Skip to main content

Posts

Showing posts from 2017
பறவையே எங்கு இருக்கிறாய்...!!! வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு இசை தான் இளைப்பாறல். அது பிறப்பாயினும், இறப்பாயினும், கொண்டாட்டமாயினும், துக்கமாயினும் எதுவாயினு...
பேரில்லாமல் ஓர் உறவு இருக்கலாமா..! ஆதலால் அந்த உறவுக்கு ஓர் பெயரிட வேண்டும்..! ஆனால் ஏற்கனவே இருக்கும் உறவைக் குறிக்கும் எந்தப் பெயராகவும் அது இருக்கக் கூடாது..! பேரு...

கிறிஸ்துமஸ்

சிறுவயதில் நானும் தங்கையும் அப்பாவிடம் "கிறிஸ்துமஸ் ஸ்டார்' வாங்கித் தர சொல்லி அடம்பிடிப்போம். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிவந்து பல்புக்கு மின்னிணைப்பு கொடுத்து வீட்டின்முன் தொங்க விடுவார் அப்பா. டிசம்பர் மாதம் தொடங்கும் போதே வீட்டின்முன் ஸ்டார் வெளிச்சமாய்த் தொங்கும்.வீடே நட்சத்திர வெளிச்சத்தில் அழகாய் இருக்கும். அம்மா கிறிஸ்துமஸ் அன்று சர்ச்க்கு கூட்டிப் போவார். "இது கிறித்துவர்கள் கொண்டாடும் பண்டிகை நமக்கெதற்கு.." என்று அவர்கள் ஒருபோதும் சொன்னதில்லை. அக்கம்பக்கத்துத் தெரு நண்பர்களெல்லாம் இணைந்து தெருவின் மையப்பகுதியில் உள்ள வீட்டின் முன் குடில் அமைத்து சீரியல் பல்புகளைக் கொண்டு அலங்கரிப்போம். குடிலின் அடித்தளப் பகுதி முழுதும் வைக்கோல் பரப்பி அதன்மீது மாதா சிலை, இயேசு கிறிஸ்துவின் குழந்தைச் சிலை, வண்ணமயமான மணிகள் மற்றும் நட்சத்திரங்கள் என்று குடிலே கோலாகலமாக இருக்கும். தெருவின் மொத்த சிறுவர் பட்டாளமும் அந்த குடிலின்முன் இருக்கும். நண்பர்களுக்குள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் தரிக்கக் கடும் போட்டி நிலவும். கடைசியில் கிறிஸ்துமஸ் தாத்தா உடை வைத்திருப்பவனுக்கோ அல்ல...
உன் இமைகளைப் பூட்டு..! இரவு ஒரு ஆறுதல்..! இரவு ஒரு இளைப்பாறல்..! இமைகளைப் பிணைத்து ஆறுதல் கொள்..! இதயத்தைத் திறந்து இளைப்பாறு..! பயத்தால் இரவைத் தண்டிக்காதே..! இரவை அனுபவி..! இருளை அள்ளிப் பூசிக்கொள்..! கட்டிலில் படுத்து கனவுகளைக் கட்டியிழு..! மனம் எங்கோ செல்லட்டும் தடுக்காதே..! பின்தொடர்..! கனவென்ற மாயநதியில் கண்கள் நிறையட்டும் ..! மனம் திறக்கட்டும்..! கற்பனைகள் நீளட்டும்..! கரைந்து போ..! உன்னை மறந்து போ..! உலகம் தொலைந்து போ..! மறு உலகத்தைக் கண்டுபிடி..! உன் இமைகளைப் பூட்டு..! கனவுகள் மொய்க்கட்டும்..! வாழ்க்கை விரியட்டும்..! கார்த்திக் பிரகாசம்...
பெண்ணாய் இருப்பது கடினமென்றால் பெண்ணில் அவளாய் இருப்பது அதைவிடவும் கடினம்.. கார்த்திக் பிரகாசம்...
காதலும் காமமும் அவள் தர தீரா...!!! கார்த்திக் பிரகாசம்...
அலமாரியை பார்த்தப்படியே எந்தச் சட்டை அணியலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக அந்தச் சட்டைக் கண்ணில் பட்டது. கடைசியாக அந்தச் சட்டையணிந்து சில நாட்கள் தான் இருக்கும். இருந்தாலும் அந்தச் சட்டையிலேயே கண்கள் நிலைகுத்தி நின்றன. ஏதேதோ நினைவுகள் அலமாரியை விட்டு இறங்கி வந்து காட்சிப் பேழையாக கண்முன்னே விரிந்தன. அது நீலமும் கருப்பும் ஒன்றுக்கொன்று கலந்து நிறைந்திருக்கும் சட்டை. அவளுக்கு நீலம் பிடிக்கும். எனக்கு கருப்பு பிடிக்கும்.  இரண்டு நிறங்களும் நிறைந்திருப்பதால் எங்கள் இருவருக்கும் இந்தச் சட்டையைப் பிடிக்கும். அந்தச் சட்டை அணிந்திருந்த ஒருசமயம், இந்தச் சட்டையில் ஒரு தனித்தன்மை இருக்கிறது தெரியுமா.? சொல்கிறேன் கேள் என்றேன்.  அவள் ஆவலானாள்.! கருப்புடன் ஜோடி சேரும் அனைத்து நிறங்களுமே அழகாகும். ஏற்கனவே அழகாக இருப்பதுக்கூட கருப்புடன் சேரும்போது தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் மிச்ச அழகையும் மிச்சம் வைக்காமல் கொட்டிவிடும். அதுதான் கருப்பின் சிறப்பம்சம். ஆனால் கருப்பை அழகாக்கும் நிறங்கள் என்றுப் பார்த்தால் மிகக் குறைவு. என்னைப் பொறுத்தவரையில்  சிகப்பும் நீலமு...
நானிருக்கையில் உனக்கெதற்கு செல்லப் பிராணி என் செல்லமே.? என்னவாயினும் அதுவொரு மிருகம் தானே.! ஆம் அதுவொரு மிருகம் தான்.! ஆனால் சில சமயம் நீ உன் மிருகத்தனத்தைக் காட்ட...
ஆளில்லா விளையாட்டு மைதானத்தில் நான் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தேன். இரவுடன் அமைதி சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, ரத்தம் குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப் பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் குரல்களை அவை என் காதுகளில் பாட்டாய் பாடிச் சென்றன. எதிர்ப்பேதும் செய்யாமல் கவனமாய் கேட்டுக் கொண்டேன்.வெளிச்சங்கள் நிழல்களாக இல்லாமல் வெறுமனே தரையில் விழுந்து தற்கொலைக்கு முயன்றன. பார்வை மங்கிய மின்கம்ப விளக்குகள் தலைக்குனிந்து எதையோ வெகுநேரமாகத் தேடிக் கொண்டிருந்தன. கண்டுபிடிக்க முடியவில்லை போலும். நான் இருக்கும் வரையில் அவற்றின் தலை நிமிரவேயில்லை. கடைசியாய் வந்த காற்றும் காணாமல் போனது வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் தினக்கூலிகளை போல எந்தவித பரபரப்பும் இல்லாமல் அதன் போக்கில் மேகங்கள் கலையத் தொடங்கின. யாருமில்லா வானில் நிலவு மட்டும் வெளிச்சமாய் இருந்தது. மற்றுமொரு இரவில் நானும் நிலவும் தனியானோம். இரவுதான் விடியலுக்காகக் காத்திருக்கின்றது. இந்த நிலவு யாருக்காகக் காத்திருக்கின்றது. கார்த்திக் பிரகாசம்...

சிம்பா

"மேமா.. அழாத..! இந்தா.. இந்த சிம்பா'வ வெச்சிக்கோ..!" பியாவின் அந்த மழலைக் குரல் ராகவியின் காதுகளில் ஒலித்திடாத நாளில்லை. மலையாள மொழி ஆனந்தப் பூரிப்படையும் அந்த மழலையின் வாய்மொழியில், தனது அத்துனை துயரங்களையும் தூக்கியெறியும் தைரியம் வந்துவிடும் அவளுக்கு. அந்த மழலையின் முகத்தைக் கண்டாலே ராகவியின் மனம் எடையிழந்து லேசாகிப் போகும். முடங்கிப் போன வாழ்க்கையை மீட்டுத் தர வந்த தேவனின் தூதாகவே பியாவை நினைத்தாள் ராகவி. புயல் போல, எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு; கசப்புகளையும் காயங்களையும் மட்டும் நிறைய தந்து; தடம் தெரியாமல் சென்றுவிட்ட திருமண வாழ்க்கைக்கு பிறகு, ராகவிக்கு அமைந்த ஒரேயொரு ஆறுதல் தன்னுடைய அண்ணன் மகள் பியா மட்டும் தான். சிம்பா, அதுவொரு அழகிய சிங்க பொம்மை. ராகவி பியாவுக்கு வாங்கித் தந்தது. பியாவிற்கு அந்த பொம்மை என்றால் உயிர். தூங்குவது, குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது, விளையாடுவது என நாள் விடிந்தது முதல் பொழுது மடியும் வரை எல்லாமே சிம்பாவோடு தான். பெரிதும் எதிர்பார்த்த திருமண வாழ்க்கை சிறிதும் எதிர்பாராத விதமாக முடிந்துவிட, அமெரிக்கா சென்றுவ...
காமத்தில் திருப்தியென்பது செலவிடும் நேரத்தில் இல்லை..!!! அளவிடும் காதலில் உள்ளது...!!! கார்த்திக் பிரகாசம்...
வாயக் கட்டி வயித்தக் கட்டி வரிக் கட்டி வட்டிக் கட்டியே வாழ்ந்து சாகுது பாமர பொது சனம்...!!! ஊர ஏச்சி உண்மைய மறச்சி உணர்வுகள தொலைச்சி உள்ளதெல்லாம் கொள்ளடிச்சி வாயில ப...
சென்னை வந்தது முதலான ஐந்து வருடக் காலத்தில் ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக பண்டிகை விடுமுறையை முழுமையாக அனுபவித்தது இந்தமுறை தான். ஆர்ப்பாட்டமில்லாத, கழுத்தை நெரிக...
போலிசாரின் உத்தரவையும் மீறி சாலையில் போராட்டத்திற்கு குவியும் மக்கள் கூட்டத்தைப் போல சூரியனின் கடும் வெயிலையும் மீறி வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டுக் கொ...
உன் முத்தமொன்றே போதும் ஆனாலென்ன ஒரு முத்தம் மட்டும் போதாது...!!! கார்த்திக் பிரகாசம்...
ஒரு ஆணைத் தகுதியானவனென ஒருமுறை கருதிவிட்டால் போதும் அவன் வேண்டினாலும் விலகினாலும் விரும்பினாலும் ஒதுங்கினாலும் அடைமழையாய் அன்பைக் கொட்டித் தீர்க்கிறார்கள...
சொந்த ஊர் பிழைப்புக்காக வேறெதோ மூலையில் தூக்கியெறிந்தாலும் விடுப்பில் திரும்பி வரும் போதெல்லாம் கால் பட்டதும் மடியில் தூக்கி வைத்து கொஞ்சும் சுகமிருக்கிறேத...
இருளை அறிய கண்கள் தேவையில்லை...!!! உன்னையறிய நீயென் அருகினிலிருக்க வேண்டிய அவசியமில்லை...!!! காற்றில் மிதந்து வரும் உந்தன் வாசனைச் சொல்லிவிடும் நிந்தன்  சௌக்கியத்தை...!!! ...
இன்பத்தினும் பேரின்ப மென்பது தீபாவளிக்கு தட்கல் டிக்கெட் கிடைப்பதாம் கார்த்திக் பிரகாசம்...
என் விருப்பமும் அவள் விருப்பமும் ஒருபோதும் ஒன்றுபோல இருந்ததில்லை...!!! அதே சமயம் வேறாகவும் இருந்ததில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
பண்டிகை வந்தாச்சு...! பார்க்கும் கடைகளிளெல்லாம் மனிதத் தலைகள்...! எல்லாவற்றையும் வாங்கத் துடிக்கும் சில முகங்கள்...! எதையுமே வாங்க முடியாத ஏக்கத்தில் சில முகங்கள்...! நின...
வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் அமைவதென்பதெல்லாம் பெருஞ்சிறப்பான விடயமல்ல. பொழுது விடிவது போல்,  இரவு மடிவது போல் அதுவும் இயற்கையான தற்செயல். யார் விரும்பினாலும், வேண்டாவிட்டாலும் அது நடந்தே தீரும். ஆனால் அந்த நண்பர்களே வாழ்க்கையாகிவிடுவது என்பது வேறு...! அது சென்னையில் வெயிலும் மழையும் ஒன்றாக மண்ணை முத்தமிடுவது போன்றதொரு அரிய செயல். எல்லாருக்கும் எளிதாக அமைந்துவிடாது. மீசைக் கூட முளைக்காத பள்ளிப் பருவத்தில் பூத்த நட்பு, பத்தாண்டுகளைக் கடந்தும் ஒரே பாதையில் ஒன்றாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் இலக்கென்பது இறப்பாக மட்டும்தான் முடியும். யாருக்குத் தெரியும் அதன்பின் கூட தொடரலாம்.  நம் சந்ததியினர் நம் நட்பை வளர்த்தெடுக்கலாம். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். இதன்பின் சொந்தமாய் யார் வந்துச் சேர்ந்தாலும், யார் யாரோ விட்டு விலகினாலும் இந்த நட்பும் நண்பர்களும் இருக்கும்வரை இந்த வாழ்வை வஞ்சகமில்லாமல், எந்தக் குறையுமில்லாமல் கரையேற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை மனமெங்கும் கானல் நீராய் அல்ல கடல் நீராய் நிரம்பி வழிகிறது. கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி. பிறப்பால் வந்த சொந்தங...
