Skip to main content
வழக்கமாக தாமதமாக வரும் அந்த ரயில், அன்று வழக்கத்தை விட ரொம்ப தாமதமாக வந்தது.. மிகவும் பிடித்த "வைரமுத்து" எழுதிய "வைரமுத்து சிறுகதைகள்" புத்தகம் கையில் இருந்ததால் தாராளமாக காத்திருந்தான் மணி...

ஆயிரமாயிரம் பேர் சுற்றி இருக்கும் போது, அவன் மட்டும் தனியாக உலாவிக் கொண்டிருந்தான்.. அவனது நினைவுகள் லேசான இறகாய் பள்ளிக் காலத்தை நோக்கி பறந்து கொண்டிருந்ததன...

எவ்வளவு அன்பான ஆசிரியர்... எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருப்பாரே...

பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று நிறுத்திய போது, வீட்டிற்கே வந்து அப்பா, அம்மாவிடம் பேசியவராயிற்றே... அன்று அவர் வரவில்லை என்றால், என் படிக்கும் ஆசை வெறும் கனவாகத் தானே போயிருக்கும்...

எத்தனை முறை, எனக்காகத் தேர்வுக் கட்டணத்தைக் கட்டி இருப்பார்...

எல்லோருக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, எனக்கு சற்று அதிகம் கொடுப்பாரே... எது படித்தாலும் மனப்பாடம் என்ற மாயவலைக்குள் மண்டியிருந்த என்னை, புரிந்துப் படித்தால் மறத்தல் ஒருபோதும் நெருங்காது என்பதை உணர வைத்தவராயிற்றே...

இந்த புத்தகம் படிக்கும் பழக்கம் கூட, அவர் ஏற்படுத்திக் கொடுத்தது தானே.. பள்ளியில் படிக்கும் போது, அவர் படித்தப் புத்தகங்களை கையொப்பமிட்டு எனக்குத் தருவாரே...

ஒரு கட்டத்தில் வாழ்க்கையைப் பார்த்துப் பயந்து கொண்டிருந்த என்னை, வாழ்க்கையோடு போராட தன்னம்பிக்கை அளித்தவராயிற்றே... வகுப்பறையைத் தாண்டி அவர் சொல்லிக் கொடுத்த பாடங்கள்தானே இன்று வாழ்வை வழிநடத்திக் கொண்டிருக்கிறது...

என்னைப் போல் எத்தனையோ கேட்பாரற்றுக் கிடந்த மாணவர்களை, வாழ்க்கையில் கரையேற்றி விட்டிருப்பார்...

அந்த நல்ல மனிதர் இறந்துவிட்டாரே.. இரண்டு நாட்களுக்கு முன்கூட அவருடையே பணிஓய்வு விழாவில், அவரை பார்த்து கவிதை ஒன்றைப் படித்துக் காட்டிவிட்டு வந்தேனே...

மணியின் மனதில் ராமசாமி ஆசிரியர் பற்றிய பலபல நினைவுகள்
ஒவ்வொன்றாய் நீந்தி வந்தன... மனமும், கண்களும் கட்டுப்பாட்டை இழந்து துடித்தன...

இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு படித்துக் காட்டிய கவிதை வரிகளை ஒருமுறை வாய்விட்டு சொல்லிப் பார்த்தான்..

சுதந்திரமே சொந்தமாயினும்
காற்றுக்குத் தான்
ஓய்வுண்டோ...!

நேற்றனாலும்
நாளையனாலும்
நேரத்திற்குத் தான்
ஓய்வுண்டோ...!

இடம் மாறித் துடித்தாலும்
இதயத்திற்குத் தான்
ஓய்வுண்டோ...!

அமாவாசையோ பௌர்ணமியோ
கடல் அலைகளுக்குத் தான்
ஓய்வுண்டோ...!

பணிக்காலம் நிறைவானாலும்
பள்ளிச் சுவர்களில் எதிரொலித்துக்
கொண்டிருக்கும்
உங்கள் பாடங்களுக்கும்
பசுமை நினைவுகளுக்கும் தான்
ஓய்வுண்டோ...!

கண்ணீருற்று அவன் கன்னத்துக் குழிகளில் தேங்கி நின்றது...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...