மற்றவர்களைப் போல் சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து கண்டும் காணாமல் மணியால் இருக்க முடியவில்லை.. அவனுக்கு எப்போதுமே சமூகத்தின் மீது பரிதாபமும், தன் மீது ஒரு கோபமும் இருந்து கொண்டே இருந்தன...
தவறு/தகாதது என்று தெரிந்தே செய்யும் சமூகத்தின் மீது பரிதாபமும், தவறு என்று தெரிந்தும் அதை திருத்த தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபமும் தான் அது... அந்த பரிதாப உணர்வும், கோப உணர்ச்சியும் அவனை தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன..
அதுவும் காலையில் பத்து மணிக்கு, மதுபான கடையின் வாசலில் நின்றுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் நாட்டின் துரோகிகளாகவும், அரசின் தியாகிகளாகவும் கருதினான்... குடித்து விட்டு தெருவில் விழுந்து கிடப்பவனைப் பார்க்கும் போது, அவன் குழந்தை எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறதோ என்று எண்ணி அஞ்சுவான்.. காலை வெயிலில் மது வாங்க வரிசையில் நிற்பவனைக் கண்டால், அவன் தாய் தள்ளாத வயதிலும் ரேஷன் கடையில் அரிசி வாங்க, முழங்கால் வலியில் தள்ளாடுவதாய் நினைத்து கண்ணீர் சிந்துவான்... மது அருந்திய ஒருவன் சாலையில் போதையில் தூங்குவதைப் பார்த்தால், அவன் குடும்பம் அங்கு பட்டினியில் தூங்காமல் தவிப்பதாய் நினைத்து இவன் தவிப்பான்...
மணிக்கு கிரக, ஜாதகங்களில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் "மது தான் நாட்டை நாசமாக்கும் சனி" என்று உறுதியாக நம்பினான்... ஆனால் தன்னால் எதிர்த்து போராடும் போராளியாகவும் இருக்க முடியாமல், ஏத்துகிட்டு வாழும் ஏமாளியாகவும் இருக்க முடியாமல், நடுவில் கோபத்துடன் கூடிவாழும் கோமாளியாக இருப்பதை நினைத்து நடுராத்திரியிலும் எழுந்து கண்ணீர் விடுவான்...
அன்றும் தனது வழக்கமான மனப் புலம்பல்களுடன் உறங்கச் சென்றான்.... குடித்து குடித்து ஊரே அழிந்து சுடுகாடாய் இருப்பது போல் கனவு வந்தது...
மணி பயந்துப் போய் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தான்.. அதன் பின் அவனுக்குக் கொஞ்ச நஞ்சத் தூக்கமும் இல்லாமல் போயிற்று...
காலையில் வழக்கம் போல எழுந்து வேலைக்குச் சென்றான்.. அதிசயமாக மதுபானக் கடையில் யாருமே இல்லை... ஆச்சரியத்தில் சந்தோஷம் அடைந்தான்... அருகில் போய் பார்த்த அவனுக்கு பேரின்பமாய் இருந்தது... அரசு அதிகாரிகள் அந்த மதுபானக் கடையை காலி செய்து கொண்டிருந்தனர்...
அந்த அதிகாரி,கடை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாக அங்கிருந்த சில "குடி"மகன்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்... நிரந்தரமாக கடை அகற்றப்பட்டதாக எண்ணிய அவனின் சந்தோசத்தில் கல் விழுந்தது... இருந்தாலும் இப்போதைக்குக் கண் முன்னே இருந்து அகற்றபட்டதே என்று எண்ணி நிம்மதி பெருமுச்சு விட்டுவிட்டு அலுவலகத்திற்கு நடந்தான்...
எப்போதும் அவன் அந்த சுடுகாட்டின் வழியாகத் தான் நடந்து செல்வான்.. அது தான் அலுவலகத்திற்குப் பக்கம் அவனுக்கு... அன்றும் அதே வழியாக சந்தோசமாக நடத்து கொண்டிருந்தான்...
சிறிது தூரம் தான் சென்றிருப்பான்... திடிரென்று பயந்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.. புதிதாக மதுபானக் கடை சுடுகாட்டின் வாசற் பகுதியில் திறக்கப்பட்டிருந்தது... அங்கேயும் மது வாங்க கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது...
அதை விட அதிர்ச்சியாக, மதுவை வாங்கியவர்கள் சுடுகட்டிலுள்ள காலி இடங்களில் உட்கார்ந்து குடித்து கொண்டிருந்தனர்...