பரட்டைத் தலை பிறந்த நிறத்தை மறந்திருந்த சட்டை இடுப்பை இறுக்கமாக அணைத்திருந்த கால்சராய் காலணிகளைக் கண்டு வெகுநாட்கள் ஆகியிருந்த பாதங்கள் முகம் பாவமாக இருக்கல...
எனதருமை கள்வா...! காதலா...! கவிதைப் பேசியே மடங்கொண்ட மங்கையை மயக்குகிறாயே..! எங்கு கற்றாய் இந்த வித்தையை..? தாமரைப் பூவை இதழ்களிலும் முக்கனிச் சுவையை முறியடிக்கும் பெரு...

பயணம்

பயணத்தைப் பற்றி எழுதும் போது தன்னிச்சையான மகிழ்ச்சி. ஏனெனில் கண்டைந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வது மட்டும் அதன் நோக்கமல்ல. படிப்பவர்களை நம்மோடு அழைத்துச் சென்று நாம் உணர்ந்து அனுபவித்த இன்பங்களை அவர்களையும் அனுபவிக்க வைப்பது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கேற்ப அவர்களையும் அந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளத் தூண்டும் ஒரு முயற்சி. எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வபோது அந்த பயணத்தை எழுத்துக்களின் வழி நாமே மற்றொரு முறை அசைப்போட்டு பார்த்திட ஒரு வாய்ப்பு. இயற்கையைத் தேடிச் செல்லும் அனைத்து பயணமமுமே இனிமையானது தான். காரணம் சமரசமில்லா இயற்கையின் அழகு ஒருபோதும் கண்களுக்கு தொய்வை தருவதில்லை. அதனழகை அள்ளி அள்ளி அருந்தலாம். கடந்த வார தொடர் விடுமுறை அப்படியொரு இனிமையான பயணத்தை அலுவலக நண்பர்களுடன் ஏற்படுத்தி தந்து உதவியது. ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் சன்னமான வெயிலுடன் சனிக்கிழமை பொழுது புலர்ந்தது.மழையின் கொடையினால் காணாமல் போயிருந்த அருவிகள் ஆங்காங்கே தங்கள் அடையாளத்தை மீண்டும் புதுப்பித்திருந்தன. மரங்களும் பூக்களும் இலைகளும் முலாம் போட்டு பூசியது போல் ப...
ஏன் என்மேல் அளவில்லா அன்பை அருவி போல் அனைத்து நேரமும் கொட்டுகிறாய்..? பதில் என்னவென்று தெளிவாகச் சொல்ல தெரியவில்லை ஒருவேளை நீ கவிதை எழுதுவதனால் கூட இருக்கலாம்..! ச...
பேனாவில் காதலை நிரப்பித் தந்து கவிதை எழுது என்கிறாள்...! எதற்காக என்றால் எனக்காக என்றாள்...! எழுதத் தான் போகிறேன்...! கவிதையில் காதலை...! காதலென்னும் கவியை..! ஆனால் எழுதுபவன...
குழந்தைகள் தொடர்வண்டியில் பாட்டியுடன் அமர்ந்திருக்க வண்டி நகரத் தொடங்கியதும் சிரிப்பு ஒருகண்ணில் ஈற்றீல் ஈரம் மறுகண்ணிலென வேகமெடுக்கும் வரை டாட்டா காட்டிக...
முதல் விருப்பம் முதல் காதல் முதல் கைக்கோர்ப்பு முதல் கவிதை முதல் முத்தம் முதல் உறவு முதல் அணைப்பு முதல் பிரிவு முதல் கண்ணீர் முதல் நீ முதல் நான் முதல் நாம்...!!! கார்த...
இடைவேளையில் வாசலில் வந்து திண்பண்டங்களை விற்கும் அந்த வயதான பாட்டியை இப்பொழுது எந்தப் பள்ளியின் வாசல்களிலும் காண முடிவதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
பிணப் பூக்கள் நான் ஒரு மலராகப் பிறந்தேன் ஏதோ ஒரு மங்கையின் கூந்தலில் மணம் பரப்ப வேண்டும் அது அவள் மனம் வரை பரவ வேண்டும் ஏதோ ஒரு காதலன் என்னைப் பரிமாறி தன் மனம் பறி...
சாலையில் நின்று பெண்ணொருத்தி அழுதுக் கொண்டிருந்தாள் கண்ணீரைத் துடைக்க அவளது கைகள் ஏனோ முன்வரவில்லை அவளைச் சுற்றியிருந்த காற்று ஈரமாகியிருந்தது பெரும்புயலில் சிதைந்த காட்டைப் போல கூந்தல் கலைந்திருந்தது அடைமழையிலும் அழியாத வாசலில் வரைந்த கோலத்தைப் போல நெற்றியில் குங்குமம் நிறைந்திருந்தது நானும் காற்றும் அழுகையை நிறுத்த அவளுக்கு ஆறுதல் அனுப்பினோம் காரிகை மொத்த கண்ணீரையும் இன்றே அழுதுத் தீர்த்துவிட வேண்டுமென்று முடிவுச் செய்துவிட்டாள் போல நானும் காற்றும் தோற்றுக் கொண்டே இருந்தோம் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து நான் கிளம்பிவிட்டேன் ஆனால் தோற்று தோற்று மடியில் சாய்த்து சாய்த்து அவளைத் தொடர்ந்து ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தது அந்தப் பேரமைதியான காற்று...!!! கார்த்திக் பிரகாசம்...
கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது சிந்தனைவாதியாகலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது செத்து கொண்டே சுவாசிக்கலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது சுவாசித்துக் கொண்டிருந்தும் சாகலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது காதல்வயப்படலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது கவிஞனாகலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது மழலையாகலாம் கவிதைகளை நேசியுங்கள் அவ்வப்போது மனிதனாகலாம் கார்த்திக் பிரகாசம்...
பல வருட நட்பு இங்கு ஆச்சரியமில்லை ஆனால் பல வருட காதல் இங்கு அதிசயம்... கார்த்திக் பிரகாசம்...
உன்னை நான் பார்ப்பதே அரிதினும் அரிது..! அதையும் மீறி வந்தாலும் ஒருநாள் கூட தங்கமாட்டாய் வந்த வேகத்தில் திசையறிமால் திரும்பிச் சென்றுவிடுவாய்..! இந்தமுறை மட்டுமென்ன இவ்வளவு பாசம் இரண்டு நாட்களாக நிமிடம் அகலாமல் அண்டிக் கிடைக்கிறாயே..! என்மேல் பாசமா இல்லை எப்பொழுதும் இருந்திடாத சென்னையின் இந்த மாறுபட்ட காலநிலையின் மீது காதல் கொண்டுவிட்டாயா..! வெறுமனே கையைக் கொடுத்துச் செல்பவன் இந்தமுறை நகரவிடாமல் கட்டியணைத்துக் கிடக்கிறாயே..! நீ வரும்போதெல்லாம் வெகு சீக்கிரம் விரட்ட நினைப்பவன் இந்தமுறை அதற்கும் சக்தியற்றுக் கிடக்கிறேன்..! இந்த வாரம் நீ வருவாய் என்றறியாமால் சென்ற வாரமே வேறு அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டேன்..! மறுபடியும் விடுப்புக் கேட்டால் வெகுண்டெழுவார்கள்..! அது சரி..!! அஜைல் டெக்னாலஜி பற்றியெல்லாம் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..! என் புலம்பல்கள் ஒருபுறம் இருக்கட்டும் இந்தமுறை உனைநான் எனக்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன்..! ஆம்..! மனதளவிலும் உடலளவிலும் எனக்கும் கொஞ்சம் ஓய்வுத் தேவைப்படுகிறது...! வந்தது வந்துவிட்டாய் ஊசிப் போட்டு உன்னைத் துரத்த விரும்பவில்லை மாத...
சென்று வருகிறேன்...! எனக்கு தேவையானதை நான் தேர்ந்தெடுக்க எனக்கெதற்கு தேவையில்லாத இந்த தேர்வு.! நான் மருத்துவம் கற்க விரும்பியது பணம் காசு சம்பாதிக்க அல்லவே.! மற்ற உ...
காதல் கேள்விகளுக்கு அவள் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த தவறான பதில் அவன்..!!! கார்த்திக் பிரகாசம் ...
காலையில் அம்மாவுடன் அலைபேசும் போது பேச்சுவாக்கில் நேற்றிரவு தூங்கத் தாமதாகிவிட்டது என்றார். ஏன் என்றதற்கு "லோக்கல் சேன்னல்ல நம்ம விஜய் படம் போட்ருந்தான். அதான் ம...