கி உயிரைக் கட்டி இழுக்கும்...! மெல்லிய வருடும் காற்றில் உயிரின் ஈரம் ...

அந்த அழகானத் தக்காளிச் சட்னி

மிஞ்சிப் போனால் அதிகபட்சமாக மூன்று தோசைகளைச் சாப்பிடலாம். அவ்வளவுக்கு தான் சட்னி இருந்தது. அது ஒரு அழகானத் தக்காளிச் சட்னி. சாப்பிட சாப்பிட நிறைந்தும் நிறையாமலும் வயிற்றைப் பார்த்துக் கொள்ளும் மாயாஜால சட்னி. நான்கைந்து தக்காளி பழங்களை நன்கு வதக்கி, தேங்காயைச் சில்லு சில்லுகளாகத் துருவி, மிளகாய் மற்றும் கல் உப்பை தூவி அம்மியில் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து எடுத்தால், வாசம் அதற்குள் வயிற்றின் வாசலில் நின்று பசியின் கதவைத் தட்ட துவங்கியிருக்கும். பின் ரெண்டு தேக்கரண்டி எண்ணெய்யில் ஐந்து கிராம் கடுகை மிதமான வெப்பத்தில் குளிக்க வைத்து அதை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் கொட்டி கலக்கி முடிப்பதற்குள் மொத்தக் குடும்பமும் தட்டுடன் சாப்பிட தயாராயிருக்கும். அந்த அழகானத் தக்காளிச் சட்னிக்குத் திருஷ்டிக் கழிப்பது போல் ஆங்காங்கு எண்ணெயில் குளித்தக் கடுகுக் கூட்டம் மிதந்திருக்கும். ருசியைக் குறிக்க வேண்டிய இடத்தில் சம்மந்தமே இல்லாமல் "அழகு" எப்படி வந்தது என்று நீங்கள் கேட்கலாம். நியாயம் தான். சாதாரணமான தொட்டுக் கொள்ளும் பதார்த்தமாக மட்டும் இருந்திருந்ததால் அதன் சுவையைப் பற்றிய விவ...

சாம்பல் காடு

இருவரும் சந்தித்துக் கொண்டனர் அவ்விரு பெண்களும் முந்தைய நாள் வரை ஒருவரையொருவர் அறிந்ததில்லை வாழ்க்கையையே புரட்டிவிடும் மிகக்கொடிய நிகழ்வொன்று தனக்கு அரங்கேறும் அச்சூழ்நிலையில் அவ்வாறே பாதிக்கப்பட்ட மற்றொருவரைச் சந்திப்போமென்று இருவரிலொருவரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் ஆனால் அவ்விருவரும் ஒற்றைத் துன்பத்தின் வேதனையில் இன்று கைக்கோர்த்து நிற்கின்றனர் இருவருக்கும் சம்மந்தமே இல்லை வேறு வேறு மாநிலம் வெவ்வேறு மொழி இருந்தாலும் இருவருக்கும் சம்மந்தமுண்டு காதல் கண்டு கணவனைப் பெற்று எவருடைய சாதிப் பசிக்கோ அவனைக் காவுக் கொடுத்தவர்கள் பெற்றோரின் சுயசாதிக் கௌரவமென்னும் இழிவினால் தலைவிதி மாற்றப்பட்டவர்கள் சிலரின் உணர்ச்சிவசத்தால் தம் கனவினைத் தொலைத்தவர்கள் கணவனையும் காதலையும் கண்முன்னே இழந்தவர்கள் அதிலொருத்தியின் இறந்தகாலம் மற்றொருத்தியின் நிகழ்காலத்தின் முன்பிரதியாய் நின்று எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நல்குகிறது அன்பாய் அரவணைக்கிறது ஆறுதலாய் தோளில் சாய்த்துக் கொள்கிறது நீண்டதொரு போராட்டத்திற்கான வாளை காலம் அவர்களின் கைகளில் திணித்திருக்கின்றது அதனை அவர்கள் உணர்ந்தே இருக்கின்றார்கள் கார்...

சென்னையில் பால்துரை

மதிய நேரத்தின் மஞ்சள் வெயில் மாநகரத்தை நிறம் மாற்றிக் கொண்டிருந்தது. வெப்பத்தைக் கடிந்தும்; காறி உமிழ்ந்தும்; மற்றவர்கள் உமிழ்ந்ததை மிதித்தும் மந்தையாய்  பெருங்கூட்டமொன்று நகர வாழ்க்கையின் பரபரப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. காண்பவர்களின்  உடல்களிலெல்லாம் வியர்வைத் தூறல்கள். அக்கடுமையான வெயிலிலும் டீக் கடையில் கூட்டத்திற்குக்கொன்றும் குறைவில்லை. டீயை மட்டுமே குடித்து வாழும் மனித உயிர்கள் ஏராளம் போலும். டீயோடு சேர்த்து உருவத்தில் மட்டுமே வெவ்வேறாக  இருந்த போண்டாவும் பஜ்ஜியும்  போட்டிப் போட்டுக் கொண்டு காலியாயி கொண்டிருந்தன. போண்டாவையும் பஜ்ஜியையும் அவசர அவசரமாக தூக்கிக் கொண்டிருந்த கைகளின் இடைவெளியில் அவன் தெரிந்தான். எலும்புகளை இழுத்து இறுக்கிக் கட்டியிருக்கும் தோல். அவ்விறுக்கத்தில் குத்திட்டு துருத்தி நிற்கும் எழும்புகள். ஒரு எலும்புக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளி மழைக் காலத்து தார்ச் சாலையை போல அங்கங்கு பள்ளமாகவும், சிறுசிறு  குழிகளாகவும் இருந்தன. அவன் சட்டைப் போட்டிருக்காததால் அவை தெளிவாகக் கண்ணுக்குப் புலனாயின. இடுப்புக்கு மேல் தொடங்கி பாதிக் காலை கூட மறை...

அடிநாதம்

அதிலொன்றும் ஆச்சரியமில்லை. உலகம் புரிந்திடாத, உறவுமுறைகளின் புதிர்கள் தெரிந்திடாத பருவத்திலேயே அழகானத் தோழமையுடன், ஆழமான அன்புணர்வுடன் ஒரு சிநேகிதி கிடைக்கப் பெற்றிருந்தால் இச்சமயம் நீங்களும் ஒரு கவிஞனாக இருந்திருப்பீர்கள். கலையை ரசிப்பவனாக இருந்திருப்பீர்கள். அது உண்டாக்கும் ஒவ்வொரு உணர்ச்சியையும் ஆழ்ந்து நேசிப்பவனாக இருந்திருப்பீர்கள். அதனை உடலெங்கும் பரவவிட்டு, ஒவ்வொரு நொடியிலும் இருத்தலின் சுகத்தை அனுபவித்திருப்பீர்கள். இருத்தலின் சுகத்தில் இல்லாமல் போகும் வழியையும் கண்டடைந்திருப்பீர்கள். அது சொர்க்கத்திற்குச் செல்லும் வழியல்ல. நம் சொர்க்கத்தை நாமே கட்டமைத்துக் கொள்ளும் வழியென்று அறிந்திருப்பீர்கள். எனக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் புரிதல் மற்றவர்களுக்கு புரியாது. வேறாரும் அவ்விடைவெளிக்குள் புகுந்திடவும் முடியாது. அது எங்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமான நிரந்தர புகலிடம். உடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கிணற்றில் நீர் இறைப்பது போல நெஞ்சில் உணர்வுகளைத் தொடர்ந்து இறைத்துக் கொண்டேயிருப்பாள். எழுத முயற்சித்தால் காகிதத்தில் அவளது முகமே தெரியும். கொட்டித் தணியும் உணர்வுகளுக்கும், ...