"கனவு பலித்து விடுமோ" அச்சத்தில் பதறிப் போய் நின்றான் மணி...
கார்த்திக் பிரகாசம்...
தவறு/தகாதது என்று தெரிந்தே செய்யும் சமூகத்தின் மீது பரிதாபமும், தவறு என்று தெரிந்தும் அதை திருத்த தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபமும் தான் அது... அந்த பரிதாப உணர்வும், கோப உணர்ச்சியும் அவனை தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன..
அதுவும் காலையில் பத்து மணிக்கு, மதுபான கடையின் வாசலில் நின்றுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் நாட்டின் துரோகிகளாகவும், அரசின் தியாகிகளாகவும் கருதினான்... குடித்து விட்டு தெருவில் விழுந்து கிடப்பவனைப் பார்க்கும் போது, அவன் குழந்தை எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறதோ என்று எண்ணி அஞ்சுவான்.. காலை வெயிலில் மது வாங்க வரிசையில் நிற்பவனைக் கண்டால், அவன் தாய் தள்ளாத வயதிலும் ரேஷன் கடையில் அரிசி வாங்க, முழங்கால் வலியில் தள்ளாடுவதாய் நினைத்து கண்ணீர் சிந்துவான்... மது அருந்திய ஒருவன் சாலையில் போதையில் தூங்குவதைப் பார்த்தால், அவன் குடும்பம் அங்கு பட்டினியில் தூங்காமல் தவிப்பதாய் நினைத்து இவன் தவிப்பான்...
மணிக்கு கிரக, ஜாதகங்களில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் "மது தான் நாட்டை நாசமாக்கும் சனி" என்று உறுதியாக நம்பினான்... ஆனால் தன்னால் எதிர்த்து போராடும் போராளியாகவும் இருக்க முடியாமல், ஏத்துகிட்டு வாழும் ஏமாளியாகவும் இருக்க முடியாமல், நடுவில் கோபத்துடன் கூடிவாழும் கோமாளியாக இருப்பதை நினைத்து நடுராத்திரியிலும் எழுந்து கண்ணீர் விடுவான்...
அன்றும் தனது வழக்கமான மனப் புலம்பல்களுடன் உறங்கச் சென்றான்.... குடித்து குடித்து ஊரே அழிந்து சுடுகாடாய் இருப்பது போல் கனவு வந்தது...
மணி பயந்துப் போய் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தான்.. அதன் பின் அவனுக்குக் கொஞ்ச நஞ்சத் தூக்கமும் இல்லாமல் போயிற்று...
காலையில் வழக்கம் போல எழுந்து வேலைக்குச் சென்றான்.. அதிசயமாக மதுபானக் கடையில் யாருமே இல்லை... ஆச்சரியத்தில் சந்தோஷம் அடைந்தான்... அருகில் போய் பார்த்த அவனுக்கு பேரின்பமாய் இருந்தது... அரசு அதிகாரிகள் அந்த மதுபானக் கடையை காலி செய்து கொண்டிருந்தனர்...
அந்த அதிகாரி,கடை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாக அங்கிருந்த சில "குடி"மகன்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்... நிரந்தரமாக கடை அகற்றப்பட்டதாக எண்ணிய அவனின் சந்தோசத்தில் கல் விழுந்தது... இருந்தாலும் இப்போதைக்குக் கண் முன்னே இருந்து அகற்றபட்டதே என்று எண்ணி நிம்மதி பெருமுச்சு விட்டுவிட்டு அலுவலகத்திற்கு நடந்தான்...
எப்போதும் அவன் அந்த சுடுகாட்டின் வழியாகத் தான் நடந்து செல்வான்.. அது தான் அலுவலகத்திற்குப் பக்கம் அவனுக்கு... அன்றும் அதே வழியாக சந்தோசமாக நடத்து கொண்டிருந்தான்...
சிறிது தூரம் தான் சென்றிருப்பான்... திடிரென்று பயந்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.. புதிதாக மதுபானக் கடை சுடுகாட்டின் வாசற் பகுதியில் திறக்கப்பட்டிருந்தது... அங்கேயும் மது வாங்க கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது...
அதை விட அதிர்ச்சியாக, மதுவை வாங்கியவர்கள் சுடுகட்டிலுள்ள காலி இடங்களில் உட்கார்ந்து குடித்து கொண்டிருந்தனர்...
"கனவு பலித்து விடுமோ" அச்சத்தில் பதறிப் போய் நின்றான் மணி...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